தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மே மாதம் 7ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக என். ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.
ஆனால் இவரை தவிர எவருமே அமைச்சர்களாக பங்கேற்கவில்லை.
பாஜக துணை முதல்வர் & 2 அமைச்சர்கள் பதவி கேட்டதால் என்ஆர் காங் தரப்பில் அதிருப்தி நிலவியது.
இதனிடையில் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ரங்கசாமி.
இதனால் புதுச்சேரி அரசியலில் குழப்பமே நீடித்து வந்தது. கொரோனா சூழலில் கூட அரசு நிவாரணமோ நலத்திட்டமோ அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் ஒரு வழியாக 3 வாரங்களுக்கு பிறகு புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகரான லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனை தொடர்ந்து புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்கும் விழாவும் நடைபெற்றது.
சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது. வழக்கமாக சட்டசபையில்தான் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.
ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் எளிய முறையில் விழா நடந்தது.
முதல் நபராக முதலமைச்சர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்று செய்து கொண்டார்.
அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இவரை தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோடு மத்திய அரசால் (பாஜக) நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
எம்எல்ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.
எம்எல்ஏக்கள் பதவியேற்கும்போது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Newly elected Pondy MLA’s sworned