தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மார்கழியில் மக்களிசை கலைநிகழ்ச்சி. இவ்வாண்டிர்க்கான கலைநிகழ்ச்சி (18/12/2021) மதுரையிலும், (19/12/2021 ) கோவையிலும் முதல் தொடக்கமாக ஆரம்பிக்க பட்டு மக்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
அதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வாணி மஹாலில் (24/12/2021), ஆதி மேளம் பறையிசை குழுவினர், கருங்குயில் கணேசன், நாட்டுபுற பாடகர்கள் செந்தில் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரும்,
(25/12/2021) தேதியில் பம்பை பறையிசை குழுவினர், புத்தர் கலைக் குழுவினர், கிராமிய புகழ் வி.எம்.மகாலிங்கம், மதிச்சயம் பாலா, சுகந்தி ஆகியோரும்,
(26/12/2021) தேதியன்று ஐஐடியில் ஒப்பாரி, ஜெயக்குமார் மற்றும் குழு, தெருக்குரல் அறிவு.
(27/12/2021) தேதியன்று ஜெய்பீம் கிளாட் இசைக்குழு, காரியப்பட்டி சேகர் கூட்டு நய்யாண்டி குழு, தலித் சுப்பையா, சித்தன் குணா, திருமூர்த்தி ஆகியோரும்,
(28/12/2021) தேதியன்று கிருஷ்ண கானா சபாவில் பால முருகன் பெரிய மேளம்-திருவண்ணாமலை, கானா பாடகர்கள், முனியம்மா ஆகியோரும்.
(29/12/2021), (30/12/2021) ஆகிய தேதியன்று தமிழ் இசை சங்கத்தில், முரசு கலைக்குழு, ஆந்தக்குடி இளையராஜா மற்றும் குழு, கிடாகுழி மாரியம்மா, எருதுகொட்டி பறையிசை – ஜிப்லா, மலைவாழ் மக்கள் பாடல்கள், குரகா-மங்களூர், கங்காணி குமார், சம்பத்,
இருளர் கன்னியப்பன் முல்லைக்குழு ஆகியோரும்,
(31/12/2021) அன்று மார்கழியில் மக்களிசையின் கடைசி நிகழ்வாக மியூசிக் அகாடமியில் பாப்பம்பட்டி ஜம்மா, தி காஸ்ட்லஸ் கலெக்டிவ் கலைஞர்கள் பங்குபெறுகிறார்கள்.
Margazhiyil Makkalisai started in Chennai from christmas