தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நாளை ஜூலை 31ஆம் தேதியுடன் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு முடிவடைகிறது.
எனவே தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 9 வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு.
கூடுதலாக எவ்வித தளர்வுகளுமின்றி 31-7-2021 முதல் 9-8-2021 காலை 6.00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
இதில் கூறப்பட்டுள்ளதாவது…
*கூடுதலாக தளர்வுகள் இன்றி, ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு
சில பகுதிகளில், அதிகளவில் கூட்டம் சேருவது தொடர்ந்து காணப்பட்டால் அப்பகுதியை மூடலாம்.
விதிமுறைகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினருக்கு முதல்வர் உத்தரவு
கூட்டம் அதிகமுள்ள பகுதிகளை மூட, மாவட்ட ஆட்சியர்கள் அல்லது மாநகராட்சி ஆணையர்கள் நடவடிக்கை எடுக்கலாம்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
பொது இடங்களுக்கு வருவோர் அனைவரும், மாஸ்க் அணிவதும், தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதும் கட்டாயம்.
கடைகள், வணிக வளாகங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் கட்டாயம் வைக்க வேண்டும்.
கடைகளுக்கு வருவோருக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
கடைகளில் பணிபுரிவோரும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்
தமிழ்நாட்டில் கொரோனா 3ஆவது அலை வராத வகையில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை திறக்கப்படாது.
சினிமா தியேட்டர்கள் திறக்கப்படாது. அதற்கான தடை தொடரும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
MK Stalin extends TN lockdown till August 9th