தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இது சரித்திர கால படங்களின் சீசன். நிறைய சரித்திர கால படங்களை நாம் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் இதுவரை சொல்லப்படாத ஒரு புதுமையான கதையாக ஒரு திரைப்படமாக சமீபத்தில் வெளியான படம் ‘யாத்திசை’.
சுமார் 1300 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற பாண்டிய கால வரலாறை மிகவும் தத்துரூபமாக குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருந்தனர் படக்குழுவினர்.
முக்கியமாக புது முகங்களை வைத்து இப்படி ஒரு பிரம்மாண்டத்தை தங்களால் கொடுக்க முடியும் என தமிழ் சினிமாவுக்கு இந்த படம் சவால் விட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
இதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரியாக நடித்திருந்தார் சாம்சன். இவரின் யதார்த்த நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
இவரின் சொந்த ஊர் பாலக்காடு. கல்லூரி முடித்து சென்னைக்கு வந்து லயோலாவில் டிப்ளமோ கோர்ஸ் முடித்து விட்டு, சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பித்தார்.
கிடைத்ததோ சிறு சிறு வேடங்கள்தான். அதில் முக்கியமானது, நாகாவின் அனந்தபுரம் வீடு. இருந்தாலும் சளைக்காமல் பல இயக்குனர்களை சந்தித்து இருக்கிறார்.
இவரது நண்பர் சுரேஷ்குமார், காஸ்ட்யூம் டிசைனராக இருக்கிறார். அவர் மூலம் தான் ‘யாத்திசை’ இயக்குனர் தரணி ராசேந்திரனை சந்தித்து இருக்கிறார்.
அதில் தேவரடியார்களை கவனித்துக் கொள்ளும் கோயில் அதிகாரிக்கான காஸ்ட்யூம்களை போடச் சொல்லி இருக்கிறார். மிகப் பொருத்தமாக இருக்கவே படப்பிடிப்புக்கு செஞ்சிக்கோட்டைக்கு அழைத்துப் போயிருக்கிறார்.
யாத்திசை படம் பார்த்த நண்பர்கள், உறவினர்களிடமிருந்து பாராட்டுக் கால்கள் வந்து கொண்டே இருக்கிறதாம். அடுத்து ஆறு படங்கள் கமிட் ஆகி இருக்கிறது. மலையாளம் தெரியும் என்பதால் சில மலையாளப் பட வாய்ப்புகளும் வந்திருக்கிறதாம்.
மார்ஷியல் ஆர்ட்ஸ், களறி பயின்றவர். கிரிக்கெட், அத்லடிக், த்ரோ பால் போன்ற விளையாட்டுகளில் மாநில அளவில் பதக்கங்களை வென்றவர் சாம்சன்.
கலக்குங்க யாத்திசை சாம்சன்… யாத்திசை என்றால் தென் திசை என்று அர்த்தம். இனி எல்லா திசையிலும் கலக்குங்க சாம்சன்.
Lot of opportunities for yaathisai samson after its release