தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
தமிழகம், டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் வைரஸ் பரவல் மிக வேகமாக உள்ளதால் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூன் 30-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்துள்ளனர்.
இதற்கு முன்னதாகவே மேற்கு வங்க முதல்வர் ஊரடங்கை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துவிட்டார்.
இந்த மாநிலங்களை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொது முடக்கத்தை நீடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இன்னும் ஓரிரு தினங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.