தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பொது மக்கள் திரையரங்குகளில் அதிகளவில் கூடுவதால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டது.
கிட்டதட்ட 5 மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதனால் தியேட்டர் நிர்வாகிகளும் அதனை சார்ந்த வணிகங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.
எனவே திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கைகளை தமிழக அரசிடம் திரைத்துறை சங்கங்கள் வைத்தன.
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றும். கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறினார்.
மேலும் ஓடிடியில் திரைப்படம் வெளியாவதை தடுக்க சட்டம் கிடையாது. இதற்கு திரைத்துறையினர் தான் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No permission for reopen theaters in TN says Minister Kadambur Raju