தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொடிய வைரஸ் ஆக கொரோனா உருவெடுத்துள்ளது.
இதனை தடுக்க இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தொடர்பாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தன் கருத்துக்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
21 நாட்கள் (ஏப்ரல் 14 வரை) இந்தியா முழுவதும் ஊரடங்கு போட்டால் தினக்கூலிகள் மற்றும் நடைபாதை வாசிகள் என்ன செய்வார்கள்? என மோடி அரசை சாடியிருந்தார்.
அதன்பின்னர் கொரானா சிகிச்சை பெறுபவர்களுக்கு தன் இல்லத்தை தற்காலிக மருத்துவனையாக்க சம்மதம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சற்றுமுன் மற்றொரு ட்விட்டை பதிவிட்டுள்ளார்.
அதில்..
வீட்டின் உள் இருத்தல் என்பது முதல்படி தான், ஆனால் அது மட்டுமே தீர்வாகாது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை அதிகாரி அறிவுறுத்துகிறார். அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாக முன்னேற வேண்டிய நேரம் இது. @Vijayabaskarofl @CMOTamilNadu என தமிழக அரசை சாடியுள்ளார்.
Kamal slams TN Govt and Stay home for 21 days order
இதன் பின்னர் மற்றொரு பதிவில்…
Dear @nsitharamanoffc & @PMOIndia
Thank you for reaching out to the poorest of the poor. My fear of the Underprivileged losing their livelihood led to my out burst and the open letter to the Prime Minister. This act of supporting them during this crisis is much appreciated.