வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் ஆல்பம் சாங்

வரலாற்று நாயகன் SP பாலசுப்பிரமணியம் குரலில் ஆல்பம் சாங்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன், ஒரு தனித்த ஆல்பம் பாடலை, மறைந்த பாடகர், சரித்தர புகழ் வாய்ந்த, SP பாலசுப்பிரமணியம் குரலில் உருவாக்கியுள்ளார். இப்பாடலை கவிஞர் குட்டி ரேவதி எழுதியுள்ளார்.

இசையமைப்பாளர் விக்னேஷ்வர் கல்யாணராமன் இப்பாடல் குறித்து கூறுகையில்…

இது என் வாழ்நாளின், பொக்கிஷமான மறக்கவியலாத அனுபவம், திரு SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் பணிபுரிந்த அனுபவம் முழுதிலும், ஒரு ரசிகனின் மனோபாவத்தில் தான் இருந்தேன். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டுமென்பது எனது நெடுநாளைய கனவு, அவருடனான எனது முதல் சந்திப்புகள், சரியாக 10 வருடங்களுக்கு முன்பானது. கோடம்பாக்கத்தில் நான் சவுண்ட் இன்ஞ்சினியராக வேலை பார்த்த ஸ்டுடியோவில் அவர் தன் பாடல்களின் பதிவுக்காக அடிக்கடி வருவார். “100 வருட இந்தியா சினிமா” விழாவிற்காக அவர் பாடிய பாடலுக்கு நான் தான் சவுண்ட் இன்ஞ்சினியராக வேலை பார்த்தேன்.

அப்போது தான் முதன் முதலில் அவரது டைரியில் எனது பெயர் சவுண்ட் இன்ஞ்சினியராக இடம்பெற்றது.

“காத்தாடி மேகம்” பாடல் அனுபவம் குறித்து கூறுகையில்..

திரு.SP பாலசுப்பிரமணியம் அவர்களுடன் ஒரு தனித்த ஆல்பம் பாடலில் பணிபுரிய வேண்டுமென பல நாட்களாக கனவு கொண்டிருந்தேன்.

முன்பே தனித்த ஆல்பம் பாடல்களில் அவர் பங்கு கொண்டிருந்தாலும் அவையாவும் ஆன்மிகம் குறித்ததாகவும், தத்துவார்த்தம் மிக்க பாடல்களாகவும் மட்டுமே இருந்தன. அந்த சமயத்தில் கவிஞர் குட்டி ரேவதியுடன் வேறொரு பணியில் இருந்தபோது என் கனவு குறித்து கூறினேன். அவரும் மகிழ்ச்சியடைந்தார்.

இந்த பாடலுக்காக திரு.SP பாலசுப்பிரமணியம் அவர்களை அணுகியபோது, புதுமுக இசையமைப்பாளர் என்கிற எந்தவித தயக்கமும் இல்லாமல் உடனடியாக பாட சம்மதித்தார்.

அவர் அமெரிக்க சுற்று பயணத்தில் இருந்த போது, இப்பாடலின் டிராக்கை இணையம் வழியே அவருக்கு அனுப்பினேன். டிராக்கை கேட்டவர் மிகவும் மகிழ்ந்து என்னை பாரட்டினார். பிற்பாடு இசைஞானி இளையராஜா அவர்களுடன் வேறு சில பாடல் பணிகளில், அவர் தொடர்ந்து பணியாற்றியதால் நான் நான்கைந்து மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இசைஞானி இளையராஜா அவர்களுடன் ஒரு பாடல் பதிவு தடைபட்ட நேரத்தில், விரைந்து வந்து, எனது பாடலை பாடி தந்தார். பாடல் பதிவின் போது ‘உனக்கு நிறைய திறமை இருக்கிறது, நல்லபடியாக வர வாழ்த்துக்கள்’ என வாழ்த்தினார். பாடல் ஒலிபதிவிற்கு பிறகு அவரை வைத்து வீடியோ எடுக்க ஆசை பட்டேன், ஆனால்திடீரென நிகழ்ந்த அவரது மறைவு, நாம் யாருமே எதிர்பார்க்காத ஒரு அதிர்ச்சியான நிகழ்வு. ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் காலத்தால் அழிக்க முடியாத பொக்கிஷமாக என்னுடன் உள்ளது.

“காத்தாடி மேகம்“ பாடலின் தாமதம் குறித்து கூறுகையில்..

அவர் மறைந்த நிலையில் கோடான கோடி ரசிகர்கள் அவர் மீது கொண்டிருக்கும் அன்பு, அனுதாபமாக இப்பாடலின் மீது விழ வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் தான் பாடலின் வெளியீட்டினை தள்ளி வைத்தேன். இப்போது அவரது பிறந்த நாளில் அவரது நினைவாக இப்பாடலை வெளியிடுவது மகிழ்ச்சி.

Late singer SPB’s album song out

திமுக ஆட்சி எப்படியிருக்கு..? ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதியளித்த பின் சீமான் பேட்டி

திமுக ஆட்சி எப்படியிருக்கு..? ஸ்டாலினை சந்தித்து நிவாரண நிதியளித்த பின் சீமான் பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinநடிகரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருமான சீமான் மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோர் இன்று தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்தனர்.

அப்போது முதலமைச்சரின் கொரோனா பேரிடர் நிதிக்கு, சீமான் நிதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியதாவது…

“எனது தந்தை இறப்பின் போது இரங்கல் அறிக்கை வெளியிட்டார். அதுவே ஆறுதலாக இருந்தது. அவர் அதோடு விட்டிருக்கலாம்.

ஆனால், அவர் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி என்னை நெகிழ வைத்துவிட்டார்.

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை பற்றி முதல்வரிடம் வலியுறுத்தினோம்.

7 பேர் விடுதலை முடிவில் உறுதியாக இருப்பதாக பேசினார்.

பிளஸ் 2 தேர்வு குறித்தும் பேசினோம்.

மாணவர்களின் உயிரே முக்கியம். இந்த ஒரு வருடம் தேர்வு எழுதாவிட்டால் ஒன்றும் ஆகாது என்ற என்னுடைய கருத்தையும் தெரிவித்தேன்.

இவ்வாறு சீமான் பேசினார்.

புதிய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்கள் கேட்டதற்கு…` ஆட்சி நல்லா இருக்கு. கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

துறை அதிகாரிகள் நல்லா வேகமா இயங்குறாங்க. மருத்துவத் துறையில அண்ணன் மா.சுப்ரமணியன் சிறப்பா இயங்குறாரு ” என்றார் சீமான்.

Seeman praises MK Stalin and Ma Subramanian

சூர்யா-கௌதம் மேனனின் ‘நவரசா’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்

சூர்யா-கௌதம் மேனனின் ‘நவரசா’ ரிலீஸ் அப்டேட் கொடுத்த பி.சி.ஸ்ரீராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Navarasaஇயக்குனர் வெற்றிமாறனுடன் ‘வாடிவாசல்’ படம் இயக்குநர் பாண்டிராஜுடன் ஒரு படம் என நடித்து வருகிறார் சூர்யா.

தற்போது இந்த படங்களின் சூட்டிங் கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரே கௌதம் மேனன் இயக்கத்தில் ‘நவரசா’ என்ற ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார் சூர்யா.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள ஆந்தாலஜி படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீராம் தமது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்…

‘நவரசா’ வரும் 2021 ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே சூர்யா மற்றும் கௌதம் மேனனின் வெற்றி கூட்டணி ‘காக்க காக்க’ & ‘வாரணம் ஆயிரம்’ படங்களில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

PC Sree ram gives update on Suriya’s Navarasa

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ படங்களைத் தந்தவர் ஜி.என்.ரங்கராஜன்.. அவர் வீட்டுக்கு என் பெயரை வைத்தார்.; கமல் இரங்கல்

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ படங்களைத் தந்தவர் ஜி.என்.ரங்கராஜன்.. அவர் வீட்டுக்கு என் பெயரை வைத்தார்.; கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘மீண்டும் கோகிலா’, ‘எல்லாம் இன்பமயம்’, ‘மகராசன்’, ’கல்யாணராமன்’, ‘கடல் மீன்கள்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஜி.என்.ரங்கராஜன்.

90 வயதான இவர் ஜிஎன் ரங்கராஜன் இன்று காலை காலமானார்.

அவரது மறைவு குறித்து கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த இரங்கல் அறிக்கையில்…

நான்‌ சினிமாவில்‌ நுழைந்த காலம்‌ தொட்டு இறக்கும்‌ தறுவாய்‌ வரை என்‌ மீது மாறாத பிரியம்‌ கொண்டவர்‌ இயக்குநர்‌ ஜி.என்‌. ரங்கராஜன்‌. கடுமையான உழைப்பால்‌ தமிழ்‌ சினிமாவில்‌ தனக்கென்று தனித்த இடத்தை உருவாக்கிக்‌ கொண்டவர்‌.

இன்றும்‌ விரும்பிப்‌ பார்க்கப்படும்‌ பல திரைப்படங்களைத் தமிழ்‌ ரசிகர்களுக்குத்‌ தந்தார்‌. அவரது நீட்சியாக மகன் ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனும்‌ சினிமாவில்‌ தொடர்கிறார்‌.

கல்யாணராமன்‌, மீண்டும்‌ கோகிலா, கடல்‌ மீன்கள்‌, எல்லாம்‌ இன்பமயம்‌, மகாராசன்‌ என என்னை வைத்துப் பல வெற்றிப்‌ படங்களைத்‌ தந்தவர்‌. என்‌ மீது கொண்ட மாறாத அன்பால்‌, தான்‌ கட்டிய வீட்டிற்கு ‘கமல்‌ இல்லம்‌’ என்று பெயர்‌ வைத்தார்‌. இன்று அந்த வீட்டிற்கு சற்றேறக்குறைய 30 வயதாகி இருக்கக்‌கூடும்‌.

ஜி.என்‌.ஆர்‌ தன்‌ வீட்டில்‌ இல்லையென்றால்‌ ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ்‌ ரோட்டில்தான்‌ இருப்பார்‌ என்றே எங்களை அறிந்தவர்கள்‌ சொல்வார்கள்‌. சினிமாவில்‌ மட்டுமல்ல, மக்கள்‌ பணியிலும்‌ என்னை வாழ்த்தியவர்‌. எப்போதும்‌ எங்கும்‌ என்‌ தரப்பாகவே இருந்தவர்‌.

சில நாட்களுக்கு முன்பு கூட முகச்சவரம்‌ செய்து பொலிவோடு இருக்க வேண்டும்‌. கமல்‌ பார்த்தால்‌ திட்டுவார்‌ என்று சொல்லி வந்தார்‌ எனக் கேள்வியுற்றேன்‌. தான்‌ ஆரோக்கியமாக இருப்பதையே நான்‌ விரும்புவேன்‌ என்பதை அறிந்தவர்‌.

நிபந்தனையற்ற தூய பேரன்பினைப்‌ பொழிந்த ஓர்‌ அண்ணனை இழந்துவிட்டேன்‌. அண்ணி ஜக்குபாய்க்கும்‌, தம்பி இயக்குநர்‌ ஜி.என்‌.ஆர்‌. குமரவேலனுக்கும்‌ குடும்பத்தார்க்கும்‌ என்‌ ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக் கொள்கிறேன்‌”

இவ்வாறு கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Kamal Haasan’s emotional tweet on director Ranga Rajan’s death

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தை நம்பி காத்திருக்கும் சாந்தனு.?

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தை நம்பி காத்திருக்கும் சாந்தனு.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

shanthanuவிஜய் படம் மாஸ்டரை நம்பி இருந்தார் சாந்தனு. ஏதோ ஒரு துணை நடிகர் போல அவருக்கு அந்த படத்தில் வேடம் தரப்பட்டது.

தற்போது அவரது கைவசம் உள்ள ’முருங்கைக்காய் சிப்ஸ்’ படம் ரிலீசுக்கு தயாராகவுள்ளது. இதில் அதுல்யா நாயகியாக நடித்துள்ளார்.

அண்மையில் இப்பட ட்ரைலர் வெளியானது.

இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் திரைப்படமான ’பீர்பால்’ பட தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம் சாந்தனு.

கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற இந்த படம் ‘திம்மரசு’ என்ற டைட்டிலில் ரீமேக்கானது. ஆனால் இன்னும் இந்த படம் ரிலீசாகவில்லை.

விரைவில் ’பீர்பால்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Shantanu to act in Kannada remake for his next

‘பத்து தல’ சிம்பு பட பாடல் பணிகளை துவங்கினார் ஆஸ்கர் நாயகன்

‘பத்து தல’ சிம்பு பட பாடல் பணிகளை துவங்கினார் ஆஸ்கர் நாயகன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu ar rahman‘மாநாடு’ படத்தை முடித்துவிட்டு சிம்பு அடுத்ததாக ’பத்து தல’ என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இதில் சிம்பு கேங்க்ஸ்டராகவும் கௌதம் கார்த்திக் போலீசாகவும் நடிக்கவுள்ளனர்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற திரைப்படத்தின் ரீமேக்காகும்.

‘சில்லுனு ஒரு காதல்’ படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கவுள்ளார்.

இந்த படத்தில் சிம்புவுடன் பிரியா பவானி சங்கர், கலையரசன், தீஜே உள்ளிட்டோர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

ஏற்கெனவே ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் மற்றும் கிருஷ்ணா இணைந்து பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இந்த ’பத்து தல’ படத்திற்கான பாடல் கம்போசிங் பணிகளை ஏஆர் ரஹ்மான் தொடங்கிவிட்டாராம்.

AR Rahman begun composing for STR’s Pathu Thala

More Articles
Follows