தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் வியாபார நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர கொண்டாடப்பம உள்ளது.
இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மூத்த குடிமக்களின் வயது மூப்பைக் கருத்தில்கொண்டும், கொரோனா நோய் தடுக்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் பத்து சுதந்திரத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.
காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.
மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக மக்கள் செய்தி தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.