தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்தியா முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டன.
6 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் புதிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
பல வணிகங்களுங்கு சில தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டாலும் தியேட்டர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை.
அதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.
மேலும் சினிமா தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள், அதனை சார்ந்த அனைவரும் பெரிய பொருளாதார இழப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் அக்டோபர் 15-ம் தேதி முதல் நாடு முழுவதும் தியேட்டர்களை திறக்கலாம் என வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.
ஆனால் தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை.
ஆனால் புதுச்சேரியில் அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
புதுவை சண்முகா திரையரங்கம் ரூ.120க்கு விலையுடைய டிக்கெட் ரூ.100.க்கும், ரூ.100 ரூபாய்க்கான டிக்கெட் ரூ.75.க்கும் விற்கப்படும் என அறிவித்துள்ளது.
அதேபோல் சைக்கிள், பைக், கார் பார்க்கிங் கட்டணமும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும் படம் பார்க்க வருவோருக்கு இலவசமாக மாஸ்க் வழங்கப்படும் என்று அந்த தியேட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Pondicherry allows opening of theatres