மக்களைக் காக்க மக்களே மருந்து.. ஊரடங்கு நீடிப்பு.. கமல் அட்வைஸ்

மக்களைக் காக்க மக்களே மருந்து.. ஊரடங்கு நீடிப்பு.. கமல் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal talks about 3rd Corona lock down extendகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மே 3ஆம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் சில தளர்வுகள் உள்ளன. சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள் இருக்காது.

இந்த நிலையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவில் இந்த ஊரடங்கு நீடிப்பு குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில்… அவரது வழக்கமான பாணியில் அழகான இலக்கிய தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். (உங்களுக்கு அதன் அர்த்தம் புரிந்தால் நன்மையே..)

ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் மக்கள் நீதி மய்யம்
என பதிவிட்டுள்ளார்.

எமக்கு தெரிந்த வரை சிலரிடம் விளக்கம் கேட்டு பதிவிட்டுள்ளோம்..

ஊரடங்கும் உயிருக்குப் பயந்து – உயிருக்குப் பயந்து ஊரானது அடங்கி, வீட்டிலேயே இருக்க வேண்டும். இவ்விடத்தில், ஊர் என்பது ஊரிலுள்ள மக்களைக் குறிக்கிறது. அதாவது, மக்கள் அனைவரும் உயிருக்குப் பயந்து வீட்டிலேயே இருங்கள்.

பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர் – உயிருக்குப் பயந்து மக்கள் வீட்டில் அடங்கலாம். ஆனால், கொரோனா எனும் நோயானது, மக்களுக்கு (மக்களிடம்) அடங்காது.

தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது – பொதுவாக, நெருப்பில் தண்ணீர் ஊற்றினால் அணைந்துவிடும் (அடங்கிவிடும்).

நீர், போதாதிதற்கு யாமும் வேண்டும் – ஆனால், கொரோனா எனும் நெருப்புக்கு தண்ணீர் மட்டும் போதாது. மக்களாகிய நாமும் வேண்டும் (மரணம்)

மக்களைக் காக்க மக்களே மருந்து – மக்கள்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். அதாவது, வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தால் சமூகப்பரவல் மூலம் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

மனம் மாறு அரசே மதம் மாறவல்ல – மதத்தின் பெயரால் அரசியல் செய்ய இது நேரமல்ல. அரசு மனம் மாறவேண்டிய நேரமிது.

எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் – மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பது மட்டுமே எம் கட்டளை.

Kamal talks about 3rd Corona lock down extend

BREAKING மே 17 வரை ஊரடங்கு நீடிப்பு; தளர்வுடன் முழு தகவல்கள் இதோ..

BREAKING மே 17 வரை ஊரடங்கு நீடிப்பு; தளர்வுடன் முழு தகவல்கள் இதோ..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Centre extends the Nation wide Corona lock down till May 17கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உடத்தரவு அமலில் உள்ளது.

முதன்முறையாக மார்ச் 24 முதல் ஏப்ரல் 14வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி அறிவித்தார்.

அப்போதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை என்பதாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்து வருவதாலும் 2வது முறையாக மே 3 வரை ஊரடங்கு இருக்கும் என அறிவித்தார் மோடி.

தற்போது மே 3 ஆம் நெருங்கி வரும் வேளையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கை நீடித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மே 3ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு. அதாவது மே 4 முதல் மே 17 வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும் .

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.

தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த உத்தரவு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Centre extends the Nation wide Corona lock down till May 17

ரஜினி கொடுத்துட்டார்.. கமல் அஜித் விஜய் சூர்யாகிட்ட கேட்டுருக்கேன்.. – லாரன்ஸ்

ரஜினி கொடுத்துட்டார்.. கமல் அஜித் விஜய் சூர்யாகிட்ட கேட்டுருக்கேன்.. – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence request to Kollywood top Actors கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை மக்களும் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

சமூக சேவை மனப்பான்மை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் 3 கோடி ரூபாயை முதற்கட்டமாக கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார்.

அதன்பின்னர் 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார். பின்னர் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக கொடுத்தார்.

இதன்பின்னர் நடிகங் சங்கம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் நிதியை அளித்துக் கொண்டே இருக்கிறார்.

அவரின் உதவியை நாம் அவ்வளவு எளிதாக பட்டியலிட முடியாது.

இந்த நிலையில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் ஆதரவற்ற பெரியோர் மற்றும் உணவின்றி தவிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவளிக்க முடிவெடுத்துள்ளார்.

தொகை பற்றாக்குறை காரணமாக தன் தம்பி எல்வினிடம் தன் எண்ணத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது..

என் தம்பி எல்வின் ஆலோசனைப்படி என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் உதவியை கேட்டேன்.
கேட்ட உடனே 100 மூட்டை அரிசிகளை சுதாகர் சார் மூலமாக அனுப்பினார். அவருக்கு நன்றி.

மேலும் எனது வேண்டுகோளை கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரிடமும் தெரிவித்துள்ளேன்.

இவையில்லாமல் நிறைய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களிடம் தெரிவித்துள்ளேன்.

யாராக இருந்தாலும் பணமாக கொடுக்காமல் நிவாரண பொருட்களாக கொடுக்க வேண்டுகிறேன்.

இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

LARENCCE CHARIRABLE TRUST
2/4 1ST CROSS STREET. 3RD AVENUE, ASHOK NAGAR
CHENNAI 83. PHONE 877 8338209

என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Raghava Lawrence request to Kollywood top Actors

செல்போனுக்கு தாலி கட்டிய வாலிபர்.; என்ன கொடுமை சார் இது..!!??

செல்போனுக்கு தாலி கட்டிய வாலிபர்.; என்ன கொடுமை சார் இது..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala Bride Groom ties Thaali to the Cell phone இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த வருகிற மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து செய்வதறியாமல் உள்ளனர்.

திருமணம் உள்ளிட்ட எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுமைக்கு பெயர் போன கேரளால் ஒரு வித்தியாசமான திருமணம் அரங்கேறியுள்ளது.

கோட்டயம் பகுதியை அடுத்துள்ள கங்கனசேரியை சேர்ந்த வங்கி ஊழியரான ஸ்ரீஜித் நடேசன் என்பவருக்கும், ஐடி பணியாற்றி வரும் அஞ்சனா என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

அதன்படி இந்தாண்ட 2020 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரியும் மணப்பெண்ணால் கேரளாவிற்கு வர முடியாமல் போய்விட்டது.

இதனையடுத்து திருமணத்தை வீடியோ கால் மூலம் நடத்தியுள்ளனர்.

மணமகன் செல்போனில் வீடியோ காலில் தெரிந்த மணமகள் அஞ்சனாவிற்கு தாலி கட்டினார். அதாவது செல்போனுக்கு தாலி கட்டியுள்ளார்.

அப்போது உ.பியில் இருந்து மணமகள் அஞ்சனா தானே தனது கழுத்தில் தாலி கட்டிக்கொண்டார்.

என்ன கொடுமை சார் இது என்றுதானே நினைக்கிறீர்கள்.. அதாவது கொரோனா கொடுமை இதுதானோ…

ஆனால் உலகத்தில் பல பேர் செல்போனுடன் தான் குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது வேறு கதை..

Kerala Bride Groom ties Thaali to the Cell phone

சென்னை பள்ளிகள் அனைத்தையும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு

சென்னை பள்ளிகள் அனைத்தையும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai Corporation decides to Change Chennai schools as Corona wardsகொரோனோ வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அளவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மக்கள் தொகை அதிகளவில் இருப்பதால் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இன்று ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 36, 71,19 வயதுடைய 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பூக்கடைக்காரர் மகனுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

இதனால் பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அண்ணா பழக்கடையில் 36,42,29 வயதுடைய 3 ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 30, 29 வயதுடைய 2 ஆண்களுக்கும் தொற்று உறுதியானது.

எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே 2 முதல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பள்ளிகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Chennai Corporation decides to Change Chennai schools as Corona wards

கமல் & ஜோதிகா பற்றிய கேள்விகளுக்கு கடுப்பான கடம்பூர் ராஜு

கமல் & ஜோதிகா பற்றிய கேள்விகளுக்கு கடுப்பான கடம்பூர் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் தூய்மைபணியாளர்கள், மற்றும் ஏழைகள் உள்ளிட்ட 1300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கமல் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

“உலக நாடுகளே கண்டிராத பேரிடராக கொரோனா உள்ளது. 2-ம் உலக போரை விட பாதிப்பு அதிகம். ஆனால் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார்.

அரசியல் மேதாவியாக பேசுவது சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

கொரோனாவை சமாளிக்க முடியாமல் மற்ற நாடுகள் திணறி வரும் போது இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசுகிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்றார்.

இதனையடுத்து நடிகை ஜோதிகா மற்றும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய கேள்விக்கு… “உலகளாவிய பிரச்னையாக கொரோனா இருக்கும் போது ஜோதிகாவின் கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும்.

இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்றார் அமைச்சர்.

Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement

More Articles
Follows