தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த 7 மாதங்களாக இந்தியா முழுவதும் திரைஅரங்குகள் மூடப்பட்டது.
தற்போது வருகிற 15-ஆம் தேதி மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி,
ஒரு இருக்கை இடைவெளிவிட்டு பார்வையாளர்களை அமர செய்ய வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிந்த படியே தியேட்டருக்கு வந்து படம் பார்க்க அனுமதிக்க வேண்டும்.
50 சதவீத இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும்.
திரைப்படம் தொடங்குவதற்கு முன்பும், இடைவெளி முடிந்த பிறகும் கோவிட்-19 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டும்.
அனைத்து தியேட்டர்கள்/ சினிமா ஹால்கள்/ மல்டிபிளக்ஸ்களிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ள கோவிட்-19 வழிகாட்டுதல்களை மற்றும் நிலையான செயல்பாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும்.
திரையரங்குகளுக்கு உள்ளே 24 – 30 டிகிரி வெப்பநிலை நிலவுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
டிக்கெட் முன்பதிவு செய்வோரின் விவரங்களை கட்டாயம் சேகரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதன் பின்னணி மற்றும் தொடர்ச்சியை கண்டறிய உதவிகரமாக இருக்கும்.
தியேட்டர்களில் டிக்கெட் கவுன்ட்டர்கள் நாள் முழுவதும் திறந்திருக்க வேண்டும். இது கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், முன்பதிவு செய்வதற்கும் உதவியாக இருக்கும்.
திரையரங்கு உள்ளே உணவு, நொறுக்குத் தீனி விற்க தடை விதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு காட்சிக்குப் பிறகும் தியேட்டர்களில் கிருமி நாசினி தெளிக்க வேண்டும்.
உள்ளிட்ட பல வழிகாட்டுமுறைகளை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.
ஆனால் தமிழ்நாட்டில் தியேட்டர்கள் திறக்க இந்த மாதம் அக்டோபர் முழுவதும் அனுமதியில்லை. திறப்பதற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Movie Theatres can reopen with 50% seating from October 15