சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்கள் மூத்த குடிமக்களுக்கு தடை

சுதந்திர தின விழாவில் பங்கேற்க மாணவர்கள் மூத்த குடிமக்களுக்கு தடை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

independence day celebration in schoolகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. சில வணிக நிறுவனங்களுக்கு தளர்வுகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் வியாபார நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர கொண்டாடப்பம உள்ளது.

இந்த நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டையில் நடைபெறும் விழாவை காண பொதுமக்கள், மாணவர்கள், மூத்த குடிமக்கள் நேரில் வரவேண்டாம் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மூத்த குடிமக்களின் வயது மூப்பைக் கருத்தில்கொண்டும், கொரோனா நோய் தடுக்கும் விதமாகவும் மாவட்டந்தோறும் பத்து சுதந்திரத் தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பொன்னாடை போர்த்தி மரியாதை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளார்.

காலை 8.45 மணிக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.

மேலும் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக, அவர்களுக்கு முதல்வர் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்க உள்ளதாக மக்கள் செய்தி தொடர்புத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.?

சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸை இயக்கும் கார்த்திக் நரேன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

karthick narenதுருவங்கள் 16 மற்றும் மாஃபியா படத்தை அடுத்து தனுஷ் நடிக்கவுள்ள படத்தை இயக்கவுள்ளார் கார்த்திக் நரேன்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கொரோனா பிரச்சினை தீர்ந்த பிறகு இப்பட சூட்டிங் தொடங்கும்.

இந்நிலையில் லாக்டவுனில் வீட்டில் இருக்கும் இயக்குநர் கார்த்திக் நரேன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார்.

அப்போது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்…

கமல் படங்களில் ‘விருமாண்டி’ மிகவும் பிடித்த திரைப்படம் என்றார்.

மேலும் விரைவில் சயின்ஸ் பிக்சன் வெப் சீரிஸ் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இவர் இயக்கிய நரகாசூரன் படம் எப்போது ரிலீஸ் என்று கேட்டதற்கு… நாட்டாமை படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடியில் மிக்சர் சாப்பிடும் கேரக்டரின் போட்டோவை பதிவிட்டுள்ளார்.

பாகுபலி இயக்குனருக்கு கொரோனா நெகட்டிவ்..; பிளாஸ்மா தானம் ப்ளான்

பாகுபலி இயக்குனருக்கு கொரோனா நெகட்டிவ்..; பிளாஸ்மா தானம் ப்ளான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajamouliபாகுபலி 2 படத்தை முடித்துவிட்டு ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடிக்கும் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’ (RRR) படத்தை இயக்கி வருகிறார் ராஜமௌலி.

இந்த நிலையில் ராஜமவுலி குடும்பத்தினருக்கு கடந்த ஜூலை 29 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

எனவே குடும்பத்தினருடன் ராஜமௌலி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

தற்போது 14 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு அவர்களது பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என உறுதியானது.

இது குறித்து ராஜமௌலி கூறியுள்ளதாவது..

“2 வார தனிமையில் இருந்தேன். பரிசோதனை செய்து பார்த்ததில் எங்கள் அனைவருக்கும் தொற்று இல்லை.

பிளாஸ்மா தானம் செய்யத் தேவையான ஆண்டிபாடிக்கள் எங்கள் உடலில் உருவாகியுள்ளதா? என்பதை தெரிந்துக் கொள்ள டாக்டர்கள் எங்களை 3 வாரங்கள் காத்திருக்கச் சொல்லியுள்ளனர்” என பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ டீஸர்

ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‘குட்லக் சகி’ டீஸர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

GLS teaserகீர்த்தி சுரேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும், பெண்களை மையப்படுத்திய திரைப்படம் குட்லக் சகி. இணை தயாரிப்பாளர் ஷ்ராவ்யா வர்மா வழிநடத்த, முழுக்க பெண்கள் நிறைந்த குழு என்ற பெருமை இந்தத் திரைப்படத்துக்கு இருக்கிறது.

நாகேஷ் குக்குனூர் இயக்கத்தில், குட்லக் சகி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு வழங்கும் இந்தத் திரைப்படத்தை வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ் பேனர் நிறுவனத்தின் கீழ் சுதீர் சந்திர பதிரி தயாரித்துள்ளார்.

ஆகஸ்ட் 15-ம் தேதி காலை பத்து மணிக்கு படத்தின் டீஸர் சுதந்திர தின விசேஷ வெளியீடாக வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். உற்சாகமாக நடனமாடும் கிராமத்துப் பெண்ணாக கீர்த்தி சுரேஷ் போஸ்டரில் தோற்றமளிக்கிறார்.

விளையாட்டு, காதல், நகைச்சுவைப் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஆதி பினிஷெட்டி மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் துப்பாக்கிச் சூடு வீராங்கனையாக நடிக்கிறார்.

ராக் ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் படத்துக்கு இசையமைக்க சிரந்தன் தாஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதம் இருக்க, படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வேலைகள் முடிந்துவிட்டன. இறுதிகட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், ஆதி பினிஷெட்டி, ஜகபதி பாபு மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு
இயக்குநர்: நாகேஷ் குக்குனூர்.
வழங்குவது: தில் ராஜூ (ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ்)
தயாரிப்பு நிறுவனம்: வொர்த் எ ஷாட் மோஷன் ஆர்ட்ஸ்
தயாரிப்பாளர்: சுதீர் சந்திரா பதிரி
இணை தயாரிப்பாளர்: ஷ்ராவ்யா வர்மா
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவாளர்: சிரந்தன் தாஸ்

சூரரைப் போற்று படத்தில் 12 வசனங்களுக்கு மியூட் போட்ட சென்சார்

சூரரைப் போற்று படத்தில் 12 வசனங்களுக்கு மியூட் போட்ட சென்சார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

soorarai pottruசுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள படம் சூரரைப் போற்று.

சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராப், ஊர்வசி, மோகன்பாபு உள்ளிட்ட பலர் நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

ஆனால் படத்தில் 12 இடத்தில் சில வசனங்களை நீக்க சொல்லியுள்ளனர்.

அல்லது வசனத்தை மியூட் போட சொல்லியுள்ளனர். அதன்பின்னரே யு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாம்.

கொரோனா ஊரடங்கு பிரச்சினைக்கு பின்னர் இந்த படத்தை தியேட்டரில் வெளியிட சூர்யா தரப்பு முடிவு எடுத்துள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தை ஆன்லைனின் வெளியிட்டதால் சிவகுமார் குடும்ப படங்களை தியேட்டரில் வெளியிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளுக்கு பாடல் அர்ப்பணிப்பு..; ஷான் ரோல்டனின் ‘ஆக்கப் பிறந்தவளே’

மகளுக்கு பாடல் அர்ப்பணிப்பு..; ஷான் ரோல்டனின் ‘ஆக்கப் பிறந்தவளே’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aaka pirandhavaleஇசையமைப்பாளர் ஷான் ரோல்டன் சமீபத்தில் ஆக்கப் பிறந்தவளே என்ற பாடலை வெளியிட்டுள்ளார். இது நாம் உருவாவதற்கு காரணமான பெண்களைக் கொண்டாடுவதற்கும் ,நம் வாழ்வில் அவர்கள் ஒரு அச்சாணியாக இருப்பதைப் பாராட்டுவதற்குமான ஒரு பாடல் ஆகும்.

இந்தப் பாடலின் மையக் கருத்து இந்த உலகிற்கு உயிரை கொண்டுவரும் ஒரு பெண்ணுக்கும் இந்த உலகை ஆளும் உரிமை இல்லையா? எனக் கேள்வி எழுப்பும் விதமாக உள்ளது.

இந்தப் பாடல் உருவாவதற்கான காரணம் குறித்து பேசிய இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் “உலகம் பெண்களால் இயக்கப்படுவதை காண விரும்புகிறேன். இன்று நான் இந்த அளவில் இருப்பது ,என்னுடைய பயணம் என எல்லாமும் எனக்கு ஆதரவளித்த பெண்களால் வந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.இந்த பாடல் பெண்களுக்கு இன்னும் அவர்களுக்குரிய மேலான இடத்தை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகும் .

இந்தப் பாடலை எனது மகள் லீலாவுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன் இந்த பாடலின் உருவாக்கத்தில் அவள்தான் எனக்கு ஒரு உந்துசக்தியாக இருந்தாள். என் மகள் லீலாவுக்கு நன்றி” எனப் பெருமிதம் பொங்கப் பேசுகிறார் .

கடந்த 7 ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த பாடல் தற்போது அனைத்து ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கேட்கக்கூடிய வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஷான் ரோல்டன் தற்போது பல்வேறு ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டு வருகிறார். அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கு இணங்க ஒவ்வொரு மாதமும் ஒரு பாடலை வெளியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Attachments area

More Articles
Follows