தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசனுடன் ஒரே வீட்டில் திருமண செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர் நடிகை கௌதமி.
பின்னர் தன் மகளின் வாழ்க்கைக்காக கமல்ஹாசனை பிரிவதாக அறிவித்தார்.
தற்போது சென்னை கிழக்கு கடற்கரை சாலை கொட்டிவாக்கம் பகுதியில் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருகிறார்.
இவரது வீட்டில் இன்று அதிகாலையில் சுவர் ஏறி குதித்து வீட்டிற்குள் ஒரு மர்ம நபர் நுழைந்துள்ளார்.
இதனையடுத்து வீட்டு பணிப்பெண்கள் அந்த நபரை பிடித்து நீலாங்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவரை விசாரணை செய்ததில் அந்த நபர் கொட்டிவாக்கம் மீனவ குப்பத்தை சேர்ந்த 24 வயதான பாண்டியன் என தெரியவந்தது.
பாண்டியன்(24) மீது 380, 511 என்ற இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.
காதம்பரி பிக்சர்ஸ் படத் தயாரிப்பு நிறுவனத்தில் பாண்டியன் வேலை பார்த்து வருவதாகவும், அவர் மது போதையில் கௌதமி வீட்டுக்குள் நுழைந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Man who illegally entered actress Gautami’s house arrested