கீர்த்தி சுரேஷ் படத்தை ஆன்லைனில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் திட்டம்

கீர்த்தி சுரேஷ் படத்தை ஆன்லைனில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Subbaraj plans to release Keerthy Suresh Penguin in OTT platforms கொரோனா ஊரடங்கால் அனைத்து துறைகளும் முடங்கியுள்ளது.

திரைத்துறையும் முடங்கியுள்ள நிலையில் சில தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளத்தில் அதாவது ஆன்லைனில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஒரு படம் ரிலீசாகி 100 நாட்கள் ஆன பின்னரே ஆன்லைனில் வெளியிட அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது அடுத்த ஜீன் மாதம் இது வெளியாகலாம் என கூறப்படுகிறது.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார். இப்பட பர்ஸ்ட் லுக் வெளியான போது பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Karthik Subbaraj plans to release Keerthy Suresh Penguin in OTT platforms

திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய H ராஜா வலியிறுத்தல்

திரையுலகில் தீயசக்திகள்..; விஜய்சேதுபதியை கைது செய்ய H ராஜா வலியிறுத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

BJP National Secretary H Raja said Vijay Sethupathi should be arrestedநம்ம ஊரு ஹீரோ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி பேசினார். அப்போது ஒரு குட்டி கதை சொன்னார்…

“சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசினார் விஜய்சேதுபதி.

இதனையடுத்து இந்துக்களின் மனதை புண்படுத்தியதாக விஜய்சேதுபதி மீது பல புகார்கள் கூறப்பட்டன.

காவல் துறையில் இந்து மகா சார்பில் புகாரளிக்கப்பட்டது என்பதையும் நம் தளத்தில் பார்த்தோம்.

இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா தன் ட்விட்டரில் விஜய்சேதுபதியை கைது செய்ய வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தி பதிவிட்டுள்ளார்.

அதில்…. தொடர்ந்து திட்டமிட்ட ரீதியில் இந்துமத உணர்வுகளை புண்படுத்தும் தீயசக்திகளின் எண்ணிக்கை திரையுலகில் அதிகரித்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

இந்துமத உணர்வுகளை திட்டமிட்டு காயப்படுத்திய விஜய் சேதுபதியை மாநில அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்.

என பதிவிட்டுள்ளார்.

BJP National Secretary H Raja said Vijay Sethupathi should be arrested

கொரோனாவை விட கொடிய சாதிய நோயின் கோரத்தாண்டவம்.. – ரஞ்சித்

கொரோனாவை விட கொடிய சாதிய நோயின் கோரத்தாண்டவம்.. – ரஞ்சித்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Caste violence in Tamilnadu during Corona lock down sayd Ranjithகொரோனா காலத்தில் மட்டும் தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்ட சாதிய வன்கொடுமை தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ”உலகெங்கிலும் கொரோனா பெரும் கொடூரத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் வேளையில், இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பற்றிய கேலிப்பேச்சுக்களை பரப்பி கிண்டலடித்துக் கொண்டிருந்தோம்.

நிலைமையின் தீவிரத்தை தாமதமாகவே உணர்ந்து கொண்டாலும், தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்த பொது ஊரடங்கிற்குப் பிறகு தான் கொஞ்சம் கொஞ்சமாக இந்நோய் பற்றிய பீதிக்குள் நாம் நுழைந்தோம்.

அந்த பீதி இன்று வரை தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. பல்வேறு இடர்பாடுகளை தாங்கி நாம் அனைவருமே கொரோனாவிற்கு எதிராக ஒருங்கிணைந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

இந்த நோய்தொற்றினால் நாம் இறந்துவிடுவோமோ என்கிற அச்சத்தை போக்குவதற்காக நமக்கு, “நோயுடனே வாழ பழகிக்கொள்வோம்” என்று அரசு தரப்பு இப்போது நழுவுவதையும் காண முடிகிறது.

இந்த கொரோனா பேரிடரால் உலகமும், இந்தியாவும் என்னவெல்லாம் மாற்றங்களை சந்திக்கப் போகிறது என்று பொருளாதார வல்லுனர்கள் முதல் சாமானிய மக்கள் வரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஊரடங்கு காலத்தில் பெரும்பாலான குற்ற நடவடிக்கைகள் குறைந்திருப்பதும், மனிதநேய தன்மையின் பொருட்டு சக மனிதனுக்கான உதவிகள் பெருகியதும் பாராட்டுக்குரியவைகள்.

ஆனால் வழக்கம் போல நம் தமிழகத்தில் கொரோனாவை விட கொடிய நோயான சாதிவெறி அதே உயிர்ப்புடன் தன் கோரத்தாண்டவத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றது.

இந்த கொரோனா காலத்தில் நமக்குத் தெரிந்து தமிழகத்தில் மட்டும் கிட்டதட்ட 30க்கும் மேற்பட்ட பல்வேறு விதமான சாதி வன்கொடுமை தாக்குதல்கள் தலித் மக்களின் மேல் நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இச்சம்பவங்கள் யாவும், எத்தனை பேரிடர் வந்தாலும் இந்த மனிதர்கள் மனதில் தேக்கி வைத்திருக்கிற சாதிவெறி வன்மத்தை மட்டும் விட்டொழிக்க மாட்டார்கள் என்ற வலிதரும் உண்மையை மிக தீர்க்கமாக உணர்ந்துகொள்ள முடிகிறது.

சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் டி.கோணாகாபாடி ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அம்சவள்ளியை சாதியின் பெயரால் பணி செய்யவிடாமல் தடுத்து அவர் மீது சாதிய வன்மத்தை காட்டிய சாதிவெறிக்கும்பல் தொடங்கி நேற்றிரவு தூத்துக்குடி அருகே நிகழ்த்தப்பட்ட இரட்டைக்கொலை வரை நம் தமிழ் மக்கள் சாதிவன்மம் முற்றிப்போய் சக மனிதனாகிய, சகோதரனாகியவர்கள் மீது எவ்வித அச்சமுமின்றி சாதி வன்கொடுமைகளை இந்த நெருக்கடியான காலத்திலும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகம் ஒரு சிறந்த முற்போக்கு மாநிலம் என்று நாம் என்னதான் பெருமையாக பேசிக்கொண்டாலும், சாதிக்கெதிரான மனநிலையை கட்டியெழுப்புவதில் நாம் இன்னும் தேக்க நிலையிலேதான் இருக்கிறோம்.

திராவிடம், தமிழ்த்தேசியம், கம்யூனிசம் என்று கருத்தியல் தளத்தில் பல தலைவர்களும், பல துணை அமைப்புகளும் சாதிக்கெதிராக இருக்கிற போதும், உழைக்கும் வர்க்க விளிம்புநிலை மக்களாக இருக்கக் கூடிய தலித் மக்கள் மேல் இந்த கொரோனா காலத்திலும் தொடுக்கப்படும் சாதிவெறி வன்முறைகள் ஏன் ஏற்படுகிறது? என்பதையும், சாதி ஒழிப்பு தளத்தில் நாம் எத்தகைய நிலையில் இருக்கிறோம் என்பதையும் கட்டாயம் சுய பரிசோதனைக்கு உட்படுத்தியே ஆகவேண்டும்.

கொரோனா நோய்தொற்று எப்படி நம் முன் தீர்மானங்களை நொறுக்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறதோ அதே போல் நம்மிடையே இருக்கும் இசங்களும், கொள்கைகளும், சாதிவெறியின் போக்கை எந்த விதத்திலும் மடைமாற்ற முடியாமல் திணறிக்கொண்டிருக்கின்றது. இதனை நாம் அறிந்து ஒப்புக்கொள்ளவேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறோம்.

இதில் இன்னும் கொடுமை என்னவென்றால் தமிழகத்தில் நாற்பத்தி நான்கு தனித்தொகுதி சட்டமன்ற தொகுதியில் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராக நின்று வெற்றி பெற்று சட்ட மன்றத்திற்குள் நுழைந்த தனித்தொகுதி வேட்பாளர்கள் தங்களுக்கு கிடைத்த அதிகாரத்தை கொண்டு இம்மாதிரியான பாதிப்புகள் நடைபெறும்போது கூட இம்மக்களுக்கு ஆதரவாக வந்து நிற்பதுமில்லை, பேசுவதுமில்லை என்பதே வேதனை.

இந்த தோல்வியை எல்லோரும் ஒப்புக்கொண்டு இந்த மனித சமூகத்தின் மிக இன்றியமையாத மனிதத் தன்மையை, மனித மாண்பை மீட்க நம்மை நாமே பரிசோதனைக்கு உட்படுத்தி உண்மை கண்களை திறந்து இந்த கொரோனா காலத்திலும் உயிர்த்திருக்கும் சாதியை எப்படி அழித்தொழிப்பது? தலித் வெறுப்பை எப்படி அழித்தொழிப்பது? என்ற முன்னெடுப்பை நாம் செய்தே ஆகவேண்டும்.

இதனை இப்போது நாம் செய்யத் தவறினால் இந்த நூற்றாண்டின் கொடுந்துயருக்கு நாம் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள்‘ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Caste violence in Tamilnadu during Corona lock down says Ranjith

விஜய்சேதுபதி நற்பெயருக்கு கேடு; சமுதாய சீர்குலைவு.. போலீசில் புகார்

விஜய்சேதுபதி நற்பெயருக்கு கேடு; சமுதாய சீர்குலைவு.. போலீசில் புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi fans filed complaint against Hindu Maga Sabha சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு விஜய்சேதுபதி தலைமை ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பாக தலைமை செயலாளர் குமரன் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில், நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் மேடையில் பேசிய நகைச்சுவை வசனத்தை இங்கு பேசினார்.

இந்த நகைச்சுவை வசனத்தை முற்றிலுமாக மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் காணொளியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் விஷமிகள் சிலர் பரப்பி உள்ளனர்.

இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர்.

மேலும் இதன் மூலம் விஜய் சேதுபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும்,சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே உடனடியாக விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும்,விஷமிகள் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற தனியார் டிவி நிகழ்ச்சியில், “சாமிக்கு அபிஷேகம் செய்வதை காட்டுவார்கள். பின்னர் துணி போட்டு மூடிவிடுவார்கள். அப்போது ஏன் துணி போட்டு மறைத்துவிட்டார்கள் என்று குழந்தை தாத்தாவிடம் கேட்டது.

அதற்கு தாத்தா, குளித்து முடித்த சாமி இப்போது உடைமாற்றப் போகிறது” என்றார்.

உடனே அந்தக் குழந்தை என்ன தாத்தா குளித்ததையே காட்டினார்கள். ஆனால் உடை மாற்றுவதை மூடிவிட்டார்கள்” என்று பேசியதற்கு இந்து மகா சார்பில் புகாரளிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Vijay Sethupathi fans filed complaint against Hindu Maga Sabha

பச்சை மண்டலமான காரைக்காலில் கைதி ஒருவருக்கு கொரோனா

பச்சை மண்டலமான காரைக்காலில் கைதி ஒருவருக்கு கொரோனா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First Corona positive case in Karaikalகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் மே 17 வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று இல்லாத பச்சை மண்டலங்களில் சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கடந்த 48 நாட்களாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சுரக்குடியைச் சேர்ந்த டிரைவர் நடேசன் என்ற 37 வயது இளைஞர் ஒருவரை அடிதடி வழக்கில் காரைக்கால் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

பரிசோதனை முடிவில் அந்த கைதிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கைதிக்கு கொரோனா உறுதியானதால் அவரை கைது செய்த காவலர்கள் 2 பேருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அவருக்கு எப்படி கொரோனா தொற்று வந்தது? அவர் எங்கு சென்றார்? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது.

அவர் அண்மையில் சென்னைக்கு சென்று வந்துள்ளதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.

அவரின் குடும்பத்து உறவினர்களையும் பரிசோதனை செய்யவுள்ளனர்.

இந்த செய்தி காரைக்கால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பகுதியை சார்ந்த கார்த்தி என்ற வாலிபரிடம் நாம் விசாரித்த போது…

அவர் ஊரடங்கில் எங்கும் சென்றதாக தெரியவில்லை. ஆனால் கொரோனா தொற்று எப்படி வந்தது? என்பது எங்களுக்கே தெரியவில்லை. விவரங்கள் தெரிந்தால் தெரிவிக்கிறேன்” என சொன்னார்.

First Corona Virus positive case in Karaikal

MEGA BREAKING கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்… – ரஜினி

MEGA BREAKING கஜானாவை நிரப்ப நல்ல வழிகளை பாருங்கள்… – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini condemns TN Govt for opening Tasmac wine shopsகொரோனா ஊரடங்கு மே 17 வரை அமலில் இருக்கும்போதே மே 7 முதல் சில நிபந்தனைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது தமிழக அரசு.

இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தாலும் மதுபிரியர்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் டாஸ்மாக் மது விற்பனையின் போது, சமூக இடைவெளியும் பின்பற்றப்படவில்லை எனவும் கொரோனா தொற்று அதிகளவில் பரவும் எனவும் கூறப்பட்டு அவசர வழக்கு தொடரப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பொது முடக்கம் முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது.

அதில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த் தன் ட்விட்டரில் தமிழக அரசின் மேல் முறையீட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டரில் பதிவில்…

இந்த நேரத்தில் அரசு டாஸ்மாக் கடைகளை மறுபடி திறந்தால் மீண்டும் ஆட்சிக்கு வரும் கனவை மறந்து விட வேண்டும். தயவுகூர்ந்து #கஜானாவை_நிரப்ப_நல்ல_வழிகளை_பாருங்கள்

Rajini condemns TN Govt for opening Tasmac wine shops

More Articles
Follows