தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2020ல் நவம்பர் மாதம், பொதுத் தேர்தல் மியான்மர் நாட்டில் நடைபெற்றது.
மொத்தமுள்ள, 476 இடங்களில், 396 இடங்களைக் கைப்பற்றியது ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயக கட்சி.
இந்த நாட்டில் ராணுவ கட்சியாக கருதப்படும், ஒற்றுமை மற்றும் மேம்பாட்டுக் கட்சி, 33 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.
இதனால் மக்களே சற்று குழப்பத்தில் இருந்தனர்.
இந்த தேர்தல் முடிவில் மோசடி நடந்துள்ளதாக, ராணுவத்தினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
ஆனால் அதற்கான ஆதாரங்களை, அவர்களால் திரட்டி நிரூபிக்க முடியவில்லை.
இதனால் ராணுவத்தின் குற்றச்சாட்டுகளை, மியான்மர் தேர்தல் ஆணையம் நிராகரித்து விட்டது.
இந்த பரபரப்பான நிலையில், மியான்மர் அரசை, ராணுவம் அதிரடியாக கைப்பற்றியது.
இதனையடுத்து மியான்மரில் இணையதள சேவைகளுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பேண பிப்ரவரி 7ம் தேதி வரை பேஸ்புக் தடை செய்யப்படும்’ என அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Myanmar bans Facebook, temporarily