தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் அதிகளவில் இருக்கும் நிலையில் நேற்று மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தி மது பிரியர்களுக்கு உற்சாகம் அளித்தாலும் தாய்மார்கள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.
ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகளை திறப்பதால் நோய் தொற்று அதிகரிக்கும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
எனவே மதுக்கடைகளை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜேஷ் மற்றும் மக்கள் நீதி மய்யம் சார்பிலும் வழக்கு தொடரப்பட்டது.
இதனையடுத்து மதுக்கடைகளை மூட வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. இருந்த போதிலும் ஆன்லைனில் மதுவை விற்கலாம் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கமல்ஹாசன் தன் ட்விட்டரில் இரு பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
கோர்ட் தீர்ப்புக்கு முன்பு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
மருத்துவர்கள்,காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டு இருக்கின்றனர். நடுத்தர மக்கள் வீட்டில் கட்டுண்டு இருக்கின்றனர். ஏழைகள் வாழ வழியின்றி தவிக்கின்றனர்.
தற்போது டாஸ்மாக் திறந்து விட்டு, ஊர்கூடி கட்டிக் காத்ததை காற்றில் விடுவது நியாயமா? #தாங்குமாதமிழகம்
கோர்ட் தீர்ப்புக்கு பின்பு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…
நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையையும்,சத்தியமே வெல்லும் என்றும் நிரூபித்திருக்கிறது இந்த தீர்ப்பு.மக்களுக்கான நீதி கிடைத்திருக்கிறது. MNM மட்டும் பெற்ற வெற்றி அல்ல இது. எம் எண்ணம் வென்றது என தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி. இது தமிழ்த் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி #வெல்லும்தமிழகம்
Kamal statement about High Court order in Tasmac issue