தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சந்தோஷமா இருக்கோமா.. சரக்கடிப்போம்.. கவலையா இருக்கோமா சரக்கடிப்போம்… இதுவே குடிகாரன்களின் குடி மந்திரம்.
அவர்களுக்கு குடிக்க ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான்.
தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்தாலும் மது அருந்தாமல் இருக்க மாட்டார்கள்.
தற்போது கொரோனாவுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் சானிடைசரையும் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.
கிருமி நாசினியில் ஆல்கஹால் இருப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், இதனை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த அவலம் ஆந்திராவில் நடந்து வருகிறது.
ஆந்திராவில் பிரகாசம் என்ற மாவட்டத்தில் கிருமிநாசினி குடித்து 15 பேர் இறந்த நிலையில் தற்போது கடப்பா மாவட்டத்திலும் சானிடைசரை அதிக அளவில் அருந்தி வருகின்றனர்.
எத்தனை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தாலும் இவர்களை திருத்த முடியாது போலவே….