தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சூர்யா தயாரித்து நடிக்க ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.
பலரின் பாராட்டை இந்த படம் பெற்றாலும் வன்னியர் சமுதாயத்தை அவமதிப்பு செய்துள்ளதாக சூர்யா மீதும் படக்குழுவினரும் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
முன்னாள் மத்திய அமைச்சர் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து 9 கேள்விகளை கேட்டு இருந்தார்.
நடிகர் சூர்யாவும் இதற்கு பதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பதை நம் தளத்தில் விரிவாக பார்த்தோம்.
இந்த நிலையில் நடிகர் சூர்யாவை கண்டால் அவரை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.
மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.
’சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ படம் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது. சில கதாபாத்திரங்களுக்கு உண்மை பெயரை சூட்டி விட்டு காடுவெட்டி குரு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வில்லனுக்கு அவரது பெயரை வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார் பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி.
பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறமிருக்க மறுபுறம் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.
நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் நஷ்டஈடு தொகையை கொடுக்கவேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
Political party PMK announces Rs 1 lakh reward for attacking Surya