JUST IN ‘ஜென்டில்மேன்2’ பட ஹீரோயின் நயன்தாரா என அறிவித்தார் K.T. குஞ்சுமோன்

JUST IN ‘ஜென்டில்மேன்2’ பட ஹீரோயின் நயன்தாரா என அறிவித்தார் K.T. குஞ்சுமோன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

#ஜென்டில்மேன்2
பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் படத்தில் நயன்தாரா சக்ரவர்த்தி கதாநாயகியாக அறிமுகம்.

மெகா தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படம் ‘ஜென்டில்மேன்2 ‘.

இவர் தனது *ஜென்டில்மேன், காதலன்* படத்தின் மூலம் இயக்குனர் ஷங்கரை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர்.

தற்போது ‘ஜென்டில்மேன்2 ‘ என்ற பிரம்மாண்ட படத்தை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

ஏற்கனவே இப்படத்தின் இசை அமைப்பாளராக கீரவாணியை அறிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக திரை உலகிலும் சமூக வலை தளங்களிலும் இப்படத்தின் கதநாயகி யார்..! நயன்தாராவா? என்று கேள்வி குறியுடன் சர்ச்சைகள் பரவலாக இருந்தது .

தற்போது அந்த சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்து ஹீரோயின் பெயரை அறிவித்துள்ளார் குஞ்சுமோன்.

சூப்பர் ஸ்டார்களான ரஜனி, மம்முட்டி ,மோகன்லால் ஆகியோருடன் முப்பதுக்கும் அதிகமான மலையாளம், தெலுங்கு, தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்ற கேரளாவை சேர்ந்த நயன்தாரா சக்ரவர்த்தி ( இது இவரது சொந்த பெயர் )
தான் அந்த அறிமுக கதாநாயகி.

இன்னொரு கதாநாயகியும் படத்தில் உள்ளதாகவும் அது யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் சஸ்பென்ஸ் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் K.T.குஞ்சுமோன்.

அது யார் என்று ஆவலோடு காத்திருக்கிறது திரை உலகமும் ரசிகர்களும். மேலும் படத்தின் இயக்குனர், ஹீரோ, மற்றும் தொழி்நுட்ப கலைஞர்கள் யார் என்ற அறிவிப்புகளும் விரைவில் வெளிவரும்.

KT Kunjumon announces Nayathara will be lead in Gentleman 2

ஜூனியர் என்.டி.ஆருக்கு அபராதம் விதித்த போலீஸார்..; அடங்காத RRR நடிகர்

ஜூனியர் என்.டி.ஆருக்கு அபராதம் விதித்த போலீஸார்..; அடங்காத RRR நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சொகுசு கார் கண்ணாடிகளில் கருப்பு கலர் ஃபிலிம் ஸ்டிக்கர் (டின்ட் கிளாஸ்) ஒட்டப்பட்டுள்ளதை நாம் பார்த்திருக்கிறோம்.

ஆனால் இந்த ஸ்டிக்கரை ஒட்டுவதற்கு அரசு தடை விதித்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் கண்ணாடிகளில், கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது.

அவ்வாறாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும் வழக்கம்.

ஆனாலும் சில பிரபலங்கள் கருப்பு நிற டின்ட் ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி விதிமுறைகளை மீறி வருகின்றனர்.

இதை தடுக்க போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபடுவது வழக்கம்.

இந்த நிலையில் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் போக்குவரத்து போலீஸார் சோதனையில் ஈடுபட்ட போது..

நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக அளவில் கருப்பு பிலிம் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார் ஒன்றை போலீஸ் சோதனை செய்தனர்.

அது பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு சொந்தமான கார் என்பது தெரியவந்தது.

ஆனால், ஜூனியர் என்.டி.ஆர். அந்த காரில் இல்லை. அவர் மகனுடன் சிலர் காரில் இருந்துள்ளனர்.

விதிகளை மீறி கருப்பு நிற டின்ட் ஒட்டியதாகக் கூறி அபராதம் விதித்தனர்.

மேலும் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கரை நீக்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.

இதே ஸ்டிக்கர் பிரச்சினைக்காக, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஏற்கெனவே அபராதம் விதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

RRR actor Junior NTR fined by Andhra Police

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

ஒரே இளையராஜா-தான்.. ஒரே பாரதிராஜா-தான்.; படம் பார்க்குறவங்க கஷ்டப்படக்கூடாது.. – இசைஞானி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கே. கணேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘காதல் செய்’.

சுபாஷ் சந்திரபோஸ், நேகா, மனோபாலா, சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைக்க மகேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கானா வினோதன், குப்பன் கணேசன் தயாரித்துள்ளனர்.

இதன் பாடல் & டீசர் வெளியீட்டு விழா, சென்னையிலுள்ள இளையராஜா ஸ்டூடியோவில் நேற்று நடந்தது.

படக்குழுவினருடன் இயக்குநர் பாரதிராஜா, பி.வாசு உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் பாரதிராஜா, இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் புகழ்ந்து கொண்டார்கள்.

இளையராஜா பேசும்போது…

“`எதிர்கால இளையராஜாக்களே, வருங்கால பாரதிராஜாக்களே என்று பேசுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு பாரதிராஜா, ஒரே இளையராஜாதான்.

எல்லா காலத்துக்கும் பாரதிராஜா ஒருவர் தான். பி.வாசு, இளையராஜா ஒருவர் தான்.

எப்படி சூரியன் மாதிரி இன்னொன்று வருவதில்லையோ. அதுபோல ஒருத்தர போல இன்னொருத்தன் வருவதில்லை.

இந்தப் படத்தை எடுக்கக் கஷ்டப்பட்டோம் என்றார்கள். படத்தை எடுக்க கஷ்டப்படலாம். படத்தை பார்ப்பவர்கள்தான் கஷ்டப்படக் கூடாது.

இந்தப் படத்துக்கு ‘காதல் செய்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். நான் ஏற்கனவே காதலித்துக் கொண்டிருக்கிறேன். எதை காதலிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கேன்”

இந்த படத்தோட விழாவுக்கு இவளோ பேர் வந்து ஆதரவு கொடுத்திருக்கீங்க. 16 வயதினிலே பண்ணும்போது இவ்ளோ கேமரா கிடையாது. இவ்ளோ மீடியா கிடையாது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்.” என்றார் இளையராஜா.

பாரதிராஜா பேசும்போது,

“கலைஞர்கள், எழுத்தாளர்களுக்கு கண்டிப்பாகக் காதல் இருந்திருக்கும். இளையராஜாவுக்கும் இருந்திருக்கும். அது இல்லாவிட்டால் உலகம் இயங்காது.

காதல்தான் எல்லாருடைய மனதை வளப்படுத்துகிறது.

இந்தியாவில், தமிழகத்தின் பெரிய சொத்துகளில் ஒன்று இளையராஜா”

என்று பேசினார் பாரதிராஜா.

Ilaiyaraaja speech at Kadhal Sei audio launch

‘அஜித் 62’ ஆரம்பம்.; நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்

‘அஜித் 62’ ஆரம்பம்.; நயன்தாரா விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சென்னையில் உள்ள சாலிகிராமம் என்ற பகுதியைச் சேர்ந்தவ சமூக ஆர்வலர் கண்ணன்.

இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நயன்தாராவின் தயாரிப்பு கம்பெனி குறித்து புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில்…

அஜித் நடிப்பில், விக்னேஷ் சிவன், ‘AK62’ என்ற படத்தை இயக்க உள்ளார்.

இந்த அறிவிப்பால் விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார். இதில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் பங்கேற்றுள்ளனர்.

விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.

இவர்கள் ‘ரவுடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளனர்.

தமிழக போலீஸ் அதிகாரிகள் ரவுடிகளை ஒழிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஆனால், சமூக பொறுப்பின்றி, இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும், ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது, பொது மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.

எனவே ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும்.

இருவர் மீதும், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும்.”

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

‘AK62’ என்ற படத்தை லைகா தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நாயகியாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Case filed against Nayanthara and Vignesh Shivan

இணையத்தை பற்ற வைத்த அஜித் – ஷாலினியின் ரியல் ரொமாண்டிக் ஸ்டில்

இணையத்தை பற்ற வைத்த அஜித் – ஷாலினியின் ரியல் ரொமாண்டிக் ஸ்டில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ராஜா சின்ன ரோஜா’ படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி.

விஜய்யுடன் ‘காதலுக்கு மரியாதை’, மாதவனுடன் ‘அலைபாயுதே’, பிரசாந்துடன் ‘பிரியாத வரம் வேண்டும்’ உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தார்.

சரண் இயக்கிய ‘அமர்க்களம்’ படத்தில் அஜித் & ஷாலினி இணைந்து நடித்தனர்.

அப்போதே ஷாலினியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார் அஜித்.

இதன் பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் காதலித்து 2000 ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு ஷாலினி திரைப்படங்களில் நடிக்கவில்லை.

தற்போது இவர்களுக்கு ஒரு மகள் (அனோஷ்கா) ஒரு மகன் (ஆத்விக்) உள்ளனர்.

ஷாலினியின் தங்கை ஷாம்லியும் நடிகை ஆவார். இவர் ‘அஞ்சலி’ படத்தில் குழந்தையாக நடித்தவர்

இந்த நிலையில் அஜித் & ஷாலினி இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஷாம்லி.

இது இவர்களின் குடும்ப நிகழ்ச்சியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது. அஜித் ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Ajith and Shalini’s latest romantic photo goes viral

நடிகரிடமே ‘சதுரங்கவேட்டை’ மோசடி.; கோடிகளில் பணத்தை இழந்த விக்னேஷ்

நடிகரிடமே ‘சதுரங்கவேட்டை’ மோசடி.; கோடிகளில் பணத்தை இழந்த விக்னேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நட்டி நடித்த ‘சதுரங்கவேட்டை’ படத்தில் ரைஸ் புல்லிங் இரிடியம் மோசடி பற்றிய காட்சிகள் இருக்கும். இந்த படம் வெளியானபோது இந்த மோசடி பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது இந்த மோசடி ஒரு சினிமா நடிகரிடமே நடந்துள்ளது.

கிழக்கு சீமையிலே, பசும்பொன், மண்ணுக்கு மரியாதை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விக்னேஷ்.

தற்போது டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

அண்மையில் நந்தா பெரியசாமி இயக்கிய ‘ஆனந்தம் விளையாடும் வீடு படத்தில் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் இரிடியம் மோசடி கும்பலிடம் 2 கோடி ரூபாய் வரை விக்னேஷ் ஏமாந்துள்ளதாக சென்னை நகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: …

“நான் 30 வருடங்கள் சினிமாவில் நடிக்கிறேன். இத்துடன் சொந்தமாகவும் தொழில் செய்து வருகிறேன்.

எனது கடையில் வாடகைதாரராக இருந்த ராம்பிரபு என்பவர் என்னிடம் பழகினார்.

அவர் இரிடியம் விற்கும் தொழிலை சட்டபூர்வமாக செய்வதாக சொல்லி அதில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும்” என்றார்.

என்னிடம் ரூ.5 லட்சம் கொடுத்தால், ரூ.500 கோடியாக திருப்பி தருகிறேன் என நம்பிக்கை ஊட்டும் வகையில் பேசினார்.

அவரின் பேச்சை நம்பி நான் எனது வங்கி கணக்கு மூலமாகவும், மேலும் கடனாக பெற்றும் ரூ.1.81 கோடி கொடுத்தேன்.

ஆனால் அதன் பிறகு அவர் என்னிடம் பேசுவதை தவிர்த்தார்.

என்னைப்போல நிறைய பேர்களிடம் அவர் இதுபோல் பணம் வசூலித்திருப்பது தெரிய வந்தது. அவர் மோசடி பேர்வழி என்றும் தகவல் வந்தது.

யாருக்கும் சொன்னபடி பணம் கொடுக்கவில்லை.

என்னைப்போல 500 பேரிடம் ராம்பிரபு பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவர் மீதும், அவருடன் இருப்பவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் நடிகர் விக்னேஷ் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையில் மோசடி வழக்கில் விருதுநகர் போலீசார் ராம்பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Vignesh loses crores to Iridium scam gang

More Articles
Follows