தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
எனவே தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையொட்டி தேர்தல் பிரச்சாரத்திற்காக நாளை (30/03/2021) மாலை 04.30 மணியளவில் புதுச்சேரிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.
அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரச்சாரம் செய்யவுள்ளார்.
இந்த கூட்டத்துக்காக புதுச்சேரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழா இடத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு நடைமுறைப் படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி நகரில் நாளை ட்ரோன்கள் உள்ளிட்டவை பறக்கவும் தடை.
இந்த 144 தடை உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆட்சியர்.
இதனையடுத்து பிற்பகல் தாராபுரத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் அங்கும் தன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரிக்கு மோடி வரும்போது 144 தடை என்றால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்.? கூட்டம் வேண்டாம் என நினைக்கிறார்களா? என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.
PM Modi address election rally in Puducherry 144 imposed