ரஜினி இல்லனா உங்கள தெரியாது..; ‘ரூபன்’ விழாவில் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய மோகன்.ஜி

ரஜினி இல்லனா உங்கள தெரியாது..; ‘ரூபன்’ விழாவில் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய மோகன்.ஜி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி இல்லனா உங்கள தெரியாது..; ‘ரூபன்’ விழாவில் ரஞ்சித்தை வெளுத்து வாங்கிய மோகன்.ஜி

*”ரூபன்”திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டுவிழா!*

ஏ கே ஆர் ஃபியூச்சர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஐயப்பன் இயக்கத்தில் (ஏப்ரல் -2024) 20 – ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவரவிற்கும் திரைப்படம் “ரூபன்” இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! படக்குழுவினர் கலந்து கொள்ள பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

*இந் நிகழ்வில் இயக்குனர் கணேஷ் பாபு பேசியது …*

அனைவருக்கும் வணக்கம் சாமி படங்கள் பார்த்து ரொம்ப நாள் ஆச்சி மீண்டும் இந்த மாதிரி ஒரு நல்ல படம் வருது அப்படிங்க போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இந்த படத்தை இயக்கிய ஐயப்பன் அவர்களுக்கும் மற்றும் பட குழுவினர் அனைவருக்கும் நன்றி.

மியூசிக் ரொம்ப நல்லா இருக்கு எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இந்த படம் இருக்கும் என்று நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

*இயக்குனர் மோகன் ஜி பேசியது …*

ரூபன் திரைப்பட குழுவினரை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைவருக்கும் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடவுள் சம்பந்த பட்ட படங்கள் குழந்தைகளை கூட்டிட்டு போய் திரையில் பாருங்க சப்போர்ட் பண்ணுங்க இயக்குனர்கள் அந்த மாதிரி படங்கள் திரும்ப பண்ண ஆரம்பிக்கணும்

எல்லா வகையான சினிமாக்களும் இங்க வந்து தமிழ் சினிமாவுல வரணும் மக்களுக்கு தேவையான கலையை பண்றது தான் எங்களுக்கு தெரிஞ்ச கிராஃப்ட் என்னோட படம் அரியலூர் பிரச்சினையை பேசும் விழுப்புரத்தில் கடலூரில் இருக்கிற பிரச்சினையை பேசும் அந்த மக்கள் எப்படி பாதிக்கப்பட்டு இருக்காங்கன்னு பேசும் விழுப்புரத்தில் இருக்கிற பெண்கள் காலேஜுக்கு போயிட்டு வந்து என்ன பிரச்சினை என்று பேசும் சேலத்தில் இருக்கிற பெண்களுக்கு வந்து ஆன்லைன்ல எந்த மாதிரியான பிரச்சனைகள் அவங்கள வந்து வறுமையில் பயன்படுத்தி உங்களை கொண்டு போறாங்கன்னு பேசுவோம் நாங்க..

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் நீங்கள் பேசும் அரசியல் சித்தாந்தம் ரஜினிக்கு புரிந்ததா என்று ஒருவரிடம் கேட்டிருந்தார்கள்.. அவர் (பா. ரஞ்சித்) சிரித்துக்கொண்டார்.. சாதாரண இயக்குனரான உங்களுக்கு ரஜினி படங்கள் கொடுத்து புகழடையச் செய்தார்.. ஆனால் அந்த நன்றி மறந்து சிரித்து கலாய்த்து கொண்டிருக்கிறீர்கள்.

உங்களது படங்கள் இப்படியே தொடருமானால் நான் இருக்கும் வரை உங்களுக்கு பதிலடி கொடுத்துக் கொண்டே இருப்பேன்..

இந்த ரூபன் திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் தேங்க்யூ.

*சிறு பட முதலீட்டு தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்புச்செல்வன் பேசியது…*

இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெரும் உண்மை இந்த படம் கில்லி படம் பாத்திருக்கீங்களா விஜய் படம் அந்த மாதிரி மியூசிக் பிரசாத் பண்ணி இருக்காரு.

ரொம்ப எமோஷனலா ரொம்ப நல்லா இருந்தது ட்ரெய்லர்

ஹீரோ வந்து ரொம்ப நல்லா பண்ணி இருந்தாரு சான்சே இல்ல

டைரக்டர் வேற லெவல் கேமரா மேன் எல்லாருமே ரொம்ப சூப்பரா பண்ணிருக்காங்க இந்தப் படத்தின் டீம் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் நன்றி.

*படத்தின் நாயகன் விஜய் பிரசாத் பேசியது …*

மீடியா நண்பர்களுக்கு வணக்கம்!இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஆறுமுகம் அண்ணன் கார்த்தி அண்ணா ராஜா அண்ணா அவர்களுக்கு நான் ரொம்ப நன்றி சொல்லிக்கிறேன். இந்த படத்திற்கு ஐயப்பன் சார நான் பர்ஸ்ட் பர்ஸ்ட் கரூர்ல தான் மீட் பண்ணி கதை சொல்லி முடிச்சிட்டாரு இவங்க பஸ்ட் பேனர் இந்த படத்துல பண்றது நாங்க ஐயப்பன் படம் தான் பண்ணுவோம். எங்களுக்கு அந்த பேட்டன்ல சொல்லுங்கன்னு சொல்லி முடிச்சிட்டாரு.

அதுக்கப்புறம் யாரை வைத்து ஹீரோ பண்றீங்கன்னு கேட்டாங்க அப்ப ஐயப்பன் சார் தம்பி ஒருத்தன் இருக்கான் சொன்னாரு உடனே ஓகே அவனை வச்சு பண்ணுங்க சொல்லிட்டாரு

ஐயப்பன் சாருக்கு ரொம்ப தேங்க்ஸ் இந்த படம் நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணினோம் தர்மபுரி மாவட்டம் வத்தல்மலை என்ற ஒரு வில்லேஜ் தான் பண்ணுனோம்

சூட்டிங் போயிட்டு இருக்கும்போது ஒரு திடீர்னு யானை வந்துடுச்சு அப்பதான் ஊர் ஜனங்கள் எல்லாம் சொன்னாங்க அந்த இடத்தை விட்டு கிளம்புங்கன்னு

அப்ப எதுர்ல ஒரு பைக்ல வந்து ஒரு இடத்துல நிக்க சொல்லிட்டு எல்லா வண்டியும் வந்த பிறகுதான் அனுப்புனாங்க நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணனும் இந்த படத்துல நானும் மரம் ஏறி இருக்கேன்.

கேமரா மேன் சார் ஐயப்பன் சார் என் கூடவே வந்து எப்படி பண்ணனும்னு சொல்லி எல்லாமே பண்ணி காட்டினாங்க பண்ணாங்க

இந்த மாதிரி பல வெற்றி படங்களை கொடுக்கணும் என்ன மாதிரி நியூ பேஸ் ஹீரோக்களை வளர்த்து விடனும்னு கேட்டுக்குறேன் மீடியா நண்பர்கள் இந்த படத்தை நல்ல விதமா எடுத்துட்டு போய் சப்போர்ட் பண்ணி இந்த படத்தை வெற்றி படமா மாத்தணும் நான் எட்டு வருஷமா கஷ்டப்பட்டு இந்த படத்துல வாய்ப்பு கிடைத்து நடிச்சிருக்கேன் ஆக்சன் பேக்லாம் பண்ணி இருக்கேன்.

நீங்க எல்லாம் எனக்கு சப்போர்ட் பண்ணனும் நன்றி வணக்கம்.

*படத்தின் நாயகி காயத்ரி பேசியது …*

அனைவருக்கும் வணக்கம்..
ஆன்மீக சப்ஜெக்ட் அப்படின்னு ஐயப்பன் சார் சொன்னப்ப இந்த ஒரு காட்சி இருக்கும் என்று நான் எதிர்பார்த்தேன் ஆனா அந்த மாதிரி எதுவுமே இல்ல

கொஞ்சம் ரொம்ப ரொம்ப டேஞ்சரஸ் ஆன சீன்ஸ் கிராமத்துக்குள்ளேயேதான் நாங்க ஷூட் பண்ணுவோம். சோ அந்த வகையில என்ன சேபா பாத்துக்கிட்டாங்க.

டிரஸ் சேஞ்ச் பண்றதுக்கு கூட போன டோரிலே நிறுத்தி கேட்பாங்க நீங்க என்ன ஜாதி இல்லல்ல இங்க எல்லாம் டிரஸ் சேஞ்ச் பண்ண கூடாது நீங்க அங்க போங்க அப்படின்னு மேக்கப் அண்ணா தேங்க்யூ அவர் வந்து அந்த வீட்ல செய்யும் அதே ஜாதிங்கிறதினால அவர் பேசி சொன்னாரு என் தங்கச்சி தான் பா கொஞ்சம் ரெஸ்ட் ரூம் மட்டும் யூஸ் பண்ண விடுப்பா.

கொஞ்சம் உட்காரட்டும் 15 நிமிஷம் அப்படின்னு சொல்லி அங்க தான் அப்படித்தான் டிரஸ் சேஞ்ச் எல்லாம் பண்ணும் சோ அந்த அளவுக்கு நாங்க போராடி இருக்கோம் ஒரு வீட்ல கூட ஒரு சப்போர்ட் பண்ண மாட்டாங்க அந்த அளவுக்கு நாங்க போராடனும்.

இதுல ஒரு செயின்ல வந்து நான் ஊர ஒருத்தவங்களோட கதைல போய் தட்டி தட்டி கேட்பேன் அய்யோ என்னோட புருஷன பாத்தீங்களா புருஷனை பார்த்தீர்களா அப்படின்னு அந்த சீன்ல அவங்க அலோ பண்ண மாட்டோம் என்ற அளவுக்கு வந்துட்டாங்க இல்ல அங்க போகக்கூடாது இங்க போகக்கூடாது இங்க தொடக்கூடாது என்ற மாதிரி மஞ்சள் எல்லாம் தெளிச்சு விட்டாங்க ரொம்ப கஷ்டமா இருந்தது அவளை கஷ்டப்பட்டு அந்த கிராமத்துல அந்த காட்டுல நாங்க நடிச்சிருக்கோம் ரொம்ப நன்றி சார்
நன்றி சார்.

*படத்தின் இயக்குனர் ஐயப்பன் பேசியது …*

வாழ்த்த வந்திருந்த நிறைய இயக்குனர்கள் பெரியவங்க சார்லி சார் என பேசும்போது என்ன பேசுறதுன்னு தெரியாம போச்சு அவ்ளோ எனக்கு புடிச்ச ஒரு ரொம்ப ரொம்ப நான் நேசிச்ச என்ன நிறைய டி ஆர் சார் படங்கள் எல்லாம் நான் அவரை ரொம்ப ரசிக்க கூடிய ஒரு கேரக்டர் அதனால அந்த மாதிரி இடங்கள்ல நிறைய பேர் அந்த மாதிரி அதே மாதிரி டாடா டைரக்டர் மோகன்ஜிசார் எல்லாரையுமே நிறைய பேசணும் ரொம்ப நன்றி

இந்த படம் கண்டிப்பா ஒரு கமர்சியல் கலந்து படமா இருக்கும் இது ஒரு சாமி படம் என்று எல்லாரும் பதிவு பண்றதால கண்டிப்பா இது அப்படி கிடையாது நீங்க சமீபத்துல காந்தாரா? அனுமான் போன்ற படங்கள் வரிசையில் கண்டிப்பா இந்த படம் இடம் பிடிக்கும் ரொம்ப நல்ல கமர்சியல் ஓட இந்த படத்தை ஒரு தெய்வீகமா நாங்க எடுத்திருக்கோம். இந்த தயாரிப்பாளர்கள் ரொம்ப ரொம்ப எங்களுக்கு சப்போர்ட் பண்ண விதம் பெரிய விஷயம்.ஒரு பெரிய சேலஞ்ச் என்னன்னா சினிமாவுல ஒரு சின்ன பட்ஜெட் குடுத்துட்டு அதுல ஒரு பெரிய விஷுவல் காட்டறது என்பது ஒரு சவாலான விஷயம் நான் அந்த பெரிய விஷுவல் பண்றதுக்கு நான் படிச்ச நாவல் எனக்கு என்ன சொல்றேன் கேமரா மட்டும் குடு எனக்கு அது போதும் அப்படி எல்லா இடத்திலும் சொல்லுவாங்க ஏன்னா அது ஒன்னு தான் நான் பேசுற ஆயுதமா எல்லா இடத்திலும் பார்க்கப்படுது அதனால் அந்த ஆயிதத்தை என்கிட்ட கொடுத்துட்டாங்க நான் ஓடிட்டே இருந்தேன் அதனால இந்த ப்ரொடியூசர்க்கு ரொம்ப நன்றி.

வந்திருந்த எல்லாருக்கும் நன்றி தேங்க்யூஅனைவருக்கும் இனிய மாலை வணக்கம் இந்த இனிய வாய்ப்பினை நழுவிய ஏ கே ஆர் பி எஸ் பிலிம்ஸ் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

*நடிகர் சார்லி பேசியது …*

அருகில் வீற்றிருக்கும் அத்தனை பெரியவர்களுக்கும் அடியினுடைய பணிவான வணக்கங்கள்.

நான் மிகைப்படுத்தி சொல்லல ரொம்ப யதார்த்தமான ஒரு உண்மையை சொல்றேன் எனக்கு பர்சனலா எத்தனை முறை கடல் அலைகளை பக்கத்தில் இருந்து பார்த்தாலும் திகட்டவே திகட்டாது எப்பொழுதுமே எனக்கு அது மகிழ்ச்சி. பெரிய மலை அடிவாரத்தில் நின்னுகிட்டு வியாதித்து இருக்கும் உயர்ந்து நிற்கும் அந்த மலையை எப்பொழுது பார்த்தாலும் எனக்கு அனுப்பவே தோன்றாது அது ரொம்ப ரசிச்சு பார்த்துகிட்டே இருப்பேன் அது திரும்பத் திரும்ப எத்தனை முறை சந்தித்தாலும் உற்சாகத்தை கொடுக்கக் கூடியது இப்படி அடிக்கடி நினைத்த மாத்திரத்தில் பார்த்த மாத்திரத்தில் உற்சாகத்தை கொடுப்பது எனக்கு பர்சனலா நிறைய விஷயங்கள் இருந்தாலும் அவற்றுள் மிக முக்கியமான ஒன்று கடந்த 42 ஆண்டுகளுக்கு மேலாக என்னுடைய திரை பயணத்தில் என்னுடன் ஒன்றாய் கலந்து பணியாற்றும் என் ஊடக நண்பர்களுக்கு எத்தனை முறை பார்த்தாலும் நான் மிகவும் மகிழ்ச்சியின்றேன் உங்கள் அனைவரையும் வருக வருக என்று வரவேற்கின்றேன்.

இது சின்ன படம் அது பெரிய படம் அப்படிங்கற பாகுபாடு வந்து எடுக்கக்கூடிய படத்திலையோ போடக்கூடிய பட்ஜெட்லயோ கிடையாது படம் வெளியிட்டுருக்கு பிறகு மக்கள் எப்படி ரசிக்கிறாங்க இது எந்த அளவிற்கு வரவேற்பை பெறுகிறது அதை பொறுத்து தான் அந்த படம் பெரிய படமாக கருதப்படுகிறது அந்த விதத்தில் ரூபன் படம் மிகப்பெரிய வெற்றி படம்

ரூபன் படம் எனக்கு நிறைய என்னுடைய பர்சனலா நிறைய விஷயங்களை அலசி ஒரு உட்படுத்திக் கொண்ட படம்.

இந்த ஐயப்பன் படைப்பாளி தலைசிறந்த இயக்குனர் மிகப் பிரமாதமான இயக்குனதாகில் சாதிக்கக்கூடிய மிகப்பெரிய சாதனைக்குரிய இயக்குனர் சில இயக்குனர்கள் என்னுடைய என்னை நேசிக்கும் நான் நேசிக்கும் எங்க டைரக்டர் பாசில் சார் ஒரு தடவை சொன்னாரு நீ நடந்து வந்து இதை இப்படி செய்யணும் அப்படின்னு நான் சீன் சொல்லிட்டேன் நீ எப்படி செய்றியோ அதுக்கு ஏத்த மாதிரி வைக்க போறேன் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் ஆனால் இந்த டைரக்டர் ஐயப்பன் சார் எப்படின்னா நிறைய எடுத்துட்டு வரமா அதை மட்டுமே எடுக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற ஆற்றல்மிக்க இயக்குனர் ஐயப்பன்.

அது மட்டுமல்லாமல் எங்க படக்குழுவினர் அத்தனை பேரையும் அந்த இறைவன் ஐயப்பனும் இறையருளும் என்றென்றும் காத்து இந்த ரூபன் திரைப்படம் வெற்றி வெற்றி என்று பறைசாற்றும் நிச்சயமாக உறுதி அனைவருக்கும் நன்றி வணக்கம்..

Mohan G condemns Ranjith for Insulting Rajini at Ruban event

வீர தீர சூரன்..: ‘சியான்’ படத்திற்கு ‘சித்தா’ இயக்குனர் வைத்த மாஸ் டைட்டில்

வீர தீர சூரன்..: ‘சியான்’ படத்திற்கு ‘சித்தா’ இயக்குனர் வைத்த மாஸ் டைட்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வீர தீர சூரன்..: ‘சியான்’ படத்திற்கு ‘சித்தா’ இயக்குனர் வைத்த மாஸ் டைட்டில்

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளித்த சியான் விக்ரம்.

*’சியான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வீர தீர “சூரன்”!*

‘சியான்’ விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படத்திற்கு வீர தீர “சூரன்” என பெயரிடப்பட்டிருக்கிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கான சிறப்பு காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிப்பில் தயாராகும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் காணொளி ஆகியவை வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் இரட்டை விருந்து கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்திருகிறார்கள்.

இயக்குநர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவாகும் வீர தீர “சூரன்” எனும் திரைப்படத்தில் சியான் விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெயினராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

சியான் விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் இப்படத்தின் தகவல்களை தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்திய படக்குழு.., தற்போது படத்தின் நாயகனான சியான் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு, வீர தீர “சூரன்” எனும் படத்தின் டைட்டிலையும், இந்த படத்தில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் காளி எனும் கதாப்பாத்திரத்திற்கான சிறப்பு காணொளியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

மூன்று நிமிடங்கள் கொண்ட இந்த காணொளியில் சியான் விக்ரமின் திரைத் தோற்றம்… அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் இந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Veera Dheera Sooran title for Chiyaan 62 movie

கிரிக்கெட்டை விட ஃபுட்பால் தான்.; வீரர்களுக்காக ஐசரி கணேஷ் செய்த ஆச்சரிய செயல்

கிரிக்கெட்டை விட ஃபுட்பால் தான்.; வீரர்களுக்காக ஐசரி கணேஷ் செய்த ஆச்சரிய செயல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கிரிக்கெட்டை விட ஃபுட்பால் தான்.; கால்பந்து வீரர்களுக்காக ஐசரி கணேஷ் செய்த ஆச்சரிய செயல்

*ஸ்பெயின் நாட்டு கால்பந்து வீரரை பயிற்சியாளராக நியமித்துள்ளது வேல்ஸ் ஃபுட்பால் கிளப்..

வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர்.

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவராக உள்ள டாக்டர் ஐசரி.கே.கணேஷ், விளையாட்டு வீரர்களை கண்டறிந்து அவர்களின் திறமைகளை வளர்ப்பதற்காக தொடர்ந்து பயணித்து வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக டாக்டர் ஐசரி கே கணேஷின் சிந்தனையில் உருவானது தான் வேல்ஸ் கால்பந்து கிளப். இந்த கிளப் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை வளர்ப்பதற்காக தொடங்கப்பட்டது.

தற்போது இந்த கிளப் கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் கொண்டுள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஒரு முன்னோடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்ஸ் குழுமங்களின் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி.கே கணேஷ்…

“கிரிக்கெட் உலகின் முதன்மையான விளையாட்டு கிடையாது. கால்பந்து தான் முதன்மையான விளையாட்டு. கிரிக்கெட் ஒரு சில இடங்களில் மட்டும் தான் விளையாடப்பட்டு வருகிறது, ஃபுட்பாலோ உலகம் முழுவதும் விளையாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் நம்மால் கால்பந்து விளையாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.

அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன. இதையெல்லாம் நன்கு கவனித்த நான் தமிழ்நாட்டில் கால்பந்து விளையாட்டை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பை தொடங்கினேன்.

இந்த கிளப் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச பயிற்சிகளை வழங்கும். அவர்கள் தங்கி பயிற்சி மேற்கொள்ள வசதியாக அவர்களுக்கு ஒரு தங்குமிடமும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குக்கிராமங்களில் உள்ள ஃபுட்பால் மீது ஆர்வம் கொண்ட வசதியில்லாத பல மாணவர்கள் இருப்பார்கள். அவர்களை, கண்டெடுத்து வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பில் ஆட வைத்து இந்திய அணிக்கு அனுப்புவதுதான் எங்கள் நோக்கம்.

இவர்களுக்கு சர்வதேச அளவிலான பயிற்சிகள் வழங்கப்படும் என்பதை இங்கு பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் அதற்காக தான் ஸ்பெயின் கால்பந்து வீரர் கெய்ஸ்கா டோகேரோவை, வேல்ஸ் ஃபுட்பால் கிளப்பின் சர்வதேச தூதராக நியமித்துள்ளோம். தமிழ்நாடு, தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம் அதற்கு கெய்ஸ்கா நமக்கு உதவுவார் என நம்புகிறேன்.

இந்த வருடம் நடக்க இருக்கும் ஐ-லீக்கில் வேல்ஸ் ஃப்சி மாணவர்கள் நிச்சயம் நல்ல இடம் பிடிப்பார்கள் என எனக்கு தெரியும். நல்ல நோக்கம் நிச்சயம் வெற்றி பெற செய்தியாளர்கள் இந்த செய்தியை தமிழ்நாட்டின் மூலை முடுக்கு வரை சென்று சேர்க்க வேண்டும்”.
அதேபோல முன்னணி விளையாட்டு ஆடை பிராண்டான PUMA, வேல்ஸ் கால்பந்து கிளப்புடன் கூட்டு சேர்ந்து முதல் அணிக்கான ஜெர்சிகளை ஸ்பான்சர் செய்கிறது. இதற்காக பூமாவின் தென் மண்டல தலைவர் .ரமேஷ் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஸ்பெயின் கால்பந்து வீரர் கெய்ஸ்கா டோகேரோ பேசியதாவது, “வேல்ஸ் நிறுவனத்தின் நல்ல நோக்கத்தை ஆதரிக்கவே நானும் எனது அணியும் இங்கு வந்துள்ளோம்.

மாணவர்களுக்கு சர்வதேச பயிற்சி அளிக்கும் வாய்ப்பு எனக்கு வழங்கப்பட்டதை நான் பெருமையாக கருதுகிறேன். எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்த சென்னைக்கும், வேல்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இங்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி!” என்றார்.

To encourage foot ball lovers Isari Ganesh started club

ரசிகர்களுக்கு ‘தங்கலான்’ விருந்து வைத்த படக்குழு.; சிலிர்க்கும் சியான் ரசிகர்கள்

ரசிகர்களுக்கு ‘தங்கலான்’ விருந்து வைத்த படக்குழு.; சிலிர்க்கும் சியான் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரசிகர்களுக்கு ‘தங்கலான்’ விருந்து வைத்த படக்குழு.; சிலிர்க்கும் சியான் ரசிகர்கள்

ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம்ஸ் இணைந்து சியான் விக்ரமின் பிறந்த நாளில், அவர் நடிப்பில் தயாராகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘தங்கலான்’ திரைப்படத்திலிருந்து முதல் காட்சி துணுக்கை (கிளிம்ப்ஸை) வெளியிடுகிறது.

இந்திய சினிமாவில் தனித்துவமான நடிகரான சியான் விக்ரம் நடிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான பா. ரஞ்சித் இயக்கத்தில், பிரம்மாண்டமான பட்ஜெட்டில் ‘தங்கலான்’ படத்தினை தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது.‌

படத்தின் வெளியீட்டிற்காக பெருகிவரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சியான் விக்ரமின் பிறந்த நாளான இன்று, ஏப்ரல் 17 அவரது ரசிகர்களுக்கு படக்குழுவினர் ஒரு சிறப்பான விருந்தை அளித்துள்ளனர். பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ‘தங்கலான்’ திரைப்படத்தின் சில காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.

இதில் சியான் விக்ரம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்காக அவரின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை… பிரமிக்க வைக்கும் மாற்றத்தைக் கண்டு, ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்த காணொளி குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில்…

” தங்கலான் திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்று சாகச கதையாக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக. சியான் விக்ரம் முழுமையான ஈடுபாட்டுடன் கூடிய பங்களிப்பை அளித்திருக்கிறார்.

ஒட்டுமொத்த படக்குழுவினரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்தியாவின் முன்னணி கன்டென்ட் ஸ்டுடியோவான ஜியோ ஸ்டுடியோஸ்- எங்கள் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜாவுடன் இணைந்திருப்பதால் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன். ஞானவேல் ராஜா இந்த திரைப்படத்தை வழங்குகிறார்.

விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்திற்காக அவர் மேற்கொண்ட கடின உழைப்பை வெளிப்படுத்தவும், அவருடைய அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியை போற்றவும், படத்தின் மீதான கவனத்தை அதிகரிக்கவும், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைக்கவும், இந்த காணொளியை வெளியிடுகிறோம். மேலும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை இந்த காணொளி அதிகரிக்கும் என்று நம்புகிறேன் ” என்றார்.

சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதை வென்ற சியான் விக்ரம் – ஏழுமுறை ஃபிலிம்ஃபேர் விருதையும் வென்றிருக்கிறார். அவரது சிறந்த நடிப்பிற்காக தமிழ்நாடு மாநில அரசின் விருதுகளையும் ஐந்து முறை வென்றுள்ளார். அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பு மற்றும் தொழில் முறையிலான அணுகுமுறைக்காக மிகவும் போற்றப்படும் விக்ரமின் நடிப்பில் ‘சேது’, ‘காசி’, ‘தில்’, ‘தூள்’, ‘ஜெமினி’, ‘சாமி’, ‘அந்நியன்’, ‘பிதாமகன்’, ‘ஐ’, ‘ராவணன்:, ‘தெய்வத்திருமகள்’, ‘இரு முகன்’, ‘கோப்ரா’, ‘மகான்’, ‘பொன்னியின் செல்வன் 1& 2’ ஆகிய படங்களின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமானவர்.

‘தங்கலான்’ படத்தில் சியான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி கிருஷ்ணன், அன்புதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸின் ஜோதி தேஷ் பாண்டே மற்றும் ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் நிறுவனத்தின் கே. ஈ. ஞானவேல் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

1900 களின் முற்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கோலார் தங்க வயல்களின் ( கே.ஜி.எஃப்) பின்னணியில் அமைக்கப்பட்ட ‘தங்கலான்’- நிஜ வாழ்க்கை நிகழ்வுகளிலிருந்து அதன் அழுத்தமான கதையம்சத்துடன் பார்வையாளர்களை கவர தயாராகி உள்ளது. தென்னிந்தியாவில் தங்கத்தை ஆராய்வதில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அழிக்கப்பட்ட பங்களிப்பை விவரிக்கும் ஒரு வரலாற்று சாகச படைப்பாகும்.

இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஆண்டில் தென்னிந்திய சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் திகழ்கிறது.

‘தங்கலான்’ திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலக அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகவிருக்கிறது.

Thangalaan glimpse released on Vikram birthday

JUST IN ‘ஜெயிலர் 2’ வாய்ப்பில்லன்னு நெல்சன் சொன்னாரு.; ஏ சர்டிபிகேட் ஏன்? – வசந்த் ரவி

JUST IN ‘ஜெயிலர் 2’ வாய்ப்பில்லன்னு நெல்சன் சொன்னாரு.; ஏ சர்டிபிகேட் ஏன்? – வசந்த் ரவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JUST IN ‘ஜெயிலர் 2’ வாய்ப்பில்லன்னு நெல்சன் சொன்னாரு.; ஏ சர்டிபிகேட் ஏன்? – வசந்த் ரவி

தரமணி & ராக்கி உள்ளிட்ட படங்களின் நடித்தவர் நடிகர் வசந்த் ரவி.. இவரது நான்காவது படத்திலேயே ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

நெல்சன் இயக்கிய ஜெய்லர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்தார். இந்த படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மெகா பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்த நிலையில் தற்போது இவரது நடிப்பில் உருவாகிய பொன் ஒன்று கண்டேன் என்ற படம் OTT-யில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த நிலையில் இன்று வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகர் வசந்தி ரவி.

அப்போது அவர் பேசியதாவது..

என்னுடைய எல்லா படங்களுக்கும் பத்திரிகையாளர்கள் நீங்கள் மாபெரும் ஆதரவு தந்து வருகிறீர்கள் அதற்கு நன்றி.

பெரும்பாலும் என்னுடைய பல படங்களுக்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் கிடைக்கிறது. தரமணிக்கு ஏன் சர்டிபிகேட் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை.

ராக்கி படத்தில் நிறைய வயலன்ஸ் இருந்தது.. ஆனால் அஸ்வின் படத்தில் நான் ஒரு தற்கொலை செய்து கொள்வதாக ஒரு காட்சி இருக்கும்.. அதனால் அதற்கு A சர்டிபிகேட் கிடைத்தது

எல்லாவிதமான சப்ஜெக்ட் கதைகளிலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.. அதற்கான கதைகளும் அமைய வேண்டும்.. அதற்கான இயக்குனர்கள் அமைய வேண்டும்.

பெரும்பாலும் என்னை சாக்லேட் பாயாகவும் ஜாலியான கேரக்டராகவும் பார்க்க விரும்புகிறார்கள் ரசிகர்கள்.. அதுவும் விரைவில் நடக்கும் என நம்புகிறேன்.

ஜெயிலர் 2 நடக்குமா என்பதை பற்றி என்னால் சொல்ல முடியாது..அது பற்றிய செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.. ஆனால் அதன் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் எந்த அறிவிப்பு வெளியிடவில்லை.. நெல்சன் அது பற்றி அறிவிப்பை தரவில்லை.

அதேசமயம் கேரளாவில் ஜெயிலர் படம் ஷூட்டிங் நடைபெற்ற போது நான் நெல்சன்யிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது… எனக்கு ஜெயிலர் பார்ட் 2 நடக்கும் என்று தோன்றுகிறது என்று நினைத்தேன்.. அவரிடம் சொன்னேன். அதற்கு அவர்.. ஜெயிலர் பார்ட் 2 நடக்கும் என தோன்றவில்லை.. வாய்ப்பில்லை என்றார்”

மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார் நடிகர் வசந்த் ரவி..

Vasanth Ravi open talk about Jailer 2

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் திருமண விழாவில் திரண்ட கோலிவுட்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் திருமண விழாவில் திரண்ட கோலிவுட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபலங்கள் சூழ நடைபெற்ற இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (15-04-2024, திங்கட்கிழமை) மாலை, கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் இனிதே நடைபெற்றது.

மணமகன்

Tarun Karthikeyan

Son of

Mr. K. Karthikeyan
Mrs. Sapna Karthikeyan

மணமகள்

Dr Aishwarya Shankar

Daughter of

Mr. S.Shankar
Mrs. Eswari Shankar

இந்நிகழ்வில்

Actor Chiranjeevi
Actor Ramcharan – Upasana Kamineni Konidela
Actor Ranveer Singh
Actor Vijay Sethupathi
Actor Sivakarthikeyan
Actor Jayam Ravi
Actor Mohanlal
Actor Vijayantony
Actor Uppendhra
Actor SJ Suriya
Actor Raghava Lawrence
Actor Arunvijay
Actor Goundamani
Actor Soori
Actor Gautham Karthick
Actor Ramarajan
Actor Mohan
Actor Bobby Simha
Actor – Director Parthiban
Actor Prasanna & Actress Sneha
Actor Sibiraj
Actor Vaibhav
Actor Aadhi – Actress Nikki Galrani
Actor Sathish
Actor Srikanth (Telugu)
Actor Vasanth Ravi
Actor Rajesh
Actor Karunakaran
Actor Charlie
Actor Thambhi Ramaiah
Actor Manikandan (Boys)
Actor Chams
Actor Ajay Rathnam
Actor Sudhansu Pandey
Actor Ravikrishna
Actor Pandiyarajan
Actor Robo Shankar

Actress Shalini
Actress Kajal Agarwal
Actress Kalyani Priyadharsan
Actress Rakul Preet Singh
Actress KrithiShetty
Actress Shurthihasan
Actress Jhanvi kapoor
Actress Priya Bhavani Shankar
Actress Vanibhojan
Actress Andrea
Actress Aditi Balan
Actress Janani
Actress Vedhika
Actress Kasthuri
Actress Anusiya
Actress Vaidivukarasi
Actress Sri Priya

Director Bala
Director SA Chandrasekar & Shobha Chandrasekar
Director SP Muthuraman
Director T Rajendar
Director Vikraman
Director Rajivmenon
Director Gautham Vasudev Menon
Director AR Murugadoss
Director Hari & Preetha Hari
Director Mohan Raja
Director Vetrimaaran
Director Mari Selvaraj
Director Mysskin
Director Lokesh Kanagaraj
Director Nelson
Director Kiruthiga Udhayanidhi
Director Vijay
Director Karthik Subbaraj
Director H.Vinoth
Director Vasanth Sai
Director Saran
Director Sasi
Director Seenu Ramasamy
Director Thiyagarajan
Director SimbhuDevan
Director Balaji Sakthivel
Director Balaji Dharanitharan
Director Producer Chitra Lakshmanan

Redgiant Movies M.Shenbagamoorthy
Producer GKM Tamilkumaran (Lyca Productions)
Producer Dil Raju
Producer Kalaipuli S Dhanu
Producer TG Thiyagarajan
Producer Boney Kapoor
Producer Thenandal Films Murali – Hema Rukmani
Producer AM Rathnam
Producer Karunamoorthy (Ayngaran)
Producer Danayya
Producer Dhananjeyan
Producer Rajasekar & Family
Producer Director Madhesh
Producer Sembhiyan

Music Director AR Rahman
Music Director Anirudh
Music Director Devi Sri prasad
Music Director Thaman
Drums Sivamani

DOP Santhosh Sivan
DOP Ravivarman
DOP Ramji
Dop Ratnavelu
Dop Thiru
Dop Gopinath
Mrs KV Anand and Family

Art Director Thotta Dharani
Art Director Muthuraj

Lyricist Vairamuthu
Lyricist Madhan karky
Lyricist Kabilan Vairamuthu
Lyricist Vivek
Lyricist Viveka
Shobi – Lalitha Shobi
Singer Blaaze
Singer Sujatha

Stunt Master Silva

DGP Shankar Jiwal
City Commissioner Sandeep Rai Rathore

உள்ளிட்ட பலர் இத்திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணமக்களை வாழ்த்த வந்தவர்களை இயக்குனர் லிங்குசாமி, இயக்குனர் அட்லி, இயக்குனர் வசந்த பாலன், இயக்குனர் அறிவழகன், நடிகர் பரத், மேலாளர் தங்கதுரை, Executive Producer சுந்தர்ராஜ், விமல், கல்யாணம், PRO சதிஷ் (Team AIM) ஆகியோர் வரவேற்றனர்.

More Articles
Follows