தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.
21 நாட்கள் போடப்பட்டிருந்த இந்த உத்தரவு தற்போது 2 வாரங்களை கடந்துள்ளது.
மோடியின் இந்த உத்தரவால் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிவாரண நிதியை அளிக்க வேண்டும் என பிரதமர், மாநில முதல்வர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதுவரை தமிழ் சினிமா ஹீரோக்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் ரூ. 25 லட்சம் நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.
மற்ற ஹீரோக்கள் மௌனம் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தரமணி படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே சதீஷ்குமார் அவர்கள் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…
கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடி வருகிறது. எனவே தமிழ் சினிமாவை சார்ந்த ஹீரோ, ஹீரோஸ், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கள் நிதியை வழங்க வேண்டுகிறேன்.
உண்மையான ஹீரோக்களாக மாறுங்கள். இளைய தலைமுறைக்கு ரோல் மாடலாக மாறுங்கள். பள்ளிக் குழந்தைகள் கூட தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.
இவர் தன் சார்பில் 2 லட்சம் ரூபாயை முதல்வர் கொரோனா நிதிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
JSK request Kollywood Industry to fund for Corona relief