தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சினிமா டிக்கெட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலங்களில் உள்ள தியேட்டர்கள் மார்ச் 16ஆம் தேதி முதல் மூடப்பட்டன.
ஆனால் சென்னை சிட்டியில் உள்ள தியேட்டர்கள் மட்டும் பழைய ஹிட்டான படங்களையும் மற்ற மொழி படங்களையும் திரையிட்டு வந்தன.
இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் ஸ்டிரைக் கைவிடப்பட்டு தியேட்டர்கள் இயங்கி வருகின்றன.
ஆனால் தற்போதும் புதிய படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
இந்நிலையில் புதுவையில் உள்ள தியேட்டர்கள் தொடர்ந்து மூடப்பட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
புதுச்சேரி அரசு சார்பில் விதிக்கப்படும் 25 சதவீத கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுவையில் இந்த போராட்டம் நீடித்து வந்தது.
இந்நிலையில் தியேட்டர் உரிமையாளர்களில் ஒரு தரப்பினர் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது கேளிக்கை வரியை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கேளிக்கை வரியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 30-ந்தேதி நாளை முதல் தியேட்டர்களை திறக்க உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.