தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு பஸ் இல்லை; எச்சில் துப்பினால் அபராதம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு பஸ் இல்லை; எச்சில் துப்பினால் அபராதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mtc bus கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த 68 நாட்களாக பொது முடக்கம் அமலில் இருந்தது.

தற்போது இன்று ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூன் 30-ந் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அந்த அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு மற்றும் தனியார் பஸ்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அனுமதிக்கப்படுகின்றன. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொது பேருந்து போக்குவரத்து கிடையாது.

65 வயதுக்கு மேற்பட்டவர்கள், அதிக சுகவீனமானவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகள் ஆகியோர் மருத்துவ காரணங்கள் மற்றும் அவசர தேவைகளுக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியே வரலாம்.

ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி தொற்றுக்கு விலகி கொள்ள வேண்டும். பணியிடங்களில் இந்த செயலியை அனைத்து ஊழியர்களும் பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாக இருக்கலாம்.

பொது இடங்களில் துப்பினால் அபராதத்துடன் தண்டனை விதிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்துவது, பான், குட்கா, புகையிலை ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாஸ்கள் இல்லாமல் ஆட்களை அழைத்து செல்லும் நிகழ்வுகளில், குடியிருப்பு நலச்சங்கங்கள், கட்டுமான சங்கங்கள் போன்றவை கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.

நகர பஸ்களில் டிக்கெட், பண பரிமாற்றத்தை தவிர்க்க பயணிகளுக்கு மாதாந்திர பாஸ்களை வழங்க வேண்டும். பஸ்கள், பாஸ் வழங்கும் இடங்களில் ‘கியூஆர் கோர்ட்’ பேனல்களை வைத்து அவற்றை வைத்து டிக்கெட், பாஸ்களை வழங்கலாம்.

இந்த வசதிகள் இல்லாத பயணிகளுக்கு மட்டும் டிக்கெட்களை வழங்க வேண்டும். பஸ் புறப்படும் முன்பும், வந்து சேர்ந்த பின்பும் சுத்தமாக கழுவப்பட வேண்டும்.

பயணிகள் பின்பக்க வாசல் மூலம் ஏறவும், முன்பக்க வாசல் மூலம் இறங்கவும் வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் பயணிகள் வசதிக்காக ‘சானிடைசர்’ வைக்கப்பட வேண்டும்.

ஏ.சி. எந்திரங்களை பஸ்களில் இயக்கக் கூடாது. எந்த இருக்கையில் பயணி உட்கார வேண்டும், எது காலியிடமாக வைக்கப்பட வேண்டும் என்பதை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

பஸ் ஓட்டுனர், நடத்துனரின் உடல்வெப்பத்தை தினமும் சோதிக்க வேண்டும். முககவசம், கையுறையை அணிய வேண்டும். பஸ்சில் ஏறும்போது பயணிகளை முககவசம் அணியவும், சானிடைசரை பயன்படுத்தவும் அறிவுறுத்த வேண்டும்.

‘லைன்’ பரிசோதனை ஆய்வாளர்கள், பஸ் நிறுத்தங்களில் அமர்த்தப்பட்டு, பயணிகள் குறிப்பிட்ட இடைவெளியை கடைபிடித்து பஸ்களில் ஏறுகிறார்களா? போதிய ‘சீட்’ வசதி இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

பயணிகள் கண்டிப்பாக வாய் மற்றும் மூக்கை முககவசம் அல்லது துணியால் மூடியிருக்க வேண்டும். ஒரு பஸ்சில் இருக்கைகள் இல்லாவிட்டால் பயணிகள் அடுத்த பஸ்சுக்கு காத்திருக்க வேண்டும்.

இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுடன் யாரும் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பஸ் நிறுத்தங்கள் அனைத்தும் சுத்திகரிக்கப்பட்டு இருப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். அனைத்து பஸ் முனையம் மற்றும் நிறுத்தங்கள் ஒரு நாளைக்கு 2 முறை சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த அரசாணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி விளையாட்டு வளாகங்கள், அரங்கங்களை பார்வையாளர்கள் இல்லாமல் திறக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேஸ்ட் பேப்பர் சேனலில் வேஸ்ட் நியூஸ்.; மனோபாலா சிங்கமுத்து மீது வடிவேலு புகார்

வேஸ்ட் பேப்பர் சேனலில் வேஸ்ட் நியூஸ்.; மனோபாலா சிங்கமுத்து மீது வடிவேலு புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

mano balaதமிழ் சினிமாவில் கவுண்டமணி செந்தில் காமெடி போல வடிவேலு சிங்கமுத்து காமெடி கூட்டணி அமைந்திருந்தது.

இவர்கள் இணைந்து செய்த காமெடி காட்சிகள் இன்றுவரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.

இவர்கள் இடையே ஏற்பட்ட நிலம் தகராறு பிரச்சினை நீதிமன்றம் வரை சென்றது. எனவே படங்களில் இணைந்து நடிக்கவில்லை.

சமீபத்தில் நடிகர் மனோபாலா ஒரு இணையத்தள பேட்டியில் நடிகர்கள் வடிவேலு மற்றும் சிங்கமுத்து பற்றி சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வடிவேலு, நடிகர் சங்கத்திற்கு சிங்கமுத்து, மனோபாலா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்

அதில்… “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன்.

நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்.

ஏற்கெனவே நில மோசடி விவகாரம் தொடர்பாக எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து இருவர் மீதும் நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்”

என அந்த கடிதத்தில் வடிவேலு குறிப்பிட்டுள்ளார்.

பெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதல்வர்

பெப்சி தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்பு : அடிக்கல் நாட்டினார் முதல்வர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

edappadi palanisamyசென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார்.

அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 1000 குடியிருப்புகள் அமைய உள்ளது.

ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் இரண்டாம் கட்டமாக, 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெப்சி சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் வழங்கினார்.

இதை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இசை மேதை நல்லப்பசுவாமி நினைவுத் தூணையும் காணொலி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’.!

‘ஊமை விழிகள்’ புகழ் அரவிந்தராஜ் இயக்கும் பசும்பொன் தேவர் வாழ்க்கை வரலாறு படம் ‘தேசிய தலைவர்’.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Desiya Thalaivarபசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாக உள்ளது. ஜெ.எம்.பஷீர் விரதமிருந்து தேவராக வேடமிட்டு நடிக்கிறார். இதை ஜெ.எம்.பஷீர் உடன் இணைந்து ஏ.எம்.சௌத்ரி தயாரிக்கிறார். இந்த படத்தை அரவிந்தராஜ் இயக்குகிறார். இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, ‘கருப்பு நிலா’ என பல வெற்றி படங்களை தந்தவர்.

தேவர் சமூகத்தை சேர்ந்த சௌத்ரி தங்கள் தேவரை போல உருவ அமைப்பில் உள்ள பஷீரிடம் தேவராக படத்தில் நடிக்க கேட்டவுடன் உடனே ஒப்புக் கொண்டார். தேவர் மீது அதிக மரியாதை கொண்ட பஷீர் வருடா வருடம் பசும்பொன் சென்று தேவரை வணங்க கூடியவர்.

ஏ.ஆர்.பெருமாள் தேவர் என்பவர் பசும்பொன் தேவருடன் சிறு வயது முதல் தேவரின் அரசியலிலும் பங்கு பெற்ற தேவரின் சிஷ்யராவார். அவர்கள் எழுதிய “முடிசூடா மன்னர் பசும்பொன் தேவர்” என்ற புத்தகம் மூலம் வரலாறு உண்மைகள் படமாக்கபட உள்ளது.

முக்கிய வரலாற்று தலைவர்கள் படத்தில் இடம்பெறுவதால் முக்கிய வேடங்களில் நடிக்க பிரபல நடிகர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் படக்குழுவினர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு முடிந்த பிறகு படப்பிடிப்பு விரைவில் தொடங்கயுள்ளது.

ரஜினி-தனுஷை அடுத்து விக்ரமை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

ரஜினி-தனுஷை அடுத்து விக்ரமை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chiyaan 60 Karthik Subbaraj to team up with Vikram ஜிகர்தண்டா, பீட்சா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கார்த்திக் சுப்பராஜ்.

இவர் ரஜினி ரசிகர் என்பதை விட ரஜினி வெறியர் என்றே தன்னை அழைத்துக் கொள்வார்.

இதனையடுத்து ரஜினியை பேட்ட படத்திற்காக இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

இப்படம் 1980களில் பார்த்த ரஜினியை மீண்டும் கொண்டு வந்திருந்தார்.

தற்போது தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் அடுத்த படத்தில் விக்ரம் உடன் இணையவுள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் இந்த படத்தை தயாரிக்கிறாராம்.

அனிருத் அல்லது சந்தோஷ் நாராயணன் இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Chiyaan 60 Karthik Subbaraj to team up with Vikram

‘அவள் அப்படித்தான்‘ ரீமேக்: ஸ்ரீப்ரியாவாக ஸ்ருதி; ரஜினி-கமல் யார்?

‘அவள் அப்படித்தான்‘ ரீமேக்: ஸ்ரீப்ரியாவாக ஸ்ருதி; ரஜினி-கமல் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Aval Appadithan remake Simbu and Dulquer team up for first timeகமல் ரஜினி இணைந்து நடித்த படங்களில் முக்கியமான படம் ‘அவள் அப்படித்தான்’.

ருத்ரய்யா இயக்கத்தில் உருவான இந்த படம் 1978ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ஸ்ரீப்ரியா கதையின் நாயகியாக நடித்திருந்தார். ரஜினி விளம்பர நிறுவனத்தின் ஓனராகவும் அவர் ஆபிசில் கமலும் ஸ்ரீப்ரியாவும் வேலை செய்வதாகவும் கதை இருக்கும்.

டாக்குமெண்ட்ரி பட இயக்குனராக கமல் நடித்திருப்பார்.

இப்படத்தில் இடம் பெற்ற உறவுகள் தொடர்கதை பாடல் காலத்தால் அழிக்க முடியாத பாடலாக இன்றும் நிலைத்து நிற்கிறது.

தமிழக அரசின் விருது இந்த படத்திற்கு கிடைத்தது. ஸ்ரீப்ரியாவும் விருது பெற்றார்.

இந்த நிலையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவித்துள்ளார்.

இவர் அதர்வா, சமந்தா இணைந்த பாணா காத்தாடி படத்தை இயக்கியவர்.

தற்போது பிளான் பண்ணி பண்ணனும் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இவரின் திட்டப்படி ரஜினியாக சிம்புவையும், கமல்லாக துல்கரையும் ஸ்ரீப்ரியாவாக ஸ்ருதிஹாசனையும் நடிக்க வைக்க விரும்புகிறாராம்.

இவர்கள் சம்மதித்தால் படம் விரைவில் தொடங்கும் என நம்பலாம்.

Aval Appadithan remake Simbu and Dulquer team up for first time

More Articles
Follows