தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் ஐ. லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த 2011ல் பேராசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் இவர்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது பெண்கள் குறித்து இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.
இதனால் லியோனியின் நியமனத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பதவியேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் லியோனி.
“பாடநூல்களை மாணவர்கள், விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவதே என் நோக்கம்.
நான் பள்ளி மாணவராக இருந்த போது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை மற்றும் அவரது பேச்சுகள் அப்போதைய பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தற்போது 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார் லியோனி.
Leoni wants to include Kalaignar life history in school books