BREAKING அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது.. – கமல்

BREAKING அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குகிறது.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams TN Govt for Opening Tasmac on Corona Lock down daysகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை அமலில் உள்ளது.

இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கொரோனா பச்சை மண்டலங்களில் நேற்று மே 4 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து தமிழகத்திலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இதனை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் கண்டித்துள்ளார்.

அவரின் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு…

என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

Kamal slams TN Govt for Opening Tasmac on Corona Lock down days

மன்னிப்பு…: தவறுக்கு வருந்துகிறோம்..!

மன்னிப்பு…: தவறுக்கு வருந்துகிறோம்..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We apology to Actress Kasthuri நேற்று மே 4 ஆம் தேதியன்று நடிகை கஸ்தூரி தொடர்பான ஒரு செய்தியை நம் தளத்தில் பதிவிட்டு இருந்தோம்.

கொரோனா ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தது.

சிறு குறு தொழில்களுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்த அரசு டாஸ்மாக் திறக்கப்பட மாட்டாது என அறிவித்து இருந்தனர்.

இதுகுறித்து நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது…

டாஸ்மாக் கை இப்போது திறப்பதில்லை என்ற நல்ல முடிவை எடுத்துள்ள தமிழக அரசுக்கு நன்றி நன்றி. நானும் கூட கண்டிப்பாக திறப்பார்கள் என்றே எண்ணினேன். என் கணக்கு தப்பாய் போனதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. தாய்மார்கள், குழந்தைகள் சார்பாக மீண்டும் நன்றி !.
@CMOTamilNadu @PThangamanioffl
என பதிவிட்டு இருந்தார் கஸ்தூரி.

இது தொடர்பான செய்தியில் டாஸ்மாக்கு லாக்கு… என்ற தலைப்பில் செய்தியை பதிவிட்டோம்.

அந்த செய்தியில் நடிகை கஸ்தூரியின் கையில் மதுபான பாட்டில் வைத்திருப்பது போல டிசைன் செய்து (கம்யூட்டர் கிராபிக்ஸ்) வெளியிட்டு இருந்தோம்.

இது கஸ்தூரியின் மனதை காயப்படுத்தியுள்ளதை அறிந்தோம்.

எனவே அவரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறோம். இனி இதுபோல் நடக்காது என்பதையும் இங்கே தெவித்து கொள்கிறோம்.

அது தொடர்பான செய்தியை இணையத்தில் இருந்து நீக்கிவிட்டோம் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.

நன்றி
ஆசிரியர்

We apology to Actress Kasthuri

வேலையிழந்த மக்கள்.. பெட்ரோல் விலை உயர்வு.. அரசு துரோகம்.; கடுப்பான கமல்

வேலையிழந்த மக்கள்.. பெட்ரோல் விலை உயர்வு.. அரசு துரோகம்.; கடுப்பான கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamalhassan slams Government for treachery on peoplesகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதுநாள் வரை 50 நாட்கள் கடந்துவிட்டது. மே 17 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த நிலையில் தமிழக அரசு பெட்ரோல்,டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை திடீரென உயர்த்தியுள்ளது.

இதனால் விலைவாசி மேலும் உயர வாய்ப்புள்ளது.

கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றும் செயல் என அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டித்துள்ளனர்.

இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

உலகமெங்கும் பெட்ரோல், டீசல் விலை குறைந்திருக்கும் வேளையில், அவை மீது மதிப்புக் கூட்டு வரி உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தும் என்பதை அறிந்திருந்தும், 40 நாட்களாக மக்கள் வேலையின்றி, வருமானமின்றி தவிக்கும் நிலையில், இதைச் செய்வது மக்களுக்கு அரசு செய்யும் துரோகம்”

இவ்வாறு தன் ட்விட்டரில் கமல் பதிவிட்டுள்ளார்.

Kamal slams Government for treachery on peoples

BIG BREAKING நிபந்தனைகளுடன் மே 7 முதல் டாஸ்மாக் ஓபன்.; மார்க்சிஸ்ட் கண்டனம்

BIG BREAKING நிபந்தனைகளுடன் மே 7 முதல் டாஸ்மாக் ஓபன்.; மார்க்சிஸ்ட் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt announced Tasmac shops will be open from 7th May in lock down கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை அமலில் உள்ளது.

இருப்பினும், சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள பச்சை மண்டலங்களில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

கர்நாடக, ஆந்திராவில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு மதுப்பிரியர்கள் அங்கு அலைமோதி வருகின்றனர். இந்த வீடியோக்கள் இன்று காலை முதலே இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்துள்ளது.

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் திறக்கப்படாது.

மதுக்கடைகளில் ஒருநேரத்தில் 5 பேருக்கு மேல் கூட கூடாது .

மதுக்கடையில் கூட்டத்தை தவிர்க்க கூடுதல் பணியாளர்களை நியமிக்க முடிவு 

டாஸ்மாக் பார்களுக்கு அனுமதி இல்லை, கடைகளுக்கு மட்டுமே அனுமதி

ஏற்கனவே பகல் 12 முதல் இரவு 10 மணி வரை இருந்த நேரம் மாற்றம்

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி .

அனைத்து மதுக்கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்

அத்துடன், மதுபானக் கடைகளை சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ’டாஸ்மாக் கடைகள் திறப்பு குறித்து மார்க்சிஸ்ட் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்புள்ள சூழலில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவது ஆபத்தானது எனவும் அது கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.

TN Govt announced Tasmac shops will be open from 7th May in lock down

திருமண மண்டபத்தை தர மறுத்தாரா ரஜினி.?; ஒர்க் அவுட் ஆகாத நெட்டிசன்களின் நெகட்டிவ் மீம்ஸ்

திருமண மண்டபத்தை தர மறுத்தாரா ரஜினி.?; ஒர்க் அவுட் ஆகாத நெட்டிசன்களின் நெகட்டிவ் மீம்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini ready to handover his Marriage hall for Corona treatmentஇந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் வாழும் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பலருக்கும் இந்த வைரஸ் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டது.

இதனையடுத்து சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தான் சில நெகட்டிவ் மீம்ஸ் கிரியேட்டர்கள் நடிகர் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரஜினி மண்டபதை தர மறுத்து விட்டதாக செய்திகளை பரப்பி விட்டனர்.

இந்த உண்மையறியாதவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர்.

தேவையற்ற தகவல்கள் பரப்பும் ஒரு சிலரின் வேலை வெட்டியான செய்தி அது எனவும் அப்படி எதுவும் இல்லை என ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

திருமண மண்டபம் எப்போதும் தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பே கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்படும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தன் திருமண மண்டபத்தை பயன்படுத்திக் கொள்வோம் என ரஜினியே தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Rajini ready to handover his Marriage hall for Corona treatment

திரைத்துறைக்கு ஊரடங்கில் தளர்வு கேட்கும் பெப்சி; எடப்பாடி ஏற்பாரா?

திரைத்துறைக்கு ஊரடங்கில் தளர்வு கேட்கும் பெப்சி; எடப்பாடி ஏற்பாரா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

FEFSI seeks lock down relaxation RK Selvamani request to Chief Minister கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மே 17 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

ஆனால் இன்று மே 4 முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை சில மாநிலங்கள் அறிவித்துள்ளன.

அதாவது சில வணிகங்களுக்கு மட்டும் சில விதிமுறைகளுடன் தளர்வுகளை அறிவித்துள்ளன.

இது பச்சை, ஆரஞ்ச், சிவப்பு மண்டலங்களை பொறுத்து மாறுப்பட்டுள்ளது.

இது தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.

இந்த நிலையில் இது போன்று சினிமாவிற்கும் இறுதிக்கட்டப் பணிகளையும், சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பெப்சி தலைவர் ஆர்கே. செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

“தற்போது ஊரடங்கு சட்டம்‌ போடப்பட்டு ஏறக்குறைய 50 நாட்களை தொட இருக்கிறோம்‌. கரோனா வைரஸ்‌ பாதிப்பினை கருதி மத்திய, மாநில அரசுகள்‌ ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின்‌ அனைத்து வேலைகளையும்‌ நிறுத்தி ஏறக்குறைய இன்றோடு 50-வது நாளை கடக்க உள்ளோம்‌.

வெற்றிகரமான 100 நாள்‌, வெள்ளிவிழா, பொன்விழா என திரைப்பட வெற்றிகளைச் சந்தோஷமாகக் கொண்டாடிய திரைப்படத்துறை இந்த வேலைமுடக்கப்பட்ட 50-வது நாள்‌ என்று அறிவிக்கக்கூடிய துர்ப்பாக்கியமான துன்பமான சூழ்நிலையில்‌ உள்ளோம்‌.

தமிழ்த்திரைப்பட துறையினர்‌ நலவாரியம்‌ மூலம்‌ ரூ.1,000/- மும்‌, தமிழ்த்திரைப்பட கலைஞர்கள்‌ மூலம்‌ பெறபட்ட நன்கொடை வழியாக 1,500 ரூபாய்க்கான உணவுப்பொருள்களும்‌, அமிதாப் பச்சன்‌ மூலம்‌ சோனி டிவி மற்றும்‌ கல்யாண்‌ ஜூவல்லரி வழங்கிய ரூ.1,500 மதிப்பிலான உணவுப்பொருள்களும்‌ ஏறக்குறைய ரூ.4,000 ரூபாய்க்கான உணவுப் பொருள்களை வைத்து இந்த 50 நாள்‌ வேலை முடக்கத்தில்‌ பசிப்பிணியில்‌ இருந்து எங்கள்‌ தொழிலாளர்களை உயிரோடு காப்பாற்றி உள்ளோம்‌.

இனியும்‌ வேலை முடக்கம்‌ நீடிக்கப்பட்டால் கரோனா வைரஸ்‌ பாதிப்பிலிருந்து தப்பித்த தொழிலாளர்கள்‌ பசிப்பிணியில்‌ பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில்‌ உள்ளார்கள்‌ என்பதை வருத்தத்துடன்‌ தெரிவித்துக் கொள்கிறோம்‌.

தற்போது 17 தொழிற்துறைகளுக்கு நிபந்தனையுடன்‌ கூடிய அனுமதி வழங்கியிருப்பதைப் போல்‌ திரைப்படத்துறைக்கும்‌, தொலைக்காட்சிகளுக்கும்‌ நிபந்தனைகளோடு அனுமதி வழங்கிடுமாறு பணிவுடன்‌ கேட்டுக் கொள்கிறோம்‌.

குறைந்த பட்சம்‌ திரைப்படங்களுக்குப் படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங்‌, ரீ-ரெக்கார்டிங்‌, டப்பிங்‌ போன்ற போஸ்ட்‌ புரொடக்‌ஷன்‌ பணிகளுக்கும்‌ தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும்‌ அனுமதி வழங்கினால்‌ சம்மேளனத்தின்‌ 40, 50 சதவீத தொழிலாளர்கள்‌ வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும்‌ என்பதையும்‌ அவர்கள்‌ பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும்‌ என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

இந்த பணிகளை சமூக இடைவெளியுடன்‌ பணி செய்ய வைக்க இயலும்‌, என்பதால்‌ திரைப்படங்களுக்கு போஸ்ட்‌ புரொடக்‌ஷன்‌ பணிகளுக்கும்‌ மற்றும்‌ தொலைக்காட்சி பணிகளுக்குமான அனுமதி வழங்குமாறு பணிவன்புடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மத்திய, மாநில அரசுகள்‌ விதிக்கின்ற அனைத்து கட்டுப்பாடுகளையும்‌ நிபந்தனைகளையும்‌ ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன்‌ மருத்துவ பாதுகாப்புகளுடன்‌ சுகாதாரமான முறையில்‌ இந்த பணிகளைச் செய்வோம்‌ என்று உறுதி அளிக்கின்றோம்‌”

இவ்வாறு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்மவணி தெரிவித்துள்ளார்.

FEFSI seeks lock down relaxation RK Selvamani request to Chief Minister

More Articles
Follows