தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மே 3ஆம் தேதியோடு இந்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கொரோனா தொற்று பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் சில தளர்வுகள் உள்ளன. சிவப்பு மண்டலங்களில் தளர்வுகள் இருக்காது.
இந்த நிலையில் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் பதிவில் இந்த ஊரடங்கு நீடிப்பு குறித்து தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில்… அவரது வழக்கமான பாணியில் அழகான இலக்கிய தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். (உங்களுக்கு அதன் அர்த்தம் புரிந்தால் நன்மையே..)
ஊரடங்கும் உயிருக்கு பயந்து – பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர். தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது. நீர், போதாதிதற்குயாமும் வேண்டும். மக்களைக் காக்க மக்களே மருந்து. மனம் மாறு, அரசே மதம் மாறவல்ல எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் மக்கள் நீதி மய்யம்
என பதிவிட்டுள்ளார்.
எமக்கு தெரிந்த வரை சிலரிடம் விளக்கம் கேட்டு பதிவிட்டுள்ளோம்..
ஊரடங்கும் உயிருக்குப் பயந்து – உயிருக்குப் பயந்து ஊரானது அடங்கி, வீட்டிலேயே இருக்க வேண்டும். இவ்விடத்தில், ஊர் என்பது ஊரிலுள்ள மக்களைக் குறிக்கிறது. அதாவது, மக்கள் அனைவரும் உயிருக்குப் பயந்து வீட்டிலேயே இருங்கள்.
பிணி உமக்கடங்காது புரிந்து கொள்வீர் – உயிருக்குப் பயந்து மக்கள் வீட்டில் அடங்கலாம். ஆனால், கொரோனா எனும் நோயானது, மக்களுக்கு (மக்களிடம்) அடங்காது.
தண்ணீர்க்கடங்கா நெருப்பு இது – பொதுவாக, நெருப்பில் தண்ணீர் ஊற்றினால் அணைந்துவிடும் (அடங்கிவிடும்).
நீர், போதாதிதற்கு யாமும் வேண்டும் – ஆனால், கொரோனா எனும் நெருப்புக்கு தண்ணீர் மட்டும் போதாது. மக்களாகிய நாமும் வேண்டும் (மரணம்)
மக்களைக் காக்க மக்களே மருந்து – மக்கள்தான் மக்களைக் காப்பாற்ற முடியும். அதாவது, வீட்டை விட்டு வெளியில் செல்லாமல் இருந்தால் சமூகப்பரவல் மூலம் தொற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.
மனம் மாறு அரசே மதம் மாறவல்ல – மதத்தின் பெயரால் அரசியல் செய்ய இது நேரமல்ல. அரசு மனம் மாறவேண்டிய நேரமிது.
எம் கட்டளை மனிதனை நேசிக்க வேண்டுகோள் – மனிதர்களை நேசிக்க வேண்டும் என்பது மட்டுமே எம் கட்டளை.
Kamal talks about 3rd Corona lock down extend