தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழகத்தில் 2021 புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எந்தவித தடையும் இல்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விவரம் வருமாறு…
புதுச்சேரி மாநில இயற்கை பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டம் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
“கிறிஸ்துமஸ் விழாக்கள் வழக்கம் போல் நடத்தப்படும். இரவு நேரங்களில் கிறிஸ்தவ சமயத்தினர் பிரார்த்தனை செய்ய எந்தவித தடையும் கிடையாது.
பொங்கல் விழாக்களில் மக்கள் முறையாக கொண்டாடலாம்.
புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை விதிமுறைகளை கடைபிடித்து ஹோட்டல்களில் 200 பேர்கள் இருக்கலாம்.
புதுச்சேரி புத்தாண்டு அன்று கடற்கரையில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முகக் கவசங்களை அணிந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடலாம்.
அதற்கு யாரும் தடைவிதிக்க முடியாது. தடை விதிப்பதற்கு யாருக்கும் அதிகாரமில்லை.
இந்த இரண்டு விதிமுறைகள் காவல் துறையினர் முறையாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,” என்றார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
Pondicherry government allowed new year celebrations with some guideline