உங்க நம்பிக்கை துரோகியை என்ன செய்வீர்கள்.? தீர்ப்பு சொல்ல வருகிறான் ‘நடுவன்’

உங்க நம்பிக்கை துரோகியை என்ன செய்வீர்கள்.? தீர்ப்பு சொல்ல வருகிறான் ‘நடுவன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நீங்கள் மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள் ? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்வீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா ?

வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாப்பாத்திரமான பரத் நிவாஸ் பாத்திரத்தின் பயணம் தான் இப்படம்.

“நடுவன்” (மத்தியதர வாழக்கை வாழும் ஒருவன்) தன்னை ஏமாற்றியவர்களின் யதார்த்தத்தை உணரும் ஒரு இளம் தந்தையின் கதை.

ஏமாற்றத்தின் பின்னணியில், ​​அவர் தனது அறியாமையை உணர்ந்து, தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறார்.

அவர்கள், அவர்களது விருப்பத்தின் பேரில் செய்கிறார்களா அல்லது கட்டாயப்படுத்தப்படுகிற சூழ்நிலையில் தவறிழைக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க முயல்கிறார். கதாநாயகன் அந்த பாதையில் செல்லும்போது, ​​ சில கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டி வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் நேசித்து நம்பியவர்களின் ஏமாற்றுதல் மற்றும் வஞ்சத்தை அவர் கண்டுபிடித்து சமாளிக்க வேண்டும்.

இந்த அதிர்ச்சியூட்டும் பயண சூழ்நிலைகளில், அவர் செல்லும் போது கதை ஒரு திரில்லராக மாறுகிறது. ஆனால் இந்த பயணத்தில் அவர் வெற்றி பெறுவாரா, அல்லது அவர் நேசிப்பவர்களுக்காக தனது அறியாமைக்கு அடிபணிவாரா? என்பதே கதை.

தயாரிப்பளார் Lucky Chhajer படம் குறித்து கூறியதாவது,

வாழ்வில் முடிவுகளை எடுப்பது என்பது ஒரு சிக்கலான செயல். வஞ்சம் எப்படி ஏமாற்றமாக மாறுகிறது, யாரோ ஒருவர் அதை எப்படி ஏற்றுக்கொள்கிறார் என்பதை நடுவன் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்.

இந்த படம் எனது முதல் படம் மட்டுமல்ல, மனித அனுபவத்தையும் கூறும் கதை என்பதாலும் இந்த திரைப்படத்திற்காக நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். SonyLIV-ல் திரைப்படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

விரைவில் SonyLIV-ல் நடுவன் திரைப்படம் வெளியாகும்.

Make way for the gripping #Naduvan coming soon on SonyLIV

பொய் செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்த அமைச்சர்.; தங்கர் பச்சான் தடாலடி அறிக்கை.

பொய் செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்த அமைச்சர்.; தங்கர் பச்சான் தடாலடி அறிக்கை.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மீண்டும் மின் கட்டண கோரிக்கை குறித்து தங்கர் பச்சான் விளக்கம்.

எனது வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி மின் கட்டணம் குறித்த என் கோரிக்கையை உடனே சரி செய்து விட்டதாகவும், நான் அதற்குப்பின் மன்னிப்பு கோரியதாகவும் இரண்டாவது முறையாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கேள்வி ஒன்றுக்கு சட்ட மன்றத்தில் பதில் அளித்துள்ளார்.

உண்மைக்கு மாறான செய்தியை மீண்டும் சட்டமன்றத்தில் பதிவு செய்ததுடன் ஒரு மாதத்திற்கு முன் முதலமைச்சருக்கு நான் விடுத்திருந்த கோரிக்கை குறித்து பதில் அளிக்க மறுக்கின்றார்.

எனது கோரிக்கை மின் கட்டணத்தை சரி பார்க்கக்கோரி அல்ல.

மாதாந்திர மின் கட்டண முறையை செயல் படுத்தாததினால்தான் மின் கட்டணம் பல மடங்காக செலுத்த வேண்டியுள்ளது என்பது குறித்துதான்.

முதலமைச்சர் இது குறித்து தேர்தலுக்கான வாக்கு சேகரிப்பின் போதும் திமுக தேர்தல் அறிக்கையிலும் மக்களிடத்தில் கொடுத்த வாக்குறுதியைத்தான் நிறைவேற்றும்படி கோரிக்கை விடுக்கின்றேன்.

இது என்னுடைய வீட்டின் பிரச்சினை மட்டுமல்ல; தமிழ்நாட்டிலுள்ள அனைவரின் பிரச்சினை என்பதையும் அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன்.

இப்பொழுதாவது மின்துறை அமைச்சர் என் கோரிக்கையை உணர்ந்து முதலமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வார் என நம்புகின்றேன்.

Thangar bachan condemns minister senthil balaji’s act

‘கட்டில்’ பட இயக்குனரை வாழ்த்திய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

‘கட்டில்’ பட இயக்குனரை வாழ்த்திய கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனிடம் “கட்டில்” திரைப்பட நூலை வழங்கி வாழ்த்து பெற்றிருக்கிறார் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு.

இதுபற்றி அவர் கூறியதாவது..

கொரோனா இரண்டாம்
அலைக்குப்பிறகு 50% பார்வையாளர்களுடன் திரையரங்கம் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த சூழலில் கட்டில் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.
அதன் பொருட்டு உயர்பெருமக்கள் பலரையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறேன்.

தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றேன்.

பீ.லெனின், வைரமுத்து, ஶ்ரீகாந்த்தேவா,
மதன்கார்க்கி, சித்ஶ்ரீராம், சிருஷ்டிடாங்கே, இந்திராசொந்திரராஜன், கீதாகைலாசம், மெட்டி ஒலிசாந்தி, மாஸ்டர்நிதீஷ் ஆகிய பிரபலங்களோடு களமிறங்கும் கட்டில் திரைப்பட ஆடியோ ரிலீஸ் விரைவில் நடைபெற உள்ளது.

இவ்வாறு கட்டில் திரைப்பட இயக்குனரும், ஹீரோவுமான இ.வி.கணேஷ்பாபு கூறினார்

Pondy governor Tamilisai wishes to Kattil director Ganesh babu

ரஜினி – விஜய் படங்களை விளாசிய கே.ராஜன்..; ‘அடங்காமை’ இசை விழாவில் அதிரடி

ரஜினி – விஜய் படங்களை விளாசிய கே.ராஜன்..; ‘அடங்காமை’ இசை விழாவில் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்பில் மறைந்துள்ள விரோதத்தையும் துரோகத்தையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடங்காமை’.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பவர் ஆர் கோபால். இவர், திரையுலகில் 15 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் பெற்றுள்ளவர். தன் முதல் படமாக ‘மங்களாபுரம்’ என்ற படத்தை இயக்கியவர்.

இலங்கையைச் சேர்ந்த சரோன் நாயகனாக நடித்திருக்கிறார். ஆந்திராவில் பிரபல விளம்பர மாடலான பிரியா கதாநாயகி. மற்றும் யாகவ் முரளி, கார்த்திக் கண்ணா, முகிலன் முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு P.G. வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன். திரை இசை M.S ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.ரமானிகாந்தன், கெறால்ட் மென்டிசன், நடனம் சீதாபதிராம். சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.

இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன். புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெற்றது.

இதில் கே ராஜன், வ. கௌதமன், நடிகை வனிதா, கவிஞர் சினேகன், பாடகர்கள் செந்தில் ராஜலட்சுமி ஆகியோருடன் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் கே ராஜன் பேசும்போது…

ரஜினியின் தர்பார் படம் மீது எனக்கு கோபம் உள்ளது. படத்தை முழுவதும் பாம்பேயில் (மும்பை)யில் எடுத்தனர்.

இங்குள்ள தொழிலாளர்களுக்கு அந்த படத்தில் பணிபுரிய வாய்ப்பில்லாமல் போய்விட்டது. முருகதாஸ் அங்கே சென்று நடிகையை தேடுகிறார்.

தமிழ் மொழியில் படம் எடுத்தாலும் தமிழில் பெயர் வைப்பதில்லை. தமிழ் மோகம் குறைந்துவிட்டது.” இவ்வாறு பேசினார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் BEAST படத்தலைப்பை மறைமுகமாக தாக்கி பேசினார்.

Producer K Rajan slams Vijay and Rajini

எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் படங்களுக்கு பாடல் எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் மரணம்..; அவரைப் பற்றிய தகவல்கள்

எம்ஜிஆர் ரஜினி கமல் விஜய் படங்களுக்கு பாடல் எழுதிய கவிஞர் புலமைப்பித்தன் மரணம்..; அவரைப் பற்றிய தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கவிஞர் புலமைப்பித்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85.

அவரது உடல் மருத்துவமனையிலிருந்து நீலாங்கரையில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘புலமைப்பித்தன்’ பற்றி சில தகவல்கள்…

1935ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் பிறந்தவர் புலமைபித்தன்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்து பெரிய வெற்றி பெற்ற ‘குடியிருந்த கோயில்..’ திரைப்படத்தில் இடம்பெற்ற நான் யார்.. நான் யார்.. நீ யார்… என்ற பாடலின் மூலம் புகழ் பெற்றவர் புலமைப்பித்தன்.

மேலும் அடிமைப்பெண், குமரிக்கோட்டம், நல்லநேரம், நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, உலகம் சுற்றும் வாலிபன் என படங்களுக்கும் பாடல்களை எழுதி உள்ளார்.

ரஜினியின் பணக்காரன், சிவா உள்ளிட்ட பல படங்களுக்கும் தங்கமகன் படத்தில் இடம்பெற்ற “ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ” பாடலையும் எழுதியிருக்கிறார்.

கமல் நடித்த நாயகன் படத்தில் நிலா அது வானத்து மேலே பாடலை தவிர மற்ற அனைத்து பாடல்களையும் (“நான் சிரித்தால் தீபாவளி”… “நீ ஒரு காதல் சங்கீதம்) எழுதியவர் இவர்தான் தான்.

இவர் 1000க்கும் மேற்பட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியுள்ளார்.

மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்தின் அறிமுக பாடலான ஆயிரம் நிலவே வா… என்ற பாடலையும் இவர் தான் எழுதினார்.

பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தில் இடம் பெற்ற “அம்மாடி இது தான் காதலா” மற்றும் “காமதேவன் ஆலயம்” ஆகிய சூப்பர் ஹிட் பாடலையும் இவர்தான் எழுதினார்.

விஜய்யின் தெறி படத்தில் இடம்பெற்ற (வளைகாப்பு பாடலான) தாய்மை வாழ்கென… என்ற பாடலை எழுதியவரும் புலமைப்பித்தன் தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lyricist Pulamaipithan passes away at 85

தமிழ்நாட்டின் முதல் திரையரங்க உரிமையாளரின் பேத்தி அறிமுகமாகும் ‘யுத்த சத்தம்’

தமிழ்நாட்டின் முதல் திரையரங்க உரிமையாளரின் பேத்தி அறிமுகமாகும் ‘யுத்த சத்தம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமரன் வழங்கும், இயக்குநர் எழில் இயக்கத்தில், ராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “யுத்த சத்தம்” படத்தில், நடிகை சாய் பிரியா தேவா நாயகியாக நடிக்கிறார் !

சினிமாவின் மரபணுக்கள் இரத்தத்தின் வழியாகவே ஓடும் குடும்பங்களிலிருந்து, சிறந்த திறமைகள் திரைப்படத் தொழிலுக்கு வருவது தடுக்க முடியாததாகவே உள்ளது.

தமிழ் திரையுலகம் அத்தகைய சிறந்த திறமையான நடிகர்கள் பலரை கொண்டாடி ஏற்றுக்கொண்டிருக்கிறது.

அவர்களிடம் தன்னிச்சையாகவே நடிப்பு திறமை அதிகமாக இருக்கிறது, பார்வையாளர்களின் இதயங்களை அவர்கள் எளிதில் வென்றுவிடுகின்றனர்.

இந்த வரிசையில் தமிழ் சினிமா உலகில் நாயகியாக நடிகை சாய் பிரியா தேவா புதிதாக இணைந்திருக்கிறார்.

இயக்குனர் எழில் இயக்கிவரும், மர்மங்கள் நிறைந்த திரில்லர் திரைப்படமான “யுத்த சத்தம்” படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார்.

தமிழ் சினிமா திரையரங்கு வர்த்தகத்தில் கொடிகட்டி பறந்த புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், நடிகை சாய் பிரியா தேவா தனது முந்தைய தலைமுறையினரின் கலைத்திறமையை இயல்பிலேயே பெற்றுள்ளார்.

நடிகை சாய் பிரியா தேவா இது குறித்து கூறியதாவது….

எனது தாத்தா தமிழ்நாட்டின் முதல் திரையரங்கான முருகன் டாக்கீஸ் (மிண்ட், சென்னை), உரிமையாளர் என்பதில் எனக்கு எப்போதுமே பெருமை உண்டு.

நான் வளரும்போது திரைப்படங்களின் ஈர்ப்பு மட்டுமல்லாது, பார்வையாளர்கள் படங்களை எப்படி ரசிக்கிறார்கள் என்பதையும் பார்த்தே வளர்ந்தேன்.

இது பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு வாங்க வேண்டும் என்கிற ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது. அப்படியாகத்தான் நடிப்பு துறையை என் தொழிலாக நான் தேர்ந்தெடுத்தேன்.

முதலில் சினிமாவில் நடிப்பதை என் குடும்பத்தினர் விரும்பவில்லை. ஆனால் என் ஆர்வத்தை கண்டு, என்னை புரிந்துகொண்டு, பின்னர் எனக்கு ஆதரவளித்தனர்.

நான் நடிப்பை முறையாக கற்றுக்கொண்டு மாடலிங்க் செய்து என்னை படிப்படியாக தயார் செய்து கொண்டேன்.

இயக்குநர் பி வாசு சாரின் ‘சிவலிங்கா’ திரைப்படத்தில் இரண்டாவது நாயகி கதாபாத்திரத்தில் நடித்ததுதான் எனது முதல் திரைப்பட அறிமுகம், அதன் பிறகு நான் ஒரு மலையாள படத்தில் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக நாயகி கதாபாத்திரத்தில் நடித்தேன்.

இயக்குநர் எழில் சாரின் “யுத்த சத்தம்” படத்திற்காக ஆடிஷன் அழைப்பு வந்தபோது நான் மிக மிக மகிழ்ச்சியடைந்தேன்.

என்னால் முடிந்தளவு மிக சிறப்பாக ஆடிஷனில் நடித்து காட்டினேன். மூன்று நாட்களுக்குப் பிறகு, நான் தான் இப்படத்தின் நாயகி என்ற தகவல் கிடைத்தது.

இந்த சிறந்த வாய்ப்புக்காக எழில் சார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

இயக்குநர் எழில் சார் எந்த வகை திரைப்படங்களை உருவாக்கினாலும், அவரது படங்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். அவரது படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது எனது அதிர்ஷ்டம் என்றே கருதுகிறேன்.

அதிலும் மிகசிறந்த நடிகர்களான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் இருவருடனும் நடிப்பது பெருமை என்றார்.

“யுத்த சத்தம்” திரைப்படத்தில் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் மற்றும் கௌதம் கார்த்திக் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இயக்குநர் எழில் திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
தமிழகத்தின் முன்னணி குற்ற நாவலாசிரியர்களில் ஒருவரான ராஜேஷ்குமார் எழுதியுள்ளார்.

சாய் பிரியா தேவா நாயகியாக நடிக்க பிச்சைக்காரன் புகழ் மூர்த்தி, மிதுன் மகேஸ்வரன், முத்தையா கண்ணதாசன், , ரோபோ சங்கர், காமராஜ், மது ஸ்ரீ, மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, கும்கி அஷ்வின் மற்றும் மற்றும் பல முக்கிய கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டி இமான் இசையமைக்க, ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.

கனல் கண்ணன் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிய, கோபி கிருஷ்ணா படத்தொகுப்பு செய்கிறார். சுகுமார் கலை இயக்கம் செய்ய, முருகேஷ் பாபு வசனங்கள் எழுதுகிறார். யுகபாரதி பாடல் வரிகள் எழுத, தினேஷ், தினா மற்றும் அசோக் ராஜா நடன இயக்கம் செய்துள்ளனர்.

Kallal Global Entertainment சார்பாக D.விஜயகுமரன் “யுத்த சத்தம்” படத்தை தயாரிக்கின்றார். இப்படத்தை வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Sai Priya Deva plays female lead in Yuddha Saddham

More Articles
Follows