தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு மதுரையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.
திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூர் பகுதியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஏற்பாட்டின் பேரில் இந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது.
இந்த கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு தலா 400 கிலோ எடையில் முழு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நடைபெற்ற பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து, நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்து உணவளித்தனர்.
New Temple for Ex Chief Ministers MGR and Jayalalitha