தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள திரைப்பட ஒளிப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு திரையுலகினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான ”ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா 2021” ஒப்புதல் அளிக்க கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதமே இந்த மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
அந்த சமயமே எதிர்ப்பு எழுந்ததால் நிலைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் புதிதாக தாக்கல் செய்யப்பட உள்ள திருத்தச் சட்டத்தின்படி ஒருமுறை சென்சார் (தணிக்கைக்கு) ஆளான படங்களை மறு தணிக்கை செய்ய கோர முடியும்.
மேலும் திரைப்பட கதைத் திருட்டு போன்றவற்றுக்காக கடுமையான அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்க இச்சட்டம் வகை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
இந்த புதிய வரைவு மசோதாவுக்கு நடிகர்கள் கமல்ஹாசன், சூர்யா, விஷால் உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஏனைய பிரபலங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், உள்ளிட்ட 1400 கலைஞர்கள் கடிதம் மூலம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இயக்குனர்கள் அமீர், வெற்றிமாறன் & கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
ஆனால் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்டோர் மௌனம் காக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kamal Suriya Vishal against on Cinematograph act 2021