ரியல் ஹீரோவா மாறுங்க; கோலிவுட் ஹீரோஸ்-க்கு JSK வேண்டுகோள்

ரியல் ஹீரோவா மாறுங்க; கோலிவுட் ஹீரோஸ்-க்கு JSK வேண்டுகோள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

producer JSKகொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

21 நாட்கள் போடப்பட்டிருந்த இந்த உத்தரவு தற்போது 2 வாரங்களை கடந்துள்ளது.

மோடியின் இந்த உத்தரவால் பலரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் நிவாரண நிதியை அளிக்க வேண்டும் என பிரதமர், மாநில முதல்வர்கள் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதுவரை தமிழ் சினிமா ஹீரோக்களில் நடிகர் சிவகார்த்திகேயன் மட்டும் ரூ. 25 லட்சம் நிதியாக முதல்வர் நிவாரண நிதிக்கு கொடுத்துள்ளார்.

மற்ற ஹீரோக்கள் மௌனம் காத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தரமணி படத் தயாரிப்பாளரும் நடிகருமான ஜே சதீஷ்குமார் அவர்கள் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது…

கொரோனாவை எதிர்த்து இந்தியா போராடி வருகிறது. எனவே தமிழ் சினிமாவை சார்ந்த ஹீரோ, ஹீரோஸ், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் பிரதமர் மற்றும் முதல்வர் நிவாரண நிதிக்கு தங்கள் நிதியை வழங்க வேண்டுகிறேன்.

உண்மையான ஹீரோக்களாக மாறுங்கள். இளைய தலைமுறைக்கு ரோல் மாடலாக மாறுங்கள். பள்ளிக் குழந்தைகள் கூட தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.

இவர் தன் சார்பில் 2 லட்சம் ரூபாயை முதல்வர் கொரோனா நிதிக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

JSK request Kollywood Industry to fund for Corona relief

கொரானா மருத்துவம்: OLX-ல் வல்லபாய் சிலை ரூ. 30000 கோடிக்கு விற்பனை

கொரானா மருத்துவம்: OLX-ல் வல்லபாய் சிலை ரூ. 30000 கோடிக்கு விற்பனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vallabhbhai Patel Statue for sale on OLX for Corona fund குஜராத் மாநிலத்தில் நர்மதா அணை அருகில் அவருக்கு உலகிலேயே மிக உயரமான இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 787 அடி உயரம் கொண்ட படேலின் சிலை, ரூ.3,000 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

சர்தார் வல்லபாய் படேலின் 143-வது பிறந்தநாளையொட்டி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த சிலைக்கு ஒற்றுமையின் சிலை என பெயரிட்டு பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

அப்போதே இதன் மீதான விமர்சனங்கள் எழுந்தன.

அதாவது இந்த சிலையால் என்ன பலன் கிடைக்கப்போகிறது. அந்த பெரும் தொகையை வேறு ஏதாவது திட்டத்திற்கு பயன்படுத்தலாம் என்று கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தற்போது சிலையை ஒருவர் ஓஎல்எக்ஸில் விற்பனைக்கு உள்ளதாக அறிவித்துள்ளார்.

அது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அந்த மர்ம நபர் OLX இணையதளத்தில் கொடுத்துள்ள விளம்பரத்தில்…

கொரோனாவைக் கட்டுப்படுத்த மருத்துவ செலவுக்கு அரசுக்கு பணம் தேவைப்படுவதாலும், மருத்துவமனை கட்டவும் இந்த சிலையை ரூ.30ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து சிலையின் தலைமை நிர்வாகி குஜராத் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து OLX இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர் யார்? என தேடி வருகின்றனர்.

Vallabhbhai Patel Statue for sale on OLX for Corona fund

மீண்டு வரும் ‘பிளாக் விடோ’..; கெஸ்ட் ரோலில் ‘அயர்ன் மேன்’

மீண்டு வரும் ‘பிளாக் விடோ’..; கெஸ்ட் ரோலில் ‘அயர்ன் மேன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Black Widow movie finally has a new release date ஹாலிவுட் படமான ‘அவெஞ்சர்ஸ்’ படத்தில் உள்ள கேரக்டர்களில் முக்கியமான கேரக்டர் ‘பிளாக் விடோ’.

‘அவெஞ்சர்ஸ்’ குழுவை உருவாக்கி ‘ஷீல்டு’ ஏஜென்சியில் பணி புரிபவர்தான் பிளாக் விடோ.

‘பிளாக் விடோ’ கதாபாத்திரத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் நடித்துள்ளார்.

ஆனால், அண்மையில் வெளியான ‘அவெஞ்சர்ஸ் என்ட்கேம்’ படத்தில் பிளாக் விடோ கேரக்டர் இறந்து போவது போல காட்சியிருக்கும்.

இந்த நிலையில் தான் பிளாக் விடோ கேரக்டர் மட்டும் தனி ஒரு படமாக வருகிறது.

‘கேப்டன் அமெரிக்கா – சிவில் வார்’ படத்திற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களில் ‘பிளாக் விடோ’ முக்கிய கேரக்டராக நடிக்கும் படம் தான் இது.

இதில் ‘அயர்ன் மேன்’ கூட கெஸ்ட் ரோலில் வரவிருக்கிறாராம்.

ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மே 1ம் தேதியில் வெளியாகவிருந்த ‘பிளாக் விடோ’ படம் தற்போது கொரோனா பிரச்சினையால் நவம்பர் 6ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Black Widow movie finally has a new release date

கொரானாவால் தள்ளிப் போகும் டாம் குரூஸின் ‘டாப் கன்’ ரிலீஸ்

கொரானாவால் தள்ளிப் போகும் டாம் குரூஸின் ‘டாப் கன்’ ரிலீஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tom Cruise confirms Top Gun sequel release new date due to COVID 19கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த உலகமே முடங்கியுள்ளது.

ஒரு சில நாடுகள் தற்போது தான் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளன.

ஆனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான தியேட்டர்கள் மால்கள் மூடப்பட்டுள்ளன.

சில ஹாலிவுட் நட்சத்திரங்கள் கூட கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியீட்டுக்கு தயாரான ஜேம்ஸ் பாண்ட் படம், வொண்டர் உமன் போன்ற படங்கள் கூட கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது போல டாம் குரூசின் ‘டாப் கன்’ படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டாம் க்ரூஸ் நடிப்பில் 1986 ஆம் ஆண்டு வெளியான படம் டாப் கன்.

அதில் டாம் கெல்லி மெக்கில்ஸ், வல் கிம்மர், அன்டோனி எட்வர்ஸ் உள்ளிட்டோர் நடிக்க டோனி ஸ்கார் என்பவர் இயக்கியிருந்தார்.

இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் 35 ஆண்டுகளுக்கு பிறகு டாப் கன் மேவரிக் என்ற பெயரில் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

ஜோசப் கொசினிக்ஷி இயக்கியுள்ள இப்படத்தில் டாம் குரூசுடன் மைல்ஸ் டெல்லர், ஜெனிபர் கொனோலி, ஜான் ஹம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கொரோனா பிரச்சினையால் டாப் கன் படம் தற்போது டிசம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tom Cruise confirms Top Gun sequel release new date due to COVID 19

ஊரடங்கில் அவுட்டிங் சென்ற நடிகை..; கடித்து குதறிய தெரு நாய்கள்

ஊரடங்கில் அவுட்டிங் சென்ற நடிகை..; கடித்து குதறிய தெரு நாய்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Aanchal Khurana attacked by 3 street dogsகொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இதனை மதித்து பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஒரு சிலர் போரடிக்குது என்ற பெயரில் தெருக்களில் வலம் வருகின்றனர். இவர்களை போலீசார் கண்டித்தும் தண்டித்தும் வருகின்றனர்.

இந்த நிலையில் தெருக்களில் தன் நாயை வைத்துக் கொண்டு வாக்கிங் சென்ற ஒரு நடிகையை அங்குள்ள தெரு நாய்கள் கடித்து குதறுகின்றன.

அந்த சீரியல் நடிகையின் பெயர் ஆஞ்சல் குரானா.

டெல்லியில் வசிக்கும் இவர் நிறைய ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார்.

நாய் கடி குறித்து நடிகை ஆஞ்சல் குரானா கூறியதாவது…

“நான் வாக்கிங் போன போது ஊரடங்கு உத்தரவால் சாலையில் யாரும் இல்லை. அப்போது நாய்கள் சுற்றி வளைத்து என்னை கடித்து குதறி விட்டன. அக்கம் பக்கத்தினர் உதவி செய்து என்னை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்” என அவர் தெரிவித்துள்ளார்.

Actress Aanchal Khurana attacked by 3 street dogs

சினிமாவில் அறிமுகமாகிறார் ஜார்ஜ் மகன்; துரை சுதாகருடன் கூட்டணி

சினிமாவில் அறிமுகமாகிறார் ஜார்ஜ் மகன்; துரை சுதாகருடன் கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

George Maryan son Britto debut with Durai Sudhakarசைவம், கைதி, தடம், பிகில் உள்ளிட்ட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஜார்ஜ் மரியான்.

சின்ன வேடம் தான் என்றாலும் அதில் தன் நடிப்பை முத்திரையை நிச்சயம் பதிவு செய்துவிடுவார் இவர்.

இவரை தொடர்ந்து தற்போது இவரது மகன் பிரிட்டோ எனபவரும் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

தூங்கா கண்கள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாகிறார்.

இந்த படம் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது.

திருவாங்கூர் சமஸ்தானத்தில் கிட்டதட்ட 60 வருடங்களுக்கு முன் நடந்த கதையாம் இது.

த.வினு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் அவரது தந்தை ஜார்ஜ், களவாணி துரை சுதாகர், நிக்கேஷ், கந்தசாமி, காஞ்சனா ரமேஷ், டாக்டர் பிரபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

அப்ஷரா, ரேஷ்மா ஆகியோர் ஹீரோயின்களாக அறிமுகமாகிறார்கள்.

இமயவன் ஒளிப்பதிவு செய்ய இளங்கோ கலைவாணன் இசையமைத்துள்ளார்.

George Maryan son Britto debut with Durai Sudhakar

More Articles
Follows