தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரியும் தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று மவுன போராட்டம் நடைபெற்றது.
இதன் நிறைவாக முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை…
- மக்களின் அடிப்படை தேவைகளை பாதிக்கும் எந்த விஷயத்தையும் அரசு செய்யக்கூடாது.
- ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும்.
- அரசியலற்ற பொது நோக்கத்தில் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.
- திரையுலகினரின் கையெழுத்துக்களைப்பெற்று தீர்மானங்கள் ஆளுநரிடம் ஒப்படைக்கப்படும்.
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Nadigar Sangam protest for Cauvery Management Board and Sterlite Factory Issue