சினிமா சூட்டிங் ; தியேட்டர் ஓபனிங் எப்போ..? கடம்பூர் ராஜூ பதிலால் கவலையடைந்த திரையுலகினர்

சினிமா சூட்டிங் ; தியேட்டர் ஓபனிங் எப்போ..? கடம்பூர் ராஜூ பதிலால் கவலையடைந்த திரையுலகினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kadambur rajuகோவில்பட்டி‌ அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் கட்டிட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

அதன்பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்…

“சினிமா சூட்டிங்க்கு அனுமதி கோரி திரைப்படத்துறையினர் என்னையும், தமிழக முதல்வரையும் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

டிவி சீரியல் சூட்டிங் நடைபெற உள்அரங்கு போதுமானது. அங்கு 60 பேர் இருந்தால் கூட போதுமானது.

ஆனால் அவுட்டோரில் சினிமா சூட்டிங் நடைபெறும். எனவே அங்கே பார்வையாளர்கள் திரளுவார்கள்

மேலும் சூட்டிங் நடத்த பல்வேறு அனுமதி வாங்கவேண்டியுள்ளது.

இப்போதுள்ள கொரோனா கட்டுப்பாடு சூழ்நிலையில் அதற்கெல்லாம் அனுமதிக்க வழங்க இயலாது. இது குறித்து முதல்வர் முடிவு செய்வார்.

மேலும் தியேட்டர்கள் திறப்பது குறித்து மத்திய அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.“ என்றார்.

அமைச்சரின் இந்த பதிலால் கவலையடைந்த திரையுலகினர் தங்களுக்கு எப்போது விடிவு காலம் பிறக்கும்? என காத்திருக்கின்றனர்.

வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்..; சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் என்ன தொடர்பு..?

வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்..; சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் என்ன தொடர்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nanjil vijayan vanithaகடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் வனிதா.

தன்னை சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார்.

இதனை அடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூப் சேனல் சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் ஆதரவளித்தனர்.

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

அப்போது சூர்யா தேவிக்கும் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

அதனால் நாஞ்சில் விஜயனும் வனிதாவுக்கு மோதல் உருவானது.

இந்த வேளையில் சூர்யா தேவியுடன் நாஞ்சில் விஜயன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார் வனிதா.

கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதுதான் தமிழ் கலாச்சாரமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா…, “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார்.

அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவிதான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

என பதிவிட்டுள்ளார் நடிகை வனிதா.

பிரவசத்தின் போது தாயை போல குழந்தைக்கும் வலிக்கும்..; புதிய சங்கத்திற்கு பாரதிராஜா விளக்கம்

பிரவசத்தின் போது தாயை போல குழந்தைக்கும் வலிக்கும்..; புதிய சங்கத்திற்கு பாரதிராஜா விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் இனிய தயாரிப்பாளர்களே…

கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலி மிக்கதுதான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே.

அப்படித்தான் இந்த இன்னொரு முயற்சியும்… புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.

தாய் என்பவள் இன்னொரு உயிரை இவ்வுலகிற்குப் பரிசளிப்பவள். தனக்குள்ளேயே எல்லாவற்றையு வைத்துக் கொண்டிருப்பவள் அல்ல. தாய்க்கு ஒரு பிரசவம் எப்படி வலிக்குமோ அதே வலி பிள்ளைக்கும் இருக்கும்.

தாயிலிருந்து இன்னொன்றாய் பிரியும் குழந்தைக்கு உள்ள பெருவலியை இங்கு யாருமே பேசுவதில்லை. அதன் வலியை அப்பிள்ளை வெளிப்படுத்தாதால், அவ்வலியை நாம் உணராமலே போய்விடுகிறோம் .

ஆனாலும் நான் வெளிப்படுத்தத் தெரிந்த குழந்தை. இன்னொரு சங்கம் என்ற குழந்தை முயற்சி எனக்கு வலிக்கவே செய்கிறது. வலிக்க வலிக்கவே பிறக்க வேண்டியதும் அவசியமாகிறது.

கடந்த எனது அறிக்கையில் சக தயாரிப்பாளர்களிடம் கலந்து பேசித்தான் இன்னொரு சங்கம் பற்றி முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தேன்.

அடிப்படைப் பேச்சு வார்த்தைகளின் போதே செய்திகள் காற்றில் கசியத் தொடங்கி சில கருத்து வேறுபாடுகளைப் பரப்பத் தொடங்கிவிடுகின்றன.

முழுமையான முடிவெடுக்கும் முன் காதுகள் முந்திக் கொண்டுவிடுகின்றன.

இப்போதைய காலகட்டத்தில் இன்னொரு சங்கம் அவசியமாகிறது.

ஒரு மடை அடைத்துக் கொண்டால் இன்னொரு மடையைத் திறப்பது போல்தான் இதுவும். நாம் செயல்பட்டே ஆண்டுகளாகிவிட்டன.

பட வெளியீடுகள், பணம் போட்டவர்களின் அபாய நிலை, எதிர்காலக் கேள்விக் குறி எல்லாவற்றிற்கும் பதில் தேடுவது முக்கியம்.

தாய் சங்கத்தை உடைக்கவில்லை. அவள் அப்படியே மெருகுற இருப்பாள். திரை வீட்டின் ஆளுமை அவள்தான். அவளை விட்டு யாரும் எங்கும் போகவில்லை. பிரித்தெடுக்கவும் இல்லை.

இது செயல்பட வேண்டிய காலகட்டம். கொரானாவினால் நுரையீரல் பாதிக்கப்பட்ட சினிமாவை நம் திரையகத்தைச் சார்ந்தவர்களே மருந்து கொடுத்து சரியாக்க வேண்டிய நேரம் இது.

கையைப் பிசைந்து கொண்டே இன்னும் எவ்வளவு நாட்கள் காத்திருப்பது? அதனால் தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தறிந்து மற்ற நிர்வாகிகள் குழுவினர் விபரம் பின்னர் அறிவிக்கப்படும். பாரதிராஜாவாகிய எனது தலைமையில் உறுப்பினர் சேர்க்கை இன்றிலிருந்து தொடங்குகிறோம்.

இதைப் பிரித்தாள்கிறோம் என யாரும் நினைக்க வேண்டாம். சில முக்கிய முடிவுகளுக்காய் உழைக்க இருக்கிறோம்.

நிறைவாக சொல்வதென்றால், இப்பிறப்பின் செயல்பாடுகள் சினிமாவின் ஆரோக்கியம் கருதியே தொடங்குகிறது!

பிள்ளைகளும், தோழர்களும், இணை வயதினரும், என்னை மூத்தோரும் இந்த அவசியத்தை இக்கட்டான சூழல் கருதி புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

நன்றி

பாசத்துடன்

உங்கள் பாரதிராஜா

Bharathiraja starts new Producers Association

3 மொழி 3 கதை ஒரே க்ளைமாக்ஸ்.. ‘கோசுலோ’ பட டைட்டில் போட்டி; வீடு தேடிவரும் பரிசு

3 மொழி 3 கதை ஒரே க்ளைமாக்ஸ்.. ‘கோசுலோ’ பட டைட்டில் போட்டி; வீடு தேடிவரும் பரிசு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Gosuloசமீபத்தில் *கோசுலோ* என்கிற படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சந்திரகாந்த் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பி.ஆர்.ராஜசேகர் தயாரித்துள்ளதுடன் கதை திரைக்கதையையும் அவரே எழுதியுள்ளார்.

கோபால் இசையமைக்க, ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் டைட்டிலே வித்தியாசமாக இருக்கிறதே என இந்தப்படத்தை தமிழில் வெளியிடும் *ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்* நிறுவனத்தை சேர்ந்த ஜெனீஷிடம் தொடர்பு கொண்டபோது, படத்தை பற்றி அவர் சொன்ன தகவல்கள் அனைத்துமே வித்தியாசமாகத்தான் இருந்தது.

“தமிழ், தெலுங்கு, கன்னடம் என மும்மொழிகளில் தயாராகியுள்ளது இந்தப்படம்.. கதையின் தன்மை கருதி தமிழ் பதிப்புக்கு *கோசுலோ* என்கிற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நடிகை லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, அச்சுதா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இதில் சுதாராணி பல வருடங்களுக்கு முன் தமிழில் வசந்தகால பறவை, தங்கக்கிளி ஆகிய படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கன்னட திரையுலகில் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நடிகர் என பன்முகத் திறமைகளைக் கொண்டவரும் சமூக ஆர்வலருமான சுரேஷ் ஹெப்லிகர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இதுவரை வெளியான மும்மொழி படங்கள் எல்லாமே ஒரே கதை, ஒரே நடிகர் பட்டாளம் என்ற வகையிலோ, அல்லது ஒரே கதை, அந்தந்த மொழிக்கு ஏற்ற நடிகர்கள் என்கிற வகையிலோ தான் வெளியாகி இருக்கின்றன.. இன்னும் சொல்லப்போனால் கதை முழுவதும் ஒரே மாதிரி இருந்தால் கூட, மொழிக்கு ஏற்றபடி க்ளைமாக்ஸ் மட்டும் மாற்றப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

ஆனால் இந்திய சினிமாவில் முதன்முறையாக ஒரு புதிய முயற்சியாக மூன்று மொழிகளுக்கும் ஒப்பனிங், க்ளைமாக்ஸ் ஆகியவை மட்டும் ஒரே மாதிரியாகவும் உள்ளே நடக்கும் கதை வேறு மாதிரியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது தான் இந்தப்படத்தின் ஹைலைட்டான அம்சம்.

இந்தப்படம் சைகாலஜிகல் த்ரில்லர் ஆக உருவாகியுள்ளது.. ஒரு மலை பிரதேசத்திற்கு ஒரு வயதான தம்பதி, ஒரு நடுத்தர வயது ஜோடி மற்றும் ஒரு இளைஞன் ஆகியோர் வருகின்றனர்.. அங்கே அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, அதை அவர்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பது தான் படத்தின் கதை..

படத்தை பார்க்கும்போது எதற்காக *கோசுலோ* என்கிற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்.. அதற்கு முன்னதாக இந்தப்படத்திற்கு *கோசுலோ* என ஏன் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை யூகித்து அதற்கான சரியான காரணத்தை எங்களுக்கு எழுதி அனுப்பும் 25 நபர்களுக்கு அவர்களுடையே வீடு தேடி பரிசுவரும் புதிய போட்டி ஒன்றையும் நடத்த உள்ளோம்” என கூறுகிறார் *ஜெனீஷ்*

நல்ல படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் *ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்* நிறுவனம் அடுத்ததாக யாஷிகா ஆனந்த் நடிக்கும் ‘கிருஷ்ணா அர்ஜூனா யூகம்’, பல்வேறு சர்வதேச விருதுகளைக் குவித்திருக்கும் ஞானச்செருக்கு உள்ளிட்ட சில தரமான படங்களை அடுத்தடுத்து வெளியிட இருக்கின்றனர்.

*கோசுலோ நடிகர்கள் மட்டும் தொழில்நுட்ப குழு விபரம் *

நடிகர்கள் ; *லட்சுமி, சுதாராணி, சாது கோகிலா, சுரேஷ் ஹெப்லிகர், அச்சுதா குமார்* மற்றும் பலர்

கதை, திரைகதை மற்றும் தயாரிப்பு ; பி.ஆர்.ராஜசேகர்

இயக்கம் ; சந்திரகாந்த்

இசை ; கோபால்

ஒளிப்பதிவு ; ஸ்ரீனிவாசன்

படத்தொகுப்பு ; நிரு

பாடல்கள் ; வைரபாரதி

நடனம் ; ஹிட் மஞ்சு

ஒலி வடிவமைப்பு ; AVM ஐயப்பன்

எபெக்ட்ஸ்; சேது

மக்கள் தொடர்பு ; A.ஜான், சக்தி சரவணன், ராஜ்குமார்

மது கடை குறைப்பு.; மது விலை அதிகரிப்பு..; சானிடைசரை அருந்தும் மதுபிரியர்கள்.!

மது கடை குறைப்பு.; மது விலை அதிகரிப்பு..; சானிடைசரை அருந்தும் மதுபிரியர்கள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hand sanitizerசந்தோஷமா இருக்கோமா.. சரக்கடிப்போம்.. கவலையா இருக்கோமா சரக்கடிப்போம்… இதுவே குடிகாரன்களின் குடி மந்திரம்.

அவர்களுக்கு குடிக்க ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான்.

தற்போது கொரோனா ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்தாலும் மது அருந்தாமல் இருக்க மாட்டார்கள்.

தற்போது கொரோனாவுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தப்படும் சானிடைசரையும் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.

கிருமி நாசினியில் ஆல்கஹால் இருப்பதாலும், குறைந்த விலையில் கிடைப்பதாலும், இதனை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த அவலம் ஆந்திராவில் நடந்து வருகிறது.

ஆந்திராவில் பிரகாசம் என்ற மாவட்டத்தில் கிருமிநாசினி குடித்து 15 பேர் இறந்த நிலையில் தற்போது கடப்பா மாவட்டத்திலும் சானிடைசரை அதிக அளவில் அருந்தி வருகின்றனர்.

எத்தனை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்தாலும் இவர்களை திருத்த முடியாது போலவே….

கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே போராட வேண்டும்..; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே போராட வேண்டும்..; உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

tedros adhanomகொரோனா வைரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இன்னும் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும் என உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜெனீவாவில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தலைமையில் நடைபெற்ற போது இத்தகவலை தெரிவித்தார்.

இதுவரை இல்லாத வேகத்தில் மருத்துவ துறை கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் ஆகும்.

எனவே மக்கள் அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே அதனுடன் போராட வேண்டும் என்றும் டெட்ரோஸ் கூறினார்.

More Articles
Follows