தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது.
அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் பலரும் மனுதாக்கல் செய்தனர்.
இன்று வெள்ளி (மார்ச் 19) மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று மார்ச் 19ல் வெளியிட்டார்.
சிறப்பம்சங்கள்…
* தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்க திட்டம்
*பெண்களுக்கு மாத ஊதியம் என்பது வேலை வாய்ப்பை உருவாக்குவது; இலவசம் வழங்குவது அல்ல. அவர்களது திறனை மேம்படுத்தி மாதம் ரூ.10,000 வரை வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்படும்.
* இலவச வாஷிங் மெஷினுக்கான மின் கட்டணம் நாளை மக்கள் தலையில் தான் விழும்.
*அனைத்து மாநகராட்சிகளிலும் ’மோனா ரயில்’ திட்டம் கொண்டு வரப்படும்.
* மருத்துவப்படிப்புக்கான ’நீட்’ நுழைவுத்தேர்வுக்கு பதிலாக மாநில பாடத்திட்டங்களை கொண்ட ’சீட்’ நுழைவுத்தேர்வு. (STATE ENTRANCE ELEGIBILITY TEST)
*அனைவருக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம், மருத்துவ வசதி, தரமான அரசு மருத்துவக் கல்வி, உயர் கல்வியில் சமூக நீதி நிலைநாட்டப்படும்.
*மகளீர் வங்கிகள் உருவாக்கப்படும்.
*சர்வதேச தரத்தில் தமிழக அரசு பள்ளிகள்.
* மக்கள் கேண்டீன் உருவாக்கப்படும்… இந்த கேண்டீன் அம்மா கேண்டீன் போன்றதல்ல… ராணுவ கேண்டீன் போன்றது. மக்கள் கேண்டீன் திட்டத்தில் தரமான பொருட்கள் நியாயமான விலையில் கிடைக்கும்.
Kamal Haasan releases MNM party manifesto