தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.
இளம் வயதிலேயே சிறந்த நடிகைக்கான (மகாநடி படம்) தேசிய விருதை வென்றவர் இவர்.
முன்னணி நாயகியாக இருந்தபோதும் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தனக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளார்.
அவரின் அறிக்கையில்…‛‛எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது.
நான் கவனமாக முன்னெச்சரிக்கையாக இருந்ழம் கொரோனா பாதிப்பு தொற்றிக் கொண்டது. நான் தனிமைப்படுத்தி சிகிச்சை பெறுகிறேன்.
என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் உடனே போட்டுக் கொள்ளுங்கள். விரைவில் குணமாகி மீண்டும் வருவேன்.
தயவு செய்து அனைவரும் கொரோனா விதிமுறை, கடைப்பிடிக்கவும்.” என தெரிவித்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.
Keerthy Suresh tested Covid positive and she advice fans