தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு பிரச்னை மெல்ல மெல்ல குறைந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கின்றனர்.
எனவே மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்புகளை ஒவ்வொரு பள்ளிகளும் வெளியிட தொடங்கியுள்ளனர்.
மாணவர் சேர்க்கைநின் போது, பல பள்ளிகள் குழந்தையின் ஆதார் அட்டை எண்ணை சமர்ப்பிக்க வலியுறுத்த தொடங்கியுள்ளன.
ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு எந்த பயோமெட்ரிஸ் தேவையில்லையாம்.
ஆனாலும் மக்கள்தொகை தகவல் மற்றும் முக புகைப்படத்தின் அடிப்படையில் குழந்தைகளின் யுஐடி அவர்களின் பெற்றோரின் யுஐடியுடன் இணைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு பயோமெட்ரிக்ஸ் முறை கடைப்பிடிக்கப்படும்.
ஆதார் அட்டை பெற்ற ஒரு குழந்தைக்கு 5 மற்றும் 15 வயதாகும் போது, அவர்களின் பத்து விரல்கள், கருவிழி & முக புகைப்படங்களின் பயோமெட்ரிக்ஸை புதுப்பிக்க வேண்டும்.
உங்கள் குழந்தைக்கு ஆதார் எண்ணுக்கு விண்ணப்பிக்க… குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் அட்டை விவரங்கள், முகவரி மற்றும் அடையாளச் சான்றுகள் தேவை.
Mandatory submission of Aadhar card details for all students