மக்கா மிஷி.. அப்படின்னா என்ன பால் டப்பா.? பிரதர் உங்களுக்கு தெரியுமா.?

மக்கா மிஷி.. அப்படின்னா என்ன பால் டப்பா.? பிரதர் உங்களுக்கு தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மக்கா மிஷி.. அப்படின்னா என்ன பால் டப்பா.? பிரதர் உங்களுக்கு தெரியுமா.?

ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் 8வது தயாரிப்பு பிரதர்.

அக்கா – தம்பி உறவை அடிப்படையாக கொண்டு ஒரு குடும்ப படமாக உருவாகியுள்ளது ‘பிரதர்’.

‘பிரதர்’ படத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளனர்.

இதில் ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவை விவேகானந்த் சந்தோஷ் கையாளுகிறார்.

இந்த படம் ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாகியுள்ளது. ரவி அக்காவாக பூமிகா நடித்துள்ளார்..

விரைவில் இந்தப் படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ள நிலையில் தற்போது படத்தின் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிரதர் படத்தில் இடம்பெற்றுள்ள மக்கா மிஷி என்ற பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மக்கா மிஷி என்றால் என்ன?:என்ற ப்ரோமோ வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது..

மக்கா மிஷி என்றால் கெத்து ஸ்வாக் என்று பாடலைப் பாடிய பால் டப்பா தெரிவித்துள்ளார்..

Makka Mishi song promo from Brother

அசத்த வரும் ‘அமீகோ’.. இந்தியாவின் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி திரில்லர்

அசத்த வரும் ‘அமீகோ’.. இந்தியாவின் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி திரில்லர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அசத்த வரும் ‘அமீகோ’.. இந்தியாவின் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி திரில்லர்

தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமான நடிகை சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘அமீகோ’ (Amigo)எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முறையாக சைபர் ஃபேண்டஸி ஹாரர் த்ரில்லர் ஜானரில் ‘அமீகோ’ திரைப்படம் தயாராகி இருப்பதால், இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.‌

அறிமுக இயக்குநர் பி. பிரவீண் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அமீகோ’ எனும் திரைப்படத்தில் சாந்தினி தமிழரசன், அர்ஜுன் சோமையாஜுலா, சுவிதா ராஜேந்திரன், பிரவீன் இளங்கோ, வத்சன் சக்கரவர்த்தி, வெக்கே, மனிஷா ஜஷ்னானி, பிரக்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘அயலி’ எனும் இணைய தொடர் புகழ் ரேவா இசையமைத்திருக்கிறார்.

ஏழுமலை ஆதி கேசவன் கலை இயக்குநராக பணியாற்ற, படத்தொகுப்பு பணிகளை பிரதீப் சந்திரகாந்த் கவனித்திருக்கிறார். சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரத்யாக்ரா மோசன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. கிரிஜா தயாரித்திருக்கிறார்.

இணை தயாரிப்பு பணியை ஜீத்து பிரபாகரன் மேற்கொண்டிருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்…

” அமீகோ திரைப்படம் இந்தியாவில் தயாராகி இருக்கும் முதல் சைபர் ஃபேண்டஸி ஹாரர் திரில்லர் திரைப்படமாகும்.

இந்திய திரை உலகினரை திரும்பிப் பார்க்க வைக்கும் புதுமையான திரைப்படமாக இப்படம் உருவாகி இருக்கிறது.

டிஜிட்டல் உலகின் மறுபக்கத்தை.. திகிலூட்டும் அம்சங்களுடன் நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ஆன்லைன் தொடர்பான அத்துமீறலில் சிக்கும் நண்பர்கள் குழுவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.‌

இவர்கள் இணையத்தின் மறைவான பகுதியில் பதுங்கி இருக்கும்.. ஒரு தீங்கை விளைவிக்கும் நிறுவனத்தின் கொடூரமான சவால்களை எதிர்கொண்டவர்களாக இருக்கலாம் அல்லது வெளிப்புறத் தோற்றத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத விர்ச்சுவல் ரியாலிட்டி என்ற பயங்கரமான யதார்த்தமாகவும் இருக்கலாம்.

இந்த திரைப்படத்தின் சிறப்பம்சம்- அதன் தனித்துவமான திரைக்கதையிலும், ஜானரிலும் உள்ளது. சைபர் திரில்லர் திரைப்படங்கள் – பல ஆண்டுகளாக பார்வையாளர்களை வசீகரித்து, தொழில்நுட்பத்தின் இருண்ட பக்கத்தையும், அதிகரித்து வரும் ஆபத்துகளையும் விவரித்திருக்கிறது.

திகில் படங்களும் ஏராளமாக வருகை தந்திருக்கிறது.

ஆனால் அமீகோ – அற்புதமான கற்பனை மற்றும் அறிவியல் புனைவு கதை அம்சங்களை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. இது மேலும் மர்மத்தை பற்றிய பயத்தை கூடுதலாக அதிகரிக்கிறது. இந்த தனித்துவமான கலவையானது இந்தியாவில் திகில் பட படைப்புகளை.. அதன் எல்லைகளை மறு வரையறை செய்யும் திறனை கொண்டிருக்கிறது.‌

பாரம்பரியமாக இந்திய திகில் படங்கள் பெரும்பாலும் பேய் , ஆவி போன்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட விசயங்களை நம்பியுள்ளன. ஆனால் ‘அமிகோ ‘ இதுவரை யாரும் அறியப்படாத பிரதேசத்திற்குள் நுழைகிறது. நவீன தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் உலகில் அமைதியற்ற சாத்தியக்கூறுகளை ஆராய்கிறது. இந்த புதிய முற்போக்கான படைப்பு பார்வையாளர்களை பயமுறுத்தவும் செய்யும். அதே தருணத்தில் கவர்ந்திழுக்கவும் செய்யும்.

அமீகோ என்றால் நண்பர் என பொருள். இந்தத் திரைப்படம் நண்பர்களை சுற்றியுள்ள சூழ்ச்சிகளையும், அதன் பின்னணியில் உள்ள மர்ம முடிச்சுகளையும் சுவாரசியமாக வழங்குகிறது. மேலும் இந்த திரைப்படம் இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க அடையாளத்தை ஏற்படுத்தும்.

ஊடக துறையில் பணியாற்றும் நண்பர்கள் குழுவிற்கு இடையேயான உரையாடலின் போது… எதிர்பாராத வகையில் அன்னியன் ஒருவனின் காணொளி அழைப்பு குறிக்கிடுகிறது. இவர்களின் உரையாடலில் எதிர்பாராமல் ஊடுருவிய அந்த அன்னியன் .. எதிர்பார்க்காத திருப்பத்தை ஏற்படுத்துகிறான். அந்த மர்ம உருவம் – நண்பர்களைப் பற்றிய அந்தரங்கமான விசயங்கள்.. அவர்கள் மறைக்கும் இருண்ட ரகசியம் ..‌ தன்னிடம் இருப்பதாக தெரிவிக்கிறது.

அத்துடன் அவர்களை ஒரு வகையான விளையாட்டில் ஈடுபடுமாறு நிர்பந்திக்கிறது. அவர்களும் வேறு வழி இல்லாமல் ஆபத்தை உணர்ந்தே அந்த விளையாட்டில் மூழ்குகிறார்கள். அவர்களின் ஆன்லைன் உலகத்திற்கும், யதார்த்தத்திற்கும் இடையிலேயான நிலைபாடு கேள்விக்குறியாகிறது.

அந்த நண்பர்கள்- மர்ம மனிதன் வீசிய வலையில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இப்படத்தின் கதை” என்றார். ஆகஸ்ட் மாதம் விக்கி பிலிம்ஸ் வெளியீடாக வருகிறது..

#amigo #amigotamilmovie #amigomovie #amigothriller #amigohorror #amigopanindianmovie #amigoapp #amigo2024

Amigo Official Trailer and movie news

—–

தங்கலான் Vs அந்தகன்..; ஒரே நாளில் மோதும் கசின்ஸ் பிரஷாந்த் – விக்ரம்

தங்கலான் Vs அந்தகன்..; ஒரே நாளில் மோதும் கசின்ஸ் பிரஷாந்த் – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தங்கலான் Vs அந்தகன்..; ஒரே நாளில் மோதும் கசின்ஸ் பிரஷாந்த் – விக்ரம்

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, தபு ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட்டான படம் `அந்தாதூன்’.

தற்போது இந்த படத்தை தமிழ் ரீமேக் ரைட்ஸ் பெற்று உருவாக்கி இருக்கிறார் தியாகராஜன்.

அந்தகன் என்ற இந்த படத்தில் பிரஷாந்த், கார்த்திக், சிம்ரன், வனிதா, கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை பிரஷாந்தின் தந்தையும் நடிகருமான தியாகராஜன் இயக்கியிருக்கிறார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த படத்தில் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகாமல் இருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதே நாளில் விக்ரம் நடித்துள்ள ‘தங்கலான்’ படமும் வெளியாகும் என ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோலார் தங்க வயல் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியிருக்கிறார்..

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் மாளவிகா நாயகியாக நடித்திருக்கிறார்..

கூடுதல் தகவல்…

விக்ரம் மற்றும் பிரசாந்த் இருவரும் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது..

Prashanths Andhagan and Vikrams Thangalaan clash on 15th August

விக்னேஷ் ரீ-என்ட்ரி.. ‘ரெட் ப்ளவர்’ பட போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

விக்னேஷ் ரீ-என்ட்ரி.. ‘ரெட் ப்ளவர்’ பட போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் ரீ-என்ட்ரி.. ‘ரெட் ப்ளவர்’ பட போஸ்டரை வெளியிட்ட விஜய்சேதுபதி

“RED FLOWER” படத்தின் புதிய லுக் போஸ்டர்ஐ வெளியிட்டார் நடிகர் “விஜய் சேதுபதி

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்கும் “RED FLOWER” ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்த திரைப்படம். கதையின் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கின்றார், எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.

நடிகர் விஜய் சேதுபதி “RED FLOWER” படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டார்.

நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக் போஸ்டர் இணையத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் அவரது கதாபாத்திர வடிவமைப்பும் , அவரது தோற்றமும் , நடிப்பும் நிச்சயம் படம் பார்ப்பவர்களை ஈர்க்கும்.

அவரது மறுபிரவேசத்தைச் சுற்றியுள்ள உற்சாகம், பெரியதோர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது..

ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படம், காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது.

காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர், இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.

மனிஷா ஜஷ்னானி நாயகியாக நடிக்கிறார். படத்தின் மற்ற கதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைக்க, படத்தொகுப்பு அரவிந்தன் ஆறுமுகம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.

ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே.மாணிக்கம் தயாரிக்கும் “Red Flower“மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்டுள்ள அக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.. இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை பற்றி இப்பபடம் பேசும் என்று இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் தெரிவித்தார்…

Vignesh starring Red flower poster launched by Vijaysethupathi

வன்முறையான சமூகம் இது.; ‘வள்ளியம்மா பேராண்டி’ அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

வன்முறையான சமூகம் இது.; ‘வள்ளியம்மா பேராண்டி’ அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வன்முறையான சமூகம் இது.; ‘வள்ளியம்மா பேராண்டி’ அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

வேரற்ற மனிதர்களானால் வெட்டி வீழ்த்தப்படுவோம்.. பாடகர் அறிவு விழாவில் ரஞ்சித் & இமான் பங்கேற்பு

தனி இசை கலைஞர் அறிவு எழுதி பாடி ஆடிய ‘வள்ளியம்மா பேராண்டி’ முதல் பாகம் இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பா.‌ ரஞ்சித், ராப் பாடகர் அறிவு, இசையமைப்பாளர் இமான், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் இமான்…

“தெருக்குரல் அறிவு என்பதை மாற்றும் நேரம் வந்து விட்டது. ஒவ்வொரு பாடலும் நன்றாக இருந்தது. நேற்று போன் பண்ணி சொந்த அண்ணணாக கேட்கிறேன். வாருங்கள் என்று சொன்னார். அதற்காக வந்து விட்டேன்.. வள்ளியம்மா பேராண்டி ஆல்பத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் அருமை வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளரும் இயக்குநருமான ரஞ்சித் பேசியதாவது…

ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள் தான் ஒரு கலைஞனை பக்குவப்படுத்தும், எதிர்மறையான விமர்சனங்களை கண்டுகொள்ள தேவையில்லை.. எனவே அறிவு நிறைய கற்றுக் கொள்வான் என்று நினைக்கிறேன்.

கலை இலக்கியத்தை அரசியல்படுத்த வேண்டும், அதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம்.. எனவே சினிமாவுக்கு வந்தோம்.

அரசியல் தன்மையோடு இருக்க வேண்டும்.. அந்த யோசனை இருப்பவர்களுடன் வேலை செய்ய வேண்டும்.. முதன் முதலில் என் முன் பாடிய அறிவு இப்போது நன்றாக வளர்ச்சி அடைந்த மாற்றத்தை பார்த்து வருகிறேன்.‌

காலா படத்திலும் அறிவு எழுதிய பாடல் அருமை. நான் பார்ப்பதற்கு முன்பே அம்பேத்கரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர். அது எனக்கும் அவருக்குமான நெருக்கத்தை அதிகரித்தது.

வடசென்னை, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களிலும் அறிவு எழுதிய பாடல்கள் மக்களிடம் சேர்ந்திருக்கிறது. அதிலும் எஞ்சாயி என்ஜாமி பாடல் மிகப்பெரிய ஹிட். அந்த பாடல் மூலம் அவர் பல பிரச்னைகளை சந்தித்தார், மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். அதற்கு பதிலடி தான் இந்த ‘வள்ளியம்மா பேராண்டி’ ஆல்பம்” என்று பேசினார்.

பாடகர் அறிவு பேசியதாவது…

“என்ஜாய் என்ஜாமி பாடலை பாடும் போது நான் பேச நினைத்தது எனக்கு பிரச்சினையாக இருந்தது.

இந்த சாதியில் பிறந்ததால் உனக்கு படிப்பு வராது என்று சொன்னார்கள். அதை கேட்டதும் கோபமாக வந்தது.. ஏன் அப்படி சொன்னார்கள் ? கலையை வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்த வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம்.

நாம் வேரற்ற மனிதர்களானால் எளிதில் வெட்டி வீழ்த்தப்படுவோம். ஆபத்தான வன்முறை நிறைந்த சமூகத்தில் நாம் இருக்கிறோம்.

ஒருவேளை நாளை கொல்லப்படுகிற ஆள் நான் ஆகவோ அல்லது எனக்கு தெரிந்த நபராகவோ இருக்குமோ என்ற பயத்துடன் வாழ வேண்டி இருக்கிறது.

நாம் எந்த தவறும் செய்யாதவர்கள். ஒட்டுமொத்த உலகத்தையும் நேசிக்கும் பேராண்மை கொண்ட மக்கள், நம் மாண்பை மீட்டெடுப்போம்” என்று பேசினார்.

Imman Ranjith Arivu speech at Valliyamma Perandi album launch

மலையாள மேதை எம்.டி. வாசுதேவனுக்காக ‘மனோரதங்கள்’-ஐ அர்ப்பணிக்கும் சூப்பர் ஸ்டார்கள்

மலையாள மேதை எம்.டி. வாசுதேவனுக்காக ‘மனோரதங்கள்’-ஐ அர்ப்பணிக்கும் சூப்பர் ஸ்டார்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள மேதை எம்.டி. வாசுதேவனுக்காக ‘மனோரதங்கள்’-ஐ அர்ப்பணிக்கும் சூப்பர் ஸ்டார்கள்

*’இலக்கிய மேதை’ எம் டி வாசுதேவன் நாயரை கொண்டாடும் வகையில், ஜீ 5 யின் ‘மனோரதங்கள்’ மலையாள ஆந்தாலஜி தொடரின் முன்னோட்டம் வெளியீடு*

எழுத்தாளர் எம் டி வாசுதேவன் நாயரின் 90 ஆண்டுகால பாரம்பரியத்தை போற்றி கொண்டாடும் வகையில் மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர கலைஞர்களின் பங்களிப்பில் தயாரான ‘மனோரதங்கள்’ எனும் மலையாள ஆந்தாலஜி தொடரை ஜீ 5 அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

எம் டி வாசுதேவன் நாயரின் பிறந்தநாளில் ஜீ 5 – ஒன்பது புதிரான கதைகளை கொண்ட ‘மனோரதங்கல்’ எனும் மலையாள ஆந்தாலஜி திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கிறது.

இதில் மலையாள திரையுலகின் ஒன்பது சூப்பர் ஸ்டார்கள் மற்றும் எட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களுடன் முன் எப்போதும் இல்லாத ஒத்துழைப்புடன் உருவாகி இருக்கிறது.

இந்த ஆந்தாலஜி தொடர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. மேலும் இந்தத் தொடர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இந்தியாவின் குடும்பங்கள் சகிதமாக கொண்டாடப்படும் மிகப்பெரிய பொழுது போக்கு டிஜிட்டல் தளம் மற்றும் பன்மொழி கதை சொல்லியான ஜீ 5 – மலையாள திரையுலகின் புதிய சகாப்தத்தை வெளிப்படுத்தும் வகையில் ‘மனோரதங்கல்’ எனும் பாரம்பரிய தொடரை தொடங்குவதாக அறிவித்தது.

‘எம் டி யின் பிரம்மாண்டமான படைப்பு ‘ எனும் முத்திரையுடன் தயாராகி இருக்கும் இந்த பிரம்மாண்டமான திரைப்படம் எதிர் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று திரையிடப்படும்.

மடத் தெக்கேபாட்டு வாசுதேவன் நாயர் என்ற அசலான பெயரைக் கொண்டிருந்தாலும், எம் டி வாசுதேவன் நாயர் என புகழ்பெற்ற இலக்கிய மேதையின் 90 ஆண்டு கால பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில் இந்த படைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

‘மனோரதங்கள்’ என்பது கடவுளின் சொந்த தேசமான கேரளாவின் பசுமையான பின்னணியில் மனித இயல்பின் சிக்கலான இருமையை ஆராயும் ஒரு சினிமா பயணமாகும். இதில் இடம்பெறும் அனைத்து கதைகளும் எம் டி வாசுதேவன் நாயரால் எழுதப்பட்டது.

இந்தத் தொடர் மலையாள சினிமாவில் நடிகர்கள் மற்றும் படைப்பாளிகளின் திறமைகளை உச்சநிலையில் ஒன்றிணைக்கிறது.‌ ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது கதைகள் மூலம் இந்த தொடர் மனித நடத்தையின் முரண்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.‌ இரக்கம் மற்றும் மனிதனுக்கு இயல்பாக இருக்க வேண்டிய அடிப்படை உணர்வு தூண்டுதல்கள் ஆகிய இரண்டின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

உன்னதம் – முதன்மை ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை ஆராய்வதன் மூலம் உலகளாவிய அனுபவங்கள், உணர்வுகளை துல்லியமாக பேசும் மனித நேயத்தின் செழுமையான மற்றும் நுட்பமான சித்தரிப்பை இந்த தொடர் வழங்குகிறது.

முதன் முறையாக நட்சத்திர நடிகர்களும், திறமையான இயக்குநர்களும் ஜீ 5 யில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய ஒன்பது அழுத்தமான கதைகளை இந்தத் தொகுப்பு கொண்டிருக்கிறது.

இதில் ‘ஒல்லவும் தீரவும்’ ( சிற்றலைகள் மற்றும் நதிக்கரை) – பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கிறார். இதுவே இந்த தொடரின் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

கடுக்கண்ணவ : ஒரு யாத்திரை குறிப்பு ( கடுக்கண்ணவ: ஒரு பயணக் குறிப்பு) – இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கிறார்.

ஷிலாலிகிதம் (கல்வெட்டுகள்) – இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் பிஜுமேனன் -சாந்தி கிருஷ்ணா – ஜாய் மேத்யூ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

காட்சி ( பார்வை) -இயக்குநர் ஷியாம பிரசாத் இயக்கத்தில் பார்வதி திருவோத்து – ஹரிஷ் உத்தமன் நடித்திருக்கிறார்கள்.

வில்பனா ( தி சேல்) – இயக்குநர் அஸ்வதி நாயர் இயக்கத்தில் மது- ஆசிப் அலி நடித்திருக்கிறார்கள்.

ஷெர்லாக்- இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் ஜரீனா மொய்து நடித்திருக்கிறார்கள்.

ஸ்வர்க்கம் துறக்குன்ற நேரம் ( சொர்க்கத்தின் கதவுகள் திறக்கும் தருணம்) – இயக்குநர் ஜெயராஜன் நாயர் இயக்கத்தில் கைலாஷ்- இந்திரன்ஸ்- நெடுமுடி வேணு- என் ஜி பணிக்கர் – சுரபி- லட்சுமி நடித்துள்ளனர்.

அபயம் தீடி வேண்டும் ( மீண்டும் ஒருமுறை புகலிடம் தேடி) – இயக்குநர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் சித்திக் – இஷித் யாமினி- நசீர் நடித்துள்ளனர்.

காதல் காட்டு ( கடல் காற்று) – ரதீஷ் அம்பாட் இயக்கத்தில் இந்திரஜித் – அபர்ணா பாலமுரளி நடித்திருக்கிறார்கள்.‌

இது தொடர்பாக ஜீ 5 இந்தியாவிற்கான தலைமை வணிக பிரிவு அதிகாரி மனீஷ் கல்ரா பேசுகையில், ” மனோரதங்கல் மூலம் இந்திய சினிமாவில் ஒரு திருப்புமுனையான தருணத்தை நாங்கள் காண்கிறோம். மலையாள சினிமாவின் ஆகச் சிறந்த திறமைசாலிகளை ஒன்றிணைத்திருப்பது… எம் டி வாசுதேவன் நாயரின் மரியாதை மற்றும் போற்றுதலுக்குரிய கொண்டாட்டமாகும். ஒரு இலக்கிய ஜாம்பவான்- சினிமாவில் தொலைநோக்கு பார்வையாளராக பயணித்த அவரது 90 ஆண்டு கால பாரம்பரியம் ஈடு இணையற்றது. மேலும் அவரது கதையை ஜீ 5 தளத்தில் இடம்பெறச் செய்திருப்பதில் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்.

இந்த தொகுப்பானது எம் டி வாசுதேவன் நாயரின் புத்திசாலித்தனத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களை பெற்ற… மலையாள சினிமாவின் விதிவிலக்கான படைப்பாற்றலை காட்சிப்படுத்துகிறது. இந்த கதைகளின் ஊடாக வளர்ந்து வரும் ரசிகர்களின் ஆர்வத்தையும், உலகளாவிய கவனயீர்ப்பையும் உணர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘மனோரதங்கல்’ படைப்பை டப்பிங் செய்து பரந்துபட்ட பார்வையாளர்களை சென்றடையச் செய்கிறோம். ” என்றார்.

பத்ம விபூஷன் டாக்டர் கமல்ஹாசன் பேசுகையில்…

,” எம் டி வாசுதேவன் நாயரின் வாழ்நாள் அபிமானி என்ற முறையில் ‘மனோரதங்கல்’ வழங்குவதில் பெருமை அடைகிறேன். இந்த தொகுப்பானது சாதாரண கதைகளின் தொகுப்பாக இல்லை. இந்த தொடர் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஆழமாக சென்று தாக்கும் என நான் நம்புகிறேன். ஏனெனில் இது உலகளாவிய அனுபவங்களையும், உணர்வு குவியலையும் குறிக்கிறது” என்றார்.

நடிகர் மோகன்லால் பேசுகையில்…

” மனோரதங்கல் எம் டி யின் கொண்டாட்டம் – வாசுதேவன் நாயரின் நம்ப முடியாத மரபு ..கதை சொல்லிகள் மற்றும் கலைஞர்களின் தலைமுறைகளை வடிவமைத்து ஊக்கப்படுத்திய ஒரு மரபு. பிரியதர்ஷின் இயக்கத்தில் ‘ஒல்லவும் தீரவும்’ படைப்பில் பணியாற்றியது உண்மையிலேயே மறக்க இயலாத அனுபவம்.

மனித உணர்வுகள் மற்றும் உறவுகளின் சாரத்தை.. கேரளாவின் அழகான மற்றும் கலாச்சார ரீதியாக வளமான பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள கதை. இந்தத் தொகுப்பு எங்கள் துறையில் தலை சிறந்த ஆளுமைகளை ஒன்றிணைக்கிறது.

மேலும் இந்த அழுத்தமான மற்றும் ஆழமாக பயணிக்கும் கதைகளை பார்வையாளர்கள் காண்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். எம் டி வாசுதேவன் நாயர் எனும் மேதைக்கு நினைவஞ்சலி செலுத்தும் வகையில் தயாரான இந்த படைப்பில் ஒரு அங்கமாக இருப்பது பெருமையாக உள்ளது.” என்றார்.

நடிகர் மம்முட்டி பேசுகையில்…

” மனோரதங்கல் படத்தின் ஒரு பகுதியாக இருப்பது திரையுலக பயணத்தில் ஒரு மைல் கல் மட்டுமல்ல தனிப்பட்ட முறையில் எனக்குக் கிடைத்த பாக்கியமும் கூட. இந்தத் தொகுப்பு எம்டி வாசுதேவ நாயர் எனும் மேதைக்கான காணிக்கை.

திறமையான இயக்குநரான ரஞ்சித் இயக்கத்தில் ‘கடுக்கண்ணவ: ஒரு யாத்திரை குறிப்பு’ படத்தில் வாசுதேவ நாயரின் பணி எனக்கு எப்போதும் உத்வேகத்தை அளித்தது. அதன் ஆழமான கதை மற்றும் உணர்வால் இதயங்களை தொடும் இந்தத் தொகுப்பின் ஒவ்வொரு பகுதியும் மலையாள திரையுலகின் புகழ்பெற்ற கதை சொல்லல் மற்றும் இயக்குநரின் திறமையை எடுத்துரைக்கிறது.

மனோரதங்கல் ஒரு தலைசிறந்த ஒப்பற்ற படைப்பு. மேலும் எம் டி யின் இந்த குறிப்பிடத்தக்க கொண்டாட்டத்திற்கும், அய்யாவின் மரபிற்கும்.. பங்களிப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார்.

இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில்…

” மனோரதங்கல் படத்திற்காக ‘ஒல்லவும் தீரவும்’ படத்தை இயக்கியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவங்களில் ஒன்றாகும். எம் டி வாசுதேவன் நாயரின் ஸ்கிரிப்டுகள் தலைசிறந்த படைப்புகள். ஒவ்வொன்றும் மனித இயல்பின் நுட்பமான உணர்வுகளை ஆராயும் கலை படைப்பு. அவரது பார்வையை திரையில் கொண்டு வருவது என்பது சவால் மிக்க பொறுப்பு மற்றும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்தத் தொகுப்பானது திரைத்துறையில் உள்ள பெரிய ஆளுமைகளின் கூட்டு முயற்சியாகும்.

ஒவ்வொருவரும் தங்களின் தனித்துவமான குரலை உருவாக்கி ஆழமான மனித மற்றும் உலகளாவிய தொடர்புள்ள கதைகளுக்கு தங்களின் பங்களிப்பை வழங்கி இருக்கின்றனர் எம்டியின் நீடித்த புத்திசாலித்தனத்திற்கு சான்றாக நிற்கும் மனோரதங்கல் படைப்பின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்றார் .

எம் டி வாசுதேவன் நாயர் எனும் இலக்கிய மேதையை உலகம் முழுவதும் திரைக்கு கொண்டு வரும் ஜீ 5 ஒரிஜினல் படைப்பான ‘மனோரதங்கல்’ எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி அன்று திரையிடப்படுகிறது.

Malayalam Anthology Manoradhangal A tribute to MT Vasudevan Nair

——–

More Articles
Follows