விஜயகாந்துக்கு முதன்முதலில் மன்றம் அமைத்த நடிகர் முன்னாள் MLA ஆர். சுந்தர்ராஜன் மரணம்

விஜயகாந்துக்கு முதன்முதலில் மன்றம் அமைத்த நடிகர் முன்னாள் MLA ஆர். சுந்தர்ராஜன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayakanth friend mla sundar rajanவிஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் மதுரை மத்திய தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான, ஆர். சுந்தர்ராஜன் உடல்நலக்குறைவால் காலமானார்.

தேமுதிக பொருளாளராகவும் இவர் இருந்துள்ளவர்.

கேப்டன் விஜயகாந்துடன் சிறு வயது முதலே நண்பராக இருந்தவர்.

மதுரையில் நடிகர் விஜயகாந்த் நற்பணி மன்றம் முதன்முதலில் அமைத்தவர் இவர் தான்.

விஜயகாந்துடன் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தேமுதிக சார்பில் 2011-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனவர்.

2011 ம் ஆண்டு தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைந்து 30 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்றது என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.

ஒரு முறை சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அப்போதைய எதிர்க் கட்சித்தலைவர் விஜயகாந்த்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த சமயத்தில் தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அதிமுகவில் இணைந்தனர்.

அவர்களில் ஆர் சுந்தர்ராஜனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெஸ்ட் டீச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவார்ட்..; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பெஸ்ட் டீச்சர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவார்ட்..; விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

radhakrishnan award 2020வருடந்தோறும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது 2019 ஆம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்காக ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

இந்த முறை ஆன்-லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தமிழக அளவில் இதுவரை 115 ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வரும் ஜூலை 11 ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

அஜித்தின் ‘மங்காத்தா’ வெற்றிக்கு மெகா ட்ரீட் கொடுத்த விஜய்

அஜித்தின் ‘மங்காத்தா’ வெற்றிக்கு மெகா ட்ரீட் கொடுத்த விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay ajithகொரோனா லாக்டவுனில் மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில் கலந்துரையாடினார்.

அந்த சமயத்தில் விஜய் பற்றிய பேச்சு வந்தது.

அப்போது வெங்கட் பிரபு கூறியதாவது…

‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் நடித்தேன்.

அப்போது அஜித் நடித்த மங்காத்தா படத்தை பார்த்த விஜய் என்னை அழைத்து விருந்து கொடுத்தார்.

படம் அவ்வளவு பிடித்திருந்தது. எனக்கான கதை தயாரானவுடன் வாருங்கள் என சொல்லியிருந்தார்.

விரைவில் விஜய்யுடன் வித்தியாசமான ஒரு படம் செய்வேன்” என வெங்கட் பிரபு கூறியுள்ளார்

‘சேவா பாரதி’ அமைப்பே FRIENDS OF POLICE.; அவர்களுக்கு சம்பளம் எப்படி வருகிறது.? – சீமான்

‘சேவா பாரதி’ அமைப்பே FRIENDS OF POLICE.; அவர்களுக்கு சம்பளம் எப்படி வருகிறது.? – சீமான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seemanசாத்தான்குளம் ஜெயராஜ் & பெனிக்ஸ் உயிரிழப்பை அடுத்து ‘பிரண்ட்ஸ் ஆப் போலிஸ்’எனும் பிரிவு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தமிழக அரசு நிரந்தர தடைவிதிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை…

சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை பயன்படுத்தி வந்த ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் பிரிவுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனும் கோரிக்கை நாடெங்கிலும் பெருவாரியாக எழுந்துள்ள நிலையில் அதற்கு திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கதென்றாலும், அத்தடை தற்காலிகமானதாகவும், அவ்வுத்தரவு வாய்மொழியாகவும் இருப்பது பல்வேறு ஐயங்களுக்கு வித்திடுகிறது.

தமிழகக் காவல்துறையினரின் உதவிகளுக்குக் கூடுதலான ஆட்கள் தேவைப்படுகிறார்களென்றால், அதற்குக் கூடுதல் காவலர்களை நியமிக்கச்செய்வது அல்லது ஊர்க்காவல் படையினரை உதவிக்குப் பயன்படுத்திக் கொள்ளச் செய்வது போன்றவற்றையே அரசு வழிகாட்ட வேண்டும்.

ஆனால், அதற்கு நேர்மாறாக, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் ஒரு உட்பிரிவைக் காவல்துறையே உருவாக்கி, அவர்களுக்குக் காவலர்களுக்கு இணையான அதிகாரங்களை வழங்கி, வரம்பு மீறவும், அத்துமீறவும், சிறுவணிகர்களிடம் பணம் பறிக்கவும், காவல்நிலையத்தில் சிறைப்படுத்தப்படுபவர்களைத் தாக்கவும்கூட பயன்படுத்தி வருகிற செய்தி பேரதிர்ச்சி தருகிறது.

அதிலும் ‘சேவா பாரதி’ எனும் மதவாத அமைப்பினரை ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ பிரிவாக வைத்துச் செயல்பட்டிருப்பது வெளிப்படையாக நிகழ்ந்தேறிய சட்டவிரோதமாகும்.

மதச்சார்பற்ற கொள்கையைக் கொண்டு இயங்கும் பன்மைத்துவம் மிகுந்த சனநாயக நாட்டின் நிர்வாகப்பிரிவில் ஒரு மதவாத அமைப்பை ஊடுருவ வழிவகை செய்திருப்பது மிகப்பெரிய நிர்வாகச்சீர்கேடாகும்.

‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் இவர்களுக்கும், மக்களுக்குமான தொடர்பென்ன? இப்பிரிவினருக்கான அதிகார வரம்பென்ன? அவர்களின் வேலைத்திட்டங்கள் என்னென்ன? அவர்களுக்கான சீருடை என்ன? அவர்களுக்குரிய பணிநேரம் எவ்வளவு? அவர்களுக்கான ஊதியம் என்ன? அது எதனை வைத்து வழங்கப்படுகிறது? அதற்கான நிதியாதாரமென்ன? இப்பிரிவைக் காவல்துறையினரே உருவாக்கி நிர்வகித்துக்கொள்ள சட்டத்தில் இடமுண்டா? எனும் எக்கேள்விக்கும் இதுவரை விடையில்லை.

தமிழகம் முழுமைக்கும் இப்பிரிவு காவல்துறையினரின் துணைப்பிரிவு போல அதிகாரப்பூர்வமற்று, அரசின் அனுமதியோடே இயங்கியிருப்பது மக்கள் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் கொடுஞ்செயலாகும்.

சட்டத்திற்குப் புறம்பாக இவ்வாறு ஒரு பிரிவை காவல்துறையினரே உருவாக்கி, அவர்கள் அத்துமீறலில் ஈடுபட வழிவகை செய்திருப்பது மிகப்பெரும் சட்டவிரோதமாகும்.

சாத்தான்குளம் வணிகர்களின் படுகொலைக்குப் பிறகு, ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் அப்பிரிவுக்கெதிராகக் கண்டனக்குரல்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு ஒரு சில மாவட்டங்களில் தற்காலிகத்தடை விதிக்கப்பட்டிருப்பதும், அதற்கான உத்தரவையும் வாய்மொழியாகவே அறிவித்திருப்பதும் மக்களின் கோபஅலையைத் தணிப்பதற்கான ஒரு யுக்திதானே ஒழிய, அது தீர்வுக்கான வழியல்ல! இவ்வளவு கொதிநிலையிலும் சென்னையில் அப்பிரிவுக்குத் தற்காலிகத்தடை விதிக்கப்பட மறுப்புத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்பதன் மூலம் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கிற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகம் முழுமைக்கும் ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ எனும் சட்டவிரோதப் பிரிவை மொத்தமாகக் கலைக்க உத்தரவிட்டு, அதனைப் பயன்படுத்துவதற்குத் தடைவிதிக்க வேண்டும் எனவும், காவல்துறையினரின் உதவிகளுக்கு ஊர்க்காவல்படையினரைப் பயன்படுத்தவும், கூடுதலான காவலர்களை பணிக்கு நியமிக்கவுமான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

வாடிவாசல்… சூர்யாவுக்கு இரட்டை வேடம் கட்டும் வெற்றிமாறன்.!

வாடிவாசல்… சூர்யாவுக்கு இரட்டை வேடம் கட்டும் வெற்றிமாறன்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya and vetrimaaranசூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது.

ஆனால் கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் ஹரி இயக்கத்தில் அருவா, வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

வாடிவாசல் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.

சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் 1959 என்ற குறுநாவலை தழுவி இப்படம் எடுக்கப்படுகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு கதை என்பதால் இப்படம் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு தந்தை – மகன் என இரட்டை வேடம் கட்ட உள்ளதாக வாடிவாசல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

‘ராஜபார்வை’ பட தயாரிப்பாளர் மீது மோசடி புகார்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

babu reddyவரலட்சுமி சரத்குமார் நடிப்பில் ஜே.கே என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ராஜபார்வை’. இந்தப்படத்தை முதலில் தயாரிக்க ஆரம்பித்த ஜெயபிரகாஷ் மனசெகௌடா என்பவர் படத்தின் மொத்த உரிமையையும் கே,என்.பாபுரெட்டி என்கிற தயாரிப்பாளரிடம் விற்றுவிட்டார். வெளிநாடுகளில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப்படங்களை வாங்கி வெளியிட்டு வரும் மலேசிய பாண்டியன் என்பவர் இந்த பாபுரெட்டியிடம் ராஜபார்வை படத்தின் வெளிநாட்டு உரிமையை 2௦ லட்ச ரூபாய்க்கு விலைபேசி முடித்து அதற்காக பத்து லட்ச ரூபாயும் அட்வான்ஸ் தொகையாக கொடுத்து விட்டார்.

ஆனால் கடந்த வருடம் ஜூன் மாதமே படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறிய பாபுரெட்டி படத்தை முடிக்காமல் இழுத்தடிக்கவே, ஒருகட்டத்தில் தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பி கேட்டுள்ளார் மலேசியா பாண்டியன்.. ஆனால் பாபுரெட்டி பணத்தை திருப்பித்தராமல் முரண்டு பிடிக்கவே, விஷயம் தென்னிந்திய திரைப்பட ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவராக இருக்கும் அருண்பாண்டியன் கவனத்திற்கு சென்றது. அதையடுத்து விரைவில் பணத்தை வட்டியுடன் திருப்பித்தருவதாக அவர் முன்னிலையில் உறுதி அளித்தார் பாபுரெட்டி.

இந்த சமயத்தில் கொரோனா தாக்கம் அதன் காரணமாக, ஊரடங்கு என நிலைமையே மாறிவிட்டது. இதை பயன்படுத்தி பாபு ரெட்டி தன்னிடமிருந்த ‘ராஜபார்வை படத்தின் மொத்த உரிமையையும் விஜயராஜேஷ் ரங்கப்பா என்பவருக்கு விற்றுவிட்டார்.. இந்த விஜயராஜேஷ் ரங்கப்பா உடனே இந்தப்படத்தின் வெளிநாட்டு உரிமையை பிரபலமான ஏபி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனத்துக்கு 17 லட்ச ரூபாய்க்கு விலைபேசி விற்றுவிட்டார். படத்தை இன்னொருவருக்கு விற்கும்போது ஏற்கனவே வெளிநாட்டு உரிமை விற்கப்பட்டதை கூறியிருக்க வேண்டும் அல்லது மலேசிய பாண்டியனுக்கு அவரது அட்வான்ஸ் தொகையை திருப்பித்திந்திருக்க வேண்டும்..

ஆனால் அப்படி செய்யவில்லை.. அதுமட்டுமல்ல, மலேசிய பாண்டியனுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்காமல் ராஜபார்வை படத்தை OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களில் வெளியிடுவதற்கான முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. படத்தை தயாரிக்க ஆரம்பித்த தயாரிப்பாளர் முதல் இப்போது வாங்கியுள்ள தயாரிப்பாளர் வரை இந்த மூன்று பேரும் இயக்குனர் ஜேகேவும் சேர்ந்தே இந்த மோசடியில் ஈடுப்பட்டுள்ளார்கள் என்பது மலேசியா பாண்டியனுக்கு தெரிவந்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து இவர்கள் மூவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார் மலேசியா பாண்டியன்.. மேலும் ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இதுபோன்று வெளிநாட்டு உரிமைகளை விற்கும் நபர்கள் மோசடியில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் மற்றும் அனைத்து சங்கங்களும் தகுந்த கடுமையான விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்றும் மலேசியா பாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

More Articles
Follows