தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்திய ராணுவத்திற்கும் சீனா ராணுவத்திற்கும் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
வீர மரணமடைந்த வீரர்களில் ஒருவர் பழனி என்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வீர சிங்கம் மடம் பகுதி அருகே உள்ள கடுக்கலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து மகன் பழனி வயது 40. இவர் கடந்த 22 ஆண்டுகளாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
அவருக்கு பத்து வயது மதிக்கத்தக்க மகன் மற்றும் எட்டு வயது மகள் உள்ளனர்.
அவரது உடல் நாளை காலை 9 மணி முதல் 12 மணிக்குள் உடல் கொண்டு வரப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் பழனியின் வீரமரணத்துக்கு நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பதிவில்.. “எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம்.
அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Kamal salutes Indian soldier Pazhani killed in Chinese attack