தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி, நரேன் நடித்து வெளியான படம் ‘கைதி’.
இப்படம் அந்தாண்டு தீபாவளிக்கு வந்த விஜய் படத்துடன் மோதியது. வசூலில் சக்கை போடு போட்டது.
ட்ரீம் வாரியர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார்.
இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டதாக சில மலையாள ஊடகங்கள் & தமிழ் ஊடகங்களில் செய்தி வெளியானது.
(கேரளாவைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ல் புழல் சிறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொன்னதாகவும்
அவர் அப்போதே ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு கதை கை மாறியதாக கூறப்படுகிறது. )
நம் தளத்தில் இப்படியொரு செய்தி வெளியாகவில்லை.
இது குறித்து டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் தன் ட்விட்டரில்….
“எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘கைதி’ திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
இது சம்பந்தமாக ஊடக நண்பர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு கருத்துக் கேட்டும் வருகின்றனர். எங்களுக்கு அவ்வழக்கின் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் தெரியாத காரணத்தால் அதைப்பற்றிய விபரங்கள் எதுவும் தற்போது வெளியிட இயலாது.
அதே சமயம் ‘கைதி’ சம்மந்தப்பட்ட ஊடக செய்திகளில் எங்கள் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நாங்கள் உறுதியாக மறுக்கவோ, சட்டப்படி இதை நிரூபிக்கவோ முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் சில செய்தி நிறுவனங்கள் வழக்கின் விசாரணை முடிவு தெரியாமல், இத்திரைப்படம் சார்ந்த எவரையும் களங்கப்படுத்தி செய்தி வெளியிடாமல் ஊடக தர்மம் காக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நன்றி!” என்று சமூக வலைதளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Kaithi movie Controversy Clarification Statement from Producer SR Prabhu