மறுபிறந்தாள் (HRE REBIRTH); யுவன் அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம்

மறுபிறந்தாள் (HRE REBIRTH); யுவன் அறிமுகப்படுத்தும் இசை ஆல்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Marupiranthaal Her Rebirth Yuvan brings yet another musical showpieceயுவன் சங்கர் ராஜாவின் U1 Records நிறுவனம் தொடர்ச்சியாக புதிய இசையை, புத்தம் புது திறமைகளை அறிமுகப்படுத்துவதில் முன்னணியில் இயங்கி வருகிறது.

இந்நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம் தான் ஷஹானி ஹஃபீஸ்ன் “மறுபிறந்தாள்” ( அவளது மறுபிறப்பு ). யெல்தோ P ஜான் இசையில் ருக்‌ஷீனா முஸ்தபா வரிகளில் அம்மா, மகள் கூட்டணியான Dr ஷஹானி ஹஃபீஸ்,ரெஹயா ஃபாத்திமா பாடியுள்ள வீடியோ பாடலே “மறுபிறந்தாள்”.

Dr ஷஹானி ஹஃபீஸ் இந்த இசை ஆல்பத்தின் திரைவடிவத்தின் கருவை உருவாக்கி, தயாரித்துள்ளார். மேலும் ஆதர்ஷ் N கிருஷ்ணாவுடன் இந்த இசை ஆலபத்தை இயக்கியுள்ளார் Dr ஷஹானி ஹஃபீஸ்.

பிரபல மேக்கப் ஆர்டிஸ்ட், சமூக செயற்பாட்டாளர், மேடை நாடக கலைஞர், திருநங்கை ரெஞ்சு ரெஞ்சிமார், ரோஸ் ஷெரீன் அன்சாரியுடன் இணைந்து நடித்திருக்கும் இந்த ஆல்பம் பாடல், திருநங்கை தாயுக்கும் அவரது வளர்ப்பு மகளுக்கும் உள்ள உறவை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

ஆணாதிக்கம் மாறாத இவ்வுலக சமுதாயத்தில் அனைத்து குற்றங்களுக்கும் குற்றவாளியாக பெண்ணையே கை காட்டுகிறது. பெண்ணின் ஒழுக்கம் காக்க சொல்லும் சமுதாயம் அவளை அடக்குவதிலேயே தான் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறது.

ஆனால் இங்கு மாற வேண்டியது சமுதாயமே. பெண்ணிற்கான உரிமையை அளிப்பதான சமூகமாக, நாம் அனைவரும் இணைந்தே இந்த சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனும் கருத்தை தான் இந்த பாடல் சொல்கிறது.

இந்த ஆல்பம் பாடலுக்கு அபி ரெஜி ஒளிப்பதிவை கையாள ப்ரேம்சாய் முகுந்தன் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த ஆல்பம் பாடலை உருவாக்கிய Dr ஷஹானி ஹஃபீஸ் ஒரு ஆயூர்வேத நிபுணர். கேராளாவில் இயங்கி வ்ரும் ஆயூர்வேத மருந்துகள் தயாரிக்கும் Ayurveda Naturals நிறுவனத்தை நிறுவியவர். இது தவிர கேரளாவை தலைமையிடமாக கொண்டு வரும் Ayurveda Media company ன் நிறுவனராகவும் நிர்வாக பங்குதாரராகவும் உள்ளார்.

கவிதைகள், இலக்கியம், இசை மீது அதீத ஆர்வம் கொண்டு தன்னை அவ்வுலகில் இணைத்துகொண்டுள்ளார். தற்போது சமூக நல நோக்குடன் கூடிய கருத்தை மையமாக கொண்டு ஒரு குறும்படம் இயக்கி வருகிறார்.

மறுபிறந்தாள் ( அவளது மறுபிறப்பு ) உலகம் முழுதும் திரைவிழாக்களில் பாராட்டுக்களை குவித்து வருகிறது.

சிறந்த வீடியோ பாடல் விருதை International Thai Film Festival, Bangkok ல் பெற்றுள்ளது. (இந்தியாவிலிருந்து அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே மியூசிகல் வீடியோ என்பது குறிப்பிடதக்கது ), Calcutta International Cult Film Festival ( Entry for Golden Fox Awards), Buddha International Film Festival – Pune, Festigious International Film Festival, Los Angeles, ( Bronze medalist) Global Music Awards, California, Semi Finalist to Rome Prisma Awards – Italy. ஆகிய இடங்களில் கலந்து கொண்டுள்ளது.

மேலும் இந்தியாவில் International Documentary & Short Film Festival of Kerala, AAB International Film Festival, Punjab, LGBTQ Shorts Film Festival – United States, International Short Film Festival of Pune, Chambal International Film Festival, Rajasthan and Jaipur International Film Festival 2020 ஆகிய இந்திய திரைவிழாக்களுக்கும் இந்த வீடியோ பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Marupiranthaal Her Rebirth Yuvan brings yet another musical showpiece

Link : https://youtu.be/A6NNARFewFs

ரஜினியை காக்க வைத்த யோகிபாபு; தர்பார் சூட்டிங்கை முடிக்காத முருகதாஸ்

ரஜினியை காக்க வைத்த யோகிபாபு; தர்பார் சூட்டிங்கை முடிக்காத முருகதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Director AR Murugadoss shoot Darbar final shotsமுருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படம் அடுத்த ஆண்டு 2020 ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தின் பாடல்களை கடந்த டிசம்பர் 7ஆம் தேதி வெளியிட்டனர்.

டிசம்பர் 16ஆம் தேதி மும்பையில் இப்பட டிரைலரை வெளியிட உள்ளனர்.

இந்த படத்தை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இந்த செய்தி இருக்கும் எனத் தெரிகிறது.

படத்தில் சில காட்சிகளில் திருத்தம் இருப்பதால் சில காட்சிகளை ரீ சூட் செய்திருக்கிறார்களாம். முன்பே இது தெரிந்தாலும் அந்த காட்சிக்கு யோகிபாபுவின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம்.

எனவே யோகிபாபு வரும் வரை காத்திருப்போம் என ரஜினி பெருந்தன்மையுடன் கூறியிருந்தாராம். தற்போது யோகிபாபு வந்துவிட்டதால் மீதமுள்ள அந்த காட்சிகளை முருகதாஸ் சூட் செய்திருக்கிறார்.

Director AR Murugadoss shoot Darbar final shots

நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் 2வது லுக் !

நடிகர் ஆதி பிறந்த நாளில் வெளியான “கிளாப்” படத்தின் 2வது லுக் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aadhi in clapதங்கள் வேலை மீது உண்மையான காதலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு உதாரணமாக “கிளாப்” படக்குழுவை சொல்லலாம்.

ஆதி, ஆகான்ஷா சிங், கிரிஷா குரூப் நடிப்பில் உருவாகும் “கிளாப்” படத்தினை, படக்குழு அயராத ஒருங்கிணைப்பான உழைப்பில் மிகவிரைவாக படப்பிடிப்பை முடித்து, போஸ்ட் புரடக்‌ஷன் வேலைகளையும் தற்போது ஆரம்பித்துள்ளது.

மேலும் இன்று டிசம்பர் 14 ஆம் தேதி ஆதியின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு, படக்குழு படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டது.

Big Print Pictures நிறுவனம் சார்பில் இப்படத்தினை தயாரிக்கும் IB கார்த்திகேயன் படம் குறித்து கூறியதாவது…

ஒரு தயாரிப்பாளராக இந்த திரைப்படம், மிக இனிமையானதொரு பயணம். நடிகர்களும், தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தினை தங்களது படமாக, அடையாளமாக கருதி தங்களின் முழு உழைப்பையும் தந்திருக்கிறார்கள்.

ஒவ்வொருவரும் இதனை தங்கள் படமாகவே காதலித்து வேலை செய்துள்ளார்கள். இயக்குநர் பிரித்வி ஆதித்யா இப்படத்தினை தனது உயிராக நேசித்து பணிபுரிந்துள்ளார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் டிரெய்லர், இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும். படம் வந்திருக்கும் விதத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சி கொண்டிருக்கிறேன். ஆதி இப்படத்திற்காக அர்ப்பணிப்புடன் கூடிய கடும் உழைப்பை தந்துள்ளார். ஒரு நிஜ அத்லெட் போலவே அவர் மாறிவிட்டார்.

மேலும் ஆகான்ஷா சிங், கிரிஷா குருப் இருவரும் தங்களது அற்புதமான பங்களிப்பை தந்துள்ளார்கள். படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புக்காக அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். இசைஞானி இளையராஜா படத்தின் விஷிவல்களுக்கு உயிர்ப்பான இசையை தரவுள்ளார். ஆதியின் பிறந்த நாளான இன்று படத்தின் இரண்டாவது லுக்கை வெளியிட்டதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம்.

புதுமுக இயக்குநர் பிரித்வி ஆதித்யா கூறியதாவது…

“கிளாப்” அத்லெட் ஸ்போர்ட்ஸ் வகை விளையாட்டை அழுத்தமாக சொல்லும் முதல் படமாக இருக்கும். இந்த வகை படம் இங்கே புதிதாக இருக்கும்.

படத்தின் பெரும்பகுதி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களாக விளங்கும் நாசர், பிரகாஷ் ராஜ், முனீஸ்காந்த், மைம் கோபி ஆகியோருடன் மேலும் பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். “ஜீவி” படப்புகழ் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராகுல் படத்தொகுப்பு செய்ய, வைரபாலன் கலை இயக்கம் செய்துள்ளார்

Big Print Pictures நிறுவனம் சார்பில் IB கார்த்திகேயன் இப்படத்தினை தயாரிக்க, P பிரபா, பிரேம், G. மனோஜ், G. ஶ்ரீ ஹர்ஷா இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தர்பார் விழாவில் சர்ச்சை பேச்சு; கமலை சந்தித்தார் லாரன்ஸ்

தர்பார் விழாவில் சர்ச்சை பேச்சு; கமலை சந்தித்தார் லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava lawrence and kamal haasanரஜினியின் தர்பார் இசை விழாவில்… தன் சிறு வயதில் கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்ததாக பேசினார் லாரன்ஸ். இது சில தினங்களாக சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் நடைபெற்ற ரஜினி பிறந்த நாள் விழாவிலும் இதற்கு விளக்கமளித்தார் லாரன்ஸ்.

இந்த நிலையில் கமலை சந்தித்துள்ளார்..

வணக்கம்!

அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் மேடையில் நான் கூறிய ஒரு கருத்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு. கமல் ஹாசன் அவர்கள் குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது.

எனது பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்துப் பரப்பப்படுகின்றது என்று ஏற்கனவே நான் விளக்கமளித்துள்ளேன்.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்களை நான் நேரில் சந்தித்து விளக்கமளித்தேன்.

எனது விளக்கத்தை ஏற்றுக்கொண்ட திரு.கமல் ஹாசன் அவர்கள் என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார்.

அவருக்கு என் நன்றியினையும் என் அன்பையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கின்றேன்.

– ராகவா லாரன்ஸ்.

“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

“ஆலம்பனா” பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

aalambanaஆலம்பனா படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட போதே அப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. காரணம் அப்படத்தின் கதையம்சம் பேண்டஸி வகையைச் சார்ந்தது என்பதால்.

பிரம்மிக்க வைக்கும் அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும் கொண்டாடி இருக்கிறார்கள். அதைப் போன்ற ஒரு அபூர்வ கதையம்சத்தில் இன்றுள்ள குழந்தைகளுக்கும் இப்போதுள்ள ட்ரெண்டுக்கும் ஏற்ற வகையில் பிரம்மாண்டமாக தயாராகிறது.

விஸ்வாசம் படத்தை பெரியளவில் வெளியீட்டு பெரு வெற்றியை கண்ட கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸும் தயாரிப்பாளர் சந்துருவும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறார்கள். முற்றிலும் மாறுபட்ட கமர்சியல் பேண்டஸி படமாக இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாரி.கே.விஜய். இவர் முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை ஆகிய தரமான படங்களில் துணை மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிவர். மக்களை எண்டெர்டெயின்மெண்ட் பண்ணும் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பார்வதிநாயர் நடிக்கிறார். இதுவரை வந்த வைபவ் படங்களிலே ஆலம்பனா தான் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிறது. மேலும் வைபவ் கரியரில் இது மிக முக்கியமான படமாக அமைந்துள்ளது. படத்தில் முனிஷ்காந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, பல வருடங்களுக்குப் பிறகு பட்டிமன்றங்களின் ஹீரோ திண்டுக்கல் ஐ லியோனி இப்படத்தில் நடிக்கிறார். மேலும் படத்தின் கலகலப்பிற்கு உத்திரவாதம் தருவது போல காளிவெங்கட், ஆனந்த்ராஜ் ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். நடிகர் பாண்டியராஜன் முரளிசர்மா ஆகியோர் வெயிட் கேரக்டர்களில் நடிக்க, வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டிய கபீர்துபான் சிங் வில்லன் வேடமேற்றிருக்கிறார்.

மிக வித்தியாசமான இந்தக்கதை களத்தில் பலம் வாய்ந்த டெக்னிக்கல் டீமும் இணைந்துள்ளது. சமீபத்தில் வெளியான கோமாளி படத்தில் பாடல்கள் மற்றும் பின்னணி இசையால் தெறிக்கவிட்ட ஹிப்ஹாப் ஆதி இசை அமைக்கிறார். நெடுநல்வாடை படத்தில் கிராமத்தின் அழகை துளியும் குறையாமல் தன் கேமராவிற்குள் கொண்டு வந்த வினோத் ராமசாமி ஒளிப்பதிவை கவனிக்கிறார். ராட்சசனில் தன் இமலாய உழைப்பைக் கொடுத்த எடிட்டர் ஷான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை கவனிக்கிறார். மாஸான சண்டைக்காட்சிகளால் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் பீட்டர் கெய்ன் ஸ்டண்ட் பொறுப்பை கவனிக்க, ஆர்ட் டைரக்டராக கோபி ஆனந்த் பங்கேற்கிறார்.

படத்தில் பங்குபெறும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் படம் தாங்கி நிற்கும் கதையம்சம் அனைத்துமே ஈர்க்கக்கூடியளவில் இருக்கும் ஆலம்பனா படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று மிகப்பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது.

பூஜையில் ஹீரோ வைபவ், நாயகி பார்வதிநாயர், இயக்குநர் பார்.கே விஜய் உள்பட ஒட்டுமொத்த படக்குழுவும் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினர்களாக நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார், முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களின் இயக்குநர் ராம்குமார், குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களின் இயக்குநர் கல்யாண் பலூன் படத்தின் இயக்குநர் சினிஸ், டோரா படத்தின் இயக்குநர் தாஸ்.ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

காந்தி & அம்பேத்கர் பற்றி ரஜினி டயலாக்; சினிமா பலனை அடைந்ததாக ரஞ்சித் பேச்சு

காந்தி & அம்பேத்கர் பற்றி ரஜினி டயலாக்; சினிமா பலனை அடைந்ததாக ரஞ்சித் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ranjith talks about Rajinis dialogue in Gundu Success meetநீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்த “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படம் கடந்த 6-ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.

பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த அதியன் ஆதிரை இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படத்தின் நன்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், லெனின் பாரதி, ரவிக்குமார், ஸ்ரீகணேஷ், கவிஞர் அறிவுமதி மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இதில் பா.ரஞ்சித் பேசும்போது, ‘படம் எடுக்கணும் படம் தயாரிக்கணும் என்றெல்லாம் நினைத்து நான் வரவில்லை, காலேஜ் படிக்கிற வரைக்கும். நான் சந்தித்த ஆளுமைகள் தான் என்னைப் படமெடுக்க உந்தினார்கள். “சில்ட்ரென் ஆப் ஹெவன்” போன்ற படங்கள் என்னை ஊக்கப்படுத்தியது. என்னை அழ வைத்த படங்கள் தான் நான் பட்டுக்கொண்டிருந்த வலிகளை படமாக பதிவுசெய்யத் தூண்டியது.

நான் யார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். அதன்பின் என்னை தெரிந்துகொண்டு என்னிடம் மற்றவர்கள் வரவேண்டும் என்று நினைத்தேன். புத்தகங்கள் வாசிக்கிறது பிரச்சனையாக இருந்த காலத்தில்தான் நான் வந்தேன்.

தாஸ்தாவஸ்கி நாவலைப் படிக்கும் போது ஒரு இயக்குநர் என்னை கிண்டல் செய்தார். வேலை செய்யும்போது நான் பீப் பிரியாணி சாப்பிடுவதில் நிறைய பேர்களுக்கு பிரச்சனை இருந்தது.

அது பெரிய உளவியல் நெருக்கடி. அதை சினிமாத் தளத்தில் பேச வேண்டும் என்று ஆசை கொண்டேன். மாற்று சினிமாவிற்கு மக்களிடம் இருந்து பெரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்தது. அதனால் அவற்றை மக்களுக்கான மொழியில் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

ரஜினி சாரை படமெடுப்பேன் என்று நினைத்ததே இல்லை. அவர் கபாலி படத்தில் “அம்பேத்கர் கோட் போட்டதுக்கும், காந்தி கோட் போடாததுக்கும் பின்னாடி அரசியல் இருக்கு” என்று பேசியது நான் சினிமாவிற்கு வந்ததிற்கான பலனை அடைந்ததாக உணர்ந்தேன்.

“பரியேறும் பெருமாள்” படம் எடுக்கும் போது பெரிய பயம் இருந்தது. அப்படத்தை யாரிடமும் காட்ட வேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் படத்தைப் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்தார்கள். எனக்கு கைகால்கள் உதறத் துவங்கியது. அந்தப்படம் தந்த உற்சாகம் பெரியது. அந்தப்படம் கமர்சியலாகவும் பெரிய வெற்றிபெற்றது.

அந்தப்படம் தான் “குண்டு” படத்தைத் தயாரிக்கும் நம்பிக்கையைத் தந்தது. அதியன் உழைப்பு எனக்குத் தெரியும். இந்த டீம் திறமைமிக்க மனிதர்கள். தகுதி திறமை என்பதை இங்கு கவனிக்கும் விதத்தில் தான் பிரச்சனை இருக்கிறது. இந்தப்படத்தையும் பத்திரிகையாளர்கள் கொண்டாடி விட்டார்கள்.

சினிமா இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான ஆயுதம். எளிய மக்களிடம் ஒரு விசயத்தை ஈசியாக கடத்த முடியும் என்றால் அது சினிமாவில் தான் சாத்தியம். அப்படியான நல்ல படங்களைத் தொடர்ந்து நீலம் புரொடக்சன்ஸ் தந்து கொண்டிருக்கும்” என்றார்.

Ranjith talks about Rajinis dialogue in Gundu Success meet

More Articles
Follows