தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘இயற்கை’, ‘ பேராண்மை’, ‘ ஈ’, ‘பொறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என தரமான படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன்.
இவர் ஒரு கம்யூனிச சிந்தனையாளர்.
தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ படத்தை இயக்கி வருகிறார் ஜனநாதன்.
இந்த படத்தில் விவசாயம் மற்றும் கார்ப்பரேட் அரசியல் குறித்து அலசியிருக்கிறார்.
பல நெருக்கடிகளுக்கு மத்தியிலும் லாபம் படத்தை ஜனநாதன் இயக்கி வருகிறார்.
அவரது அன்பிற்காக, தன் நண்பருடன் சேர்ந்து ‘லாபம்’ படத்தை தயாரித்து வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி.
தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் அவரது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார் எஸ்பி. ஜனநாதன்.
இதனையடுத்து அவரது உதவி இயக்குனர்கள் அவரை உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு மூளைக்குசெல்லும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் சொல்லியுள்ளனர்.
தற்போது ICUவில் ஜனநாதன் தொடர் சிகிச்சையில் இருந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றியும் மாரடைப்பால் இன்று காலை அவருடைய உயிர் பிரிந்தது.
இவரின் ரோல் மாடல் காரல் மார்க்ஸ் நினைவு நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.
*ஜனநாதன் பற்றிய சிறு குறிப்பு…*
தஞ்சாவூர் மாவட்டத்தில் 1959-ம் ஆண்டு மே 7-ம் தேதி பிறந்தவர்.
சினிமா இயக்குநராக வேண்டும் என்று ஆசை கொண்டு பி.லெனின், பரதன், கேயார் ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணி புரிந்துள்ளார்.
இவர் திருமணம் செய்துக் கொள்ளவில்லை.
இவர் இயக்கிய முதல் படம் ‘இயற்கை’. 2004ல் இந்த படம் தேசிய விருதை வென்றது.
இதன் பின்னர் ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் எஸ்.பி.ஜனநாதன்.
தற்போது விஜய்சேதுபதி தயாரித்து நடிக்கும் ‘லாபம்’ படத்தை இயக்கியுள்ளார்.
லாபம் படம் ரிலீசாவதற்குள் தன் மரணத்தால் தமிழ் சினிமாவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவரின் படைப்புகள் புரட்சிகர கருத்துகள் கொண்டவை.
தன் உதவி இயக்குநர் கல்யாண் இயக்கிய ‘பூலோகம்’ படத்துக்கு வசனங்கள் எழுதியும் இருக்கிறார்.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தில் பொறுப்பிலும் இருந்து இயக்கிறார்.
Laabam movie director SP Jananathan passes away at 61