தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கடந்த மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.
தற்போது சில தளர்வுகளுடன் வணிக நிறுவனங்களை திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.
ஆனால் வழக்கமாக ஜீன் மாதம் திறக்கப்படும் பள்ளிகளை திறப்பை ஒத்தி வைத்துள்ளன மத்திய மாநில அரசுகள்.
அதற்கு காரணம் பள்ளிகள் திறக்கப்பட்டால் கொரோனா தொற்று அதிகளவில் பரவக்கூடும் என்பதாலும் சிறுவயது பிள்ளைகள் பாதிக்கப்படும் கூடும் என்பதாலும் பள்ளிகள் திறப்பை இந்திய அரசு ஒத்திவைத்துள்ளது.
இதனால் மாநிலங்களில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இதனிடையில் தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் பாடங்களை நடத்த தொடங்கியுள்ளன.
இந்த நிலையில் கர்நாடகாவில் மாணவர்களின் வயது மற்றும் மனநலம் ஆகியவற்றைக் கருதி மழலையர் குழந்தைகள் முதல் 7ஆம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தக்கூடாது எனக் கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்திருந்தார்.
இதனால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








