தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு மே 17 வரை அமலில் உள்ளது.
இருப்பினும் ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
அதன்படி, நாட்டின் பல பகுதிகளில் உள்ள கொரோனா பச்சை மண்டலங்களில் நேற்று மே 4 முதல் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து தமிழகத்திலும் மதுபான கடைகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை வரும் மே 7ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை மட்டுமே திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இதனை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் கண்டித்துள்ளார்.
அவரின் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…
கோயம்பேடை காப்பாற்ற இயலாமல் தொற்று எண்ணிக்கையை அதிகப் படுத்திய அரசு, இப்பொழுது டாஸ்மாக்கை திறக்குமாம். அரசின் ஒவ்வொரு தவறும் உயிர்களை பலி வாங்குவது புரியவில்லையா தலைமைக்கு…
என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.
Kamal slams TN Govt for Opening Tasmac on Corona Lock down days