தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் 1ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை சுமார் 50 நாட்களாக எந்த தமிழ்ப் படமும் வெளியாகவில்லை.
ஏப்ரல் 20ம் தேதிதான் ‘மெர்க்குரி மற்றும் முந்தல்’ ஆகிய படங்கள் வெளியாகின.
தற்போது புதிய விதிமுறைகளை விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்துள்ளது.
டங்களின் சென்சார் தேதியைப் பொறுத்தே புதிய படங்களுக்கான வெளியீட்டுத் தேதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் ஒவ்வொரு தயாரிப்பாளரிடமிருந்தும் அவர்களது படங்களை வெளியிட 3 தேதிகளைக் குறிப்பிட சொல்லுமாறு கேட்டு இருக்கிறார்களாம்.
அதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு அந்தப் படங்களைப் பரிசீலித்து ஒன்றுகொன்று அதிகமான மோதல் இல்லாதபடி அனைத்துப் படங்களுக்கும் சரியான வெளியீட்டுத் தேதியை பிரித்துக் கொடுத்து வருகிறார்கள்.
அதன்படி இப்போதைக்கு ஜுன் மாதம் வரையிலான படங்களுக்கான தேதியை கொடுத்துவிட்டதா கூறப்படுகிறது.
மேலும் ஒரு வருடத்திற்கு உண்டான படங்களின் வெளியீட்டுத் தேதியை குறித்துக் கொடுக்க உள்ளார்களாம்.
அதன்படி, “பக்கா, பாஸ்கர் ஒரு ராஸ்கல், பாடம், தியா ஆகிய நான்கு படங்கள் ஏப்ரல் 27ல் இந்த வாரம் வெளியாகிறது.
இதனையடுத்து ஜீன் 7ல் காலா ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலா ரிலீஸை அறிவித்துவிட்டதால் மற்ற படங்களும் விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.
ஜீன் மாதத்திற்குள் கீழே உள்ள படங்கள் வெளியாகவுள்ளன.
விஸ்வரூபம் 2, டிக் டிக் டிக், இரவுக்கு ஆயிரம் கண்கள், இருட்டு அறையில் முரட்டு குத்து, ஒண்ணு போதும் நின்னு பேசும், செம போத ஆகாத, வல்லவனுக்கும் வல்லவன், மோகினி, கீ, கோலி சோடா 2, இரும்புத் திரை, காளி, கடைக்குட்டி சிங்கம், சர்வர் சுந்தரம், செம, ஆண்டனி, ஒரு குப்பைக் கதை, மிஸ்டர் சந்திரமௌலி ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன.