தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகை மாடல் என பெயர் பெற்றவர் மீரா மிதுன்.
இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
சில தினங்களுக்கு முன்… பல நடிகைகள் தன்னுடைய முகத்தை தான் பயன்படுத்துகிறார்கள் என்வும் கூறினார். மீரா மிதுன் .
எஞ்சாமி புகழ் பாடகி தீ-யும் தன்னுடைய முகத்தை பயன்படுத்துவதாக கூறி இருந்தார்.
இதுகுறித்து வீடியோவில்.. சந்தோஷ் நாராயணன் உங்க பொண்ணு ஏன்? என் முகத்தை யூஸ் பண்றங்க.
அவரோட ஒரிஜினல் மூஞ்சி எல்லாருக்கும் தெரியும். உங்க ஒரிஜினல் மூஞ்ச காட்ட அவ்ளோ அசிங்கமா இருக்கா என்று கூறி இருந்தார்.
இத்துடன் SC இனத்தவர்களை விமர்ச்சித்துள்ளார்.
மீரா மிதுன் பேசியதாவது…
, “பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது.
திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள்.
தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை” என பேசியுள்ளார்.
இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
மேலும் மீராவை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைதளத்தில் பலரும் கூறி வருகின்றனர்.
மீரா மிதுன் மீது சென்னை வெப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னி அரசு அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது கலகம் செய்ய தூண்டுவது, சாதி, மத விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Meera Mithun booked over derogatory remarks against SC peoples