கதை ஆச்சரியம்.. க்ளைமாக்ஸ் ஏமாற்றம்.; இசையமைப்பாளர் சாம் சிஸ் வேதனை

கதை ஆச்சரியம்.. க்ளைமாக்ஸ் ஏமாற்றம்.; இசையமைப்பாளர் சாம் சிஸ் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் ஹிருது பாபி சிம்ஹா ஆர் கே சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் ‘தக்ஸ்’.

பிப்ரவரி 24ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது இசையமைப்பாளர் சாம் சிஎஸ் பேசுகையில்..

“இசை இயக்குநராக, நான் பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளேன், அந்தப்படங்களின் கதை கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கும், ஆனால் படத்தின் இறுதிப்பதிப்பு பார்க்கும்போது ஏமாற்றமாகிவிடுகிறது. எந்தத் திரையுலகிலும் இது சகஜம் தான்.

ஆனால் தகஸ் திரைப்படம் இதில் தனித்துவம் வாய்ந்தது. இதன் இறுதிப்பதிப்பு அருமையாக வந்துள்ளது. பிருந்தா மேடம் ஸ்கிரிப்டை விவரித்தபோதே கதை எனக்கு மிகவும் பிடித்தது. இப்போது முழுப்படமாக இன்னும் பிடித்துள்ளது.

அவர் இசை மற்றும் பாடல்களில் எந்த தலையீடும் செய்யவில்லை. அதே போல் எந்த சமரசமும் இல்லாமல், தான் சொன்னதைச் சரியாகப் படமாக்கியிருக்கிறார். கதை மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இரண்டும் இப்படத்தில் மிக நன்றாக வந்துள்ளது.

ஹிருது ஒரு புதுமுகம் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளார். அனைத்து நடிகர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இந்த படத்தின் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் ரியா ஷிபுக்கு நன்றி” என்றார்.

நடிகர் முனிஷ்காந்த் பேசுகையில்,

“இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பிருந்தா மாஸ்டர் மற்றும் தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. உறுதுணையாக இருந்த பாபி சிம்ஹா சார், தேனப்பன் சார், ஒளிப்பதிவாளர் பிரியேஷ் மற்றும் அனைவருக்கும் நன்றி. ஹிருது இந்தப் படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நடிகர் ஹிருது ஹாரூன் பேசுகையில்…

“இந்த வாய்ப்பை வழங்கிய பிருந்தா மேடத்திற்கு நன்றி. படத்தில் வசனங்கள் கம்மியாக உள்ளது, ஆனால் சாம் சிஎஸ் உடைய இசை நிறையப் பேசுகிறது. படம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். அனைவரும் இப்படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

Music director SAM CS speech at Thugs event

ரஜினி கண்கள் போல காந்த சக்தி.; THUGS ஹீரோ ஹிருது-க்கு பிருந்தா பாராட்டு

ரஜினி கண்கள் போல காந்த சக்தி.; THUGS ஹீரோ ஹிருது-க்கு பிருந்தா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

HR Pictures சார்பில் ரியா ஷிபு Jio Studios உடன் இணைந்து வழங்கும், நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில், க்ரைம்-ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கிறது “தக்ஸ்”.

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்.கே.சுரேஷ், முனிஷ்காந்த், அனஸ்வர ராஜன் மற்றும் பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள இப்படம் பிப்ரவரி 24, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்த நிகழ்வினில்..

இயக்குநர் பிருந்தா பேசுகையில்…

“ஒரு நல்ல படத்தை எடுக்க இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் ரியா ஷிபுவுக்கு நன்றி. ஆரம்பத்தில், ஷிபு தமீன்ஸ் அவரது மகன் ஹிருதுவை முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க முடியுமா என்று கேட்டபோது, எனக்குக் கொஞ்சம் தயக்கமாகச் சந்தேகமாகத் தான் இருந்தது.

ஆனால், அவருடைய நடிப்பைப் பார்த்த பிறகு, அவருக்கு ஒரு நல்ல திறமை இருப்பதையும், அவரது கண்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் போலவே சக்தி வாய்ந்தவை என்பதையும் என்னால் உணர முடிந்தது. அவர் ஒரு சிறந்த நடனக் கலைஞர், அவருக்குச் சிறந்த எதிர்காலம் உள்ளது.

இப்படத்தில் மிகச்சிறந்த பாடலையும், அட்டகாசமான பின்னணி இசையையும் தந்த சாம் சிஎஸ்க்கு நன்றி. படத்தின் மிகப்பெரும் பலமாக இருந்த எடிட்டர் பிரவீன் ஆண்டனிக்கு நன்றி.

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் படத்திற்கு அற்புதமான விஷுவல்ஸ் கொடுத்துள்ளார். பாபி சிம்ஹா முக்கிய பாத்திரத்தில் நல்ல நடிப்பைத் தந்துள்ளார். ஓய்வு நேரத்தில் கூட அவர் கேரவனுக்குள் நுழைய மாட்டார்.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே தான் எப்போதும் இருப்பார் அவரது ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி. ஆர்.கே. சுரேஷ் சார் மற்றும் முனிஷ்காந்த் இருவரும் படத்திற்கு பெரும் பலமாக இருந்தனர்.

இந்த நேரத்தில் உதவி இயக்குநர் ராமை நினைத்துக் கொள்கிறேன். அவர் இப்போது எங்களுடன் இல்லை, அவரது உழைப்பு படத்தில் இருக்கிறது. முழு திரைப்படத்தையும் அவருக்காக அர்ப்பணிக்கிறேன். அனைவருக்கும் நன்றி.

Magnetic power like Rajini’s eyes.; Brinda praises THUGS hero Hridhu

டெல்லி அழகியுடன் டூயட் பாட ரெடியாகும் கார்த்தி..

டெல்லி அழகியுடன் டூயட் பாட ரெடியாகும் கார்த்தி..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூது கவ்வும்’ , ‘காதலும் கடந்து போகும்’ புகழ் நலன் குமாரசாமி இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை கார்த்தி விரைவில் தொடங்கவுள்ளார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் இந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி ஆரம்பமாகவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் 26 வயதான காயத்ரி பரத்வாஜ் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாடலாக மாறிய நடிகை, பல அழகுப் போட்டிகளில் பங்கேற்று 2018 ஆம் ஆண்டு நடந்த மிஸ் இந்தியா டெல்லி போட்டியில் வென்றுள்ளார்.

காயத்ரி பரத்வாஜ் இந்தி வெப் சீரிஸ் ‘டிண்டோரா’வில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Karthi to romance a young beauty queen in his next movie?

‘காந்தாரா 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

‘காந்தாரா 2’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கிறாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் ரிஷப் ஷெட்டியை சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து அவரது பணியை பாராட்டி பெரிய தங்க செயினை பரிசாக வழங்கினார். மேலும் அவர் ட்விட்டரில், “ஒரு எழுத்தாளர், இயக்குனர் மற்றும் நடிகராக ரிஷப் உங்களுக்கு வாழ்த்துகள்.

ரிஷப் ஷெட்டி சமீபத்தில் ‘காந்தாரா 2’ படத்தைத் தயாரிக்கப் போவதாகவும், இது அசல் படத்தின் முன்னோடியாக இருக்கும் என்றும் அறிவித்தார்.

காந்தாரா 2 படத்தில் ரஜினி முக்கிய வேடத்தில் தெய்வமாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . இது குறித்து இயக்குனர் மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Superstar Rajinikanth to play a divine role in ‘Kantara 2’?

அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்

அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்கத்தால் அபிஷேகம் செய்த ரஜினிகாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ரஜினிகாந்தின் நிஜப்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

சிறு வயதிலேயே தன் அம்மா அப்பா இருவரையும் இழந்தவர் ரஜினி. இவரை அண்ணன் மற்றும் அண்ணி ஆகிய இருவருமே அன்பாக வளர்த்து வந்தனர்.

எனவே தன் அண்ணன் மீது மிகுந்த மரியாதையை இன்றுவரை வைத்திருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவரது அண்ணன் சத்யநாராயணா கர்நாடக மாநில அரசின் சுகாதாரத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

தனது 80வது பிறந்தநாளை பிப்ரவரி 19 கொண்டாடியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவரது மகன் ராமகிருஷ்ணாவும் அதே நாளில் தனது 60வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

எனவே 80வது பிறந்தநாள் கொண்டாடிய அண்ணன் சத்யநாராயணாவுக்கு தங்க காசுகளால் ரஜினி அபிஷேகம் செய்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த இரட்டை கொண்டாட்டங்களைக் குறித்து உணர்ச்சிவசப்பட்ட ட்வீட் செய்துள்ளார் ரஜினி.

அதில்… “என் சகோதரர் சத்தியநாராயண ராவ் கெய்க்வாட்டின் 80 வது பிறந்தநாளையும் அவரது மகன் ராமகிருஷ்ணாவின் 60 வது பிறந்தநாளையும் ஒரே நாளில் என் குடும்பத்துடன் கொண்டாடியதில் மகிழ்ச்சி. . என்னை நானாக மாற்றிய இந்த தங்க இதயத்தில் தங்கத்தை பொழிவதை பாக்கியமாக உணர்கிறேன். இன்று நான்.. கடவுளுக்கு நன்றி”

என பதிவிட்டிருந்தார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்

Rajini shares picture with his brother and tweet emotional

JUST IN நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..; டாக்டர்கள் அறிக்கை

JUST IN நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி..; டாக்டர்கள் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் இளைய திலகம் என்றால் அது நடிகர் பிரபு தான்.

100க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கேரக்டரில் நடித்து வருகிறார்.

பெரும்பாலும் முன்னணி நடிகர்கள் தனக்கு நிகரான மற்ற ஹீரோக்களின் படங்களை நடிப்பதை தவிர்ப்பர்.

ஆனால் எந்த ஈகோவும் இல்லாமல் தன் சக நடிகர்களுடன் நடித்து வருபவர் பிரபு.

ரஜினியுடன் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், கமலுடன் வெற்றி விழா, சத்யராஜுடன் சின்னத்தம்பி பெரியதம்பி மற்றும் விஜயகாந்த், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களுடனும் இவர் நடித்திருக்கிறார்.

இன்றைய தலைமுறை நடிகர்கள் விஜய், சூர்யா, விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலருடன் இவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபு உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து அவரது உடல் நலம் குறித்து மருத்துவமனை தரப்பில் ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில்…

21 பிப்ரவரி 2023

பத்திரிக்கை செய்தி

நடிகர் பிரபு மருத்துவமனையில் அனுமதி,

சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள மெட்வே மருத்துவமனையில், பிரபல திரைப்பட நடிகர் பிரபு நேற்று (20 பிப் 2023) இரவு சிறுநீரகப் பிரச்சினை காரணமாக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டு, இன்று காலை யூரித்ரோஸ்கோப்பி லேசர் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகக் கற்கள் அகற்றப்பட்டன.

அவர் தற்போது பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு பிந்தைய – பொதுவான மருத்துவ சோதனைகளுக்குப் பிறகு, ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார்.

மெட்வே மருத்துவமனைக் குழுவின் தலைவர்

மரு. பழநியப்பன்

ஊடகத் தொடர்பு : இராம்குமார் சிங்காரம், கேட்டலிஸ்ட்

பிரபு

Actor Prabu health statement is here

More Articles
Follows