தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகத்தின் முதல்வராகவும், அதிமுக.வின் பொது செயலாளருமான ஜெயலலிதா ஓர் நடிகையும் ஆவார்.
இவரின் வாழ்க்கை வரலாற்றினை திரைப்படமாக எடுக்க மும்பையை சேர்ந்த நிறுவனம் ஒன்று தயாரிக்கவுள்ளது.
இதற்கு தேவையான விஷயங்களை அவர்கள் கடந்த ஒரு வருடமாக திரட்டி வைத்துள்ளனர்.
இப்படத்திற்கு ‘தாய்-புரட்சித் தலைவி’ என்று பெயரும் சூட்டப்பட்டுள்ளது.
அவர் உயிருடன் இருக்கும்போதே இது குறித்து அவரிடம் பேசியதாகவும், அதற்கு அவர் பிறகு பேசலாம் என்று கூறியதாகவும் தயாரிப்பாளர் ஆதித்ய நாத் தெரிவித்துள்ளார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் எடுக்க போவதாகவும், அவரது சினிமா கால வாழ்க்கையை சென்னையிலும் எடுக்கப்போவதாக கூறப்படுகிறது.
மேலும், அவரது கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார்கள் என்ற அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும், படப்பிடிப்பு வரும் ஜனவரி மாத இறுதியில் துவங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.