கணவர் மற்றும் வருங்கால குழந்தை தொடர்பாக ரக்ஷிதா வின் இறுதி முடிவு இதுவா?

கணவர் மற்றும் வருங்கால குழந்தை தொடர்பாக ரக்ஷிதா வின் இறுதி முடிவு இதுவா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மற்ற ‘பிக் பாஸ் தமிழ் 6’ போட்டியாளர்களுடனான உரையாடல்களில் ரக்ஷிதா தனது முந்தைய உறவில் இருந்து விலகிவிட்டதாக தெரிவித்தார் .

வெளியில் ஒரு தேவதை தனக்காகக் காத்திருப்பதாகவும், வேறு எந்தத் தகவலையும் வெளியிடாமல் அவள் உறவில் இருப்பதாகவும் அவள் சூசகமாகச் சொன்னாள்.

தனக்கு 35 வயதாகும் போது ஒரு பெண் குழந்தையை தத்தெடுப்பதே தனது வாழ்வின் லட்சியம் என்று கூறினார்.

தினேஷுடன் மீண்டும் இணையும் எண்ணம் ரக்ஷிதா வுக்கு இல்லை என்றும், பிரசவத்திற்குப் பதிலாக தத்தெடுக்கும் எண்ணம் ரசிதாவுக்கு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நடிகை வனிதா – ரவுடி பேபி சூர்யா தேவி மோதல்.; காமெடியன் நாஞ்சில் விஜயன் கைது.

நடிகை வனிதா – ரவுடி பேபி சூர்யா தேவி மோதல்.; காமெடியன் நாஞ்சில் விஜயன் கைது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2020 ஆம் ஆண்டில் ‘டிக் டாக்’ பிரபலம் ரவுடி பேபி சூர்யா தேவி மற்றும் நடிகை வனிதா இடையே மோதல் ஏற்பட்டது.

அப்பொழுது இது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்த பிரச்சனையில் நடிகை வனிதாவுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருந்தார் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன்.

இதனால் பிரச்சினை நாஞ்சில் விஜயன் பக்கம் திரும்பியது.

எனவே சூர்யா தேவி மற்றும் நாஞ்சில் விஜயனுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் மீது போலீஸில் புகார் அளித்தார் சூர்யா தேவி.

அவர் மீது ஐந்து பிரிவுகள் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கிற்காக நாஞ்சில் விஜயன் ஆஜராகவில்லை என கூறப்படுகின்றது.

விஜயனை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் வந்துள்ளன.

OFFICIAL பண மழையில் நனையும் அஜித்.; ‘காசேதான் கடவுளடா..’ சாங் ரிலீஸ் அப்டேட்

OFFICIAL பண மழையில் நனையும் அஜித்.; ‘காசேதான் கடவுளடா..’ சாங் ரிலீஸ் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’.

இதில் அஜித், மஞ்சுவாரியர், வீரா, ஜான் கொகைன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அஜித் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில் இடம் பெற்ற ‘சில்லா சில்லா….’ என்ற பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

2 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்த பாடல் யூடியுப்பில் பெற்றுள்ளது.

இதன்பின்னர் அடுத்த பாடல் ‘காசேதான் கடவுளடா.. ‘என்ற அடுத்த பாடல் குறித்து அப்டேட் கொடுத்து இருந்தார் இப்பட இசை அமைப்பாளர் ஜிப்ரான்.

‘காசேதான் கடவுளடா..’ என்ற பாடல் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்தப் பாடல் நாளை டிசம்பர் 18ஆம் தேதி மதியம் 2 மணி அளவில் வெளியாகும் என அறிவித்து ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

அதில் பண மழை பொழிய கையை நீட்டிக் கொண்டு அஜித் திரும்பி நிற்பது போல ஒரு படம் இடம் பெற்றுள்ளது.

Money Money Money !!
Its all about the Money ?

#KasethanKadavulada out tomorrow at 2 pm

Stay Tuned
#ThunivuSecondSingle

Twitter

#ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory

#Ajithkumar #HVinoth

@boneykapoor @zeestudios_ @bayviewprojoffl @redgiantmovies @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa @manjuwarrier4 @nirav_dop @ghibranofficial @anirudhofficial #Milan @supremesundar @editorvijay #Kalyan #AnuVardhan @premkumaractor #MSenthil @suthanvfx #CSethu #SameerPandit @vaisaghofficial @anandkumarstill @gopiprasannaa @gmsundar_ @prorekha @donechannel1 @lycaproductions @zeemusicsouth @thunivuthefilm

விஜய் ஹீரோயிசம்.. உதயநிதிக்கு வாழ்த்து.. பெண்களுக்கான படம்.. ‘துணிவு’ வேண்டும்.; பார்த்திபன் பளிச் பதில்

விஜய் ஹீரோயிசம்.. உதயநிதிக்கு வாழ்த்து.. பெண்களுக்கான படம்.. ‘துணிவு’ வேண்டும்.; பார்த்திபன் பளிச் பதில்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகத் திறமை கொண்டிருந்தாலும் பார்த்திபனுக்கு அடையாளமாக சொல்லப்படுவது அவரது நக்கல் நையாண்டி கலந்த கவிதைத்தனமான பேச்சு தான்.

இவர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

வாரிசு, துணிவு.. எந்தப் படத்தை முதலில் பார்ப்பீர்கள் ? என்ற கேள்விக்கு, “வாரிசு படத்தை பார்ப்பேன் என சொல்வதற்கு ஒரு துணிவு வேண்டும்” என்றார்.

வாரிசு போன்ற பிரபலமான படங்களுக்கு பிரச்சினை வந்தால்தான் அந்தப் படம் இன்னும் பிரபலமாகும். பிரச்சினையை தாண்டி விஜய் எப்படி வருகிறார் என்பதும் ஒரு ஹீரோயிசம்.

அதன் பின்னர்..

‘வாரிசு என்ற ஒரே காரணத்துக்காக உதயநிதியை ஒதுக்கக் கூடாது. அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது. அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறேன். அமைச்சர் வளர்ந்து முதலமைச்சர் ஆக வேண்டும்.

ஐஎம்டிபி ரேட்டிங்கில் தென்னிந்தியப் படங்கள் முதலிடத்தைப் பிடித்து இருப்பது மகிழ்ச்சி.

விரைவில் பெண்களை மையமாக வைத்து பெண்களின் சக்தி குறித்து ஒரு படம் எடுக்கிறேன். தற்போது கதை ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு பார்த்திபன் பதிலளித்தார்.

ஷாருக் – தீபிகா இணைந்த ‘பதான்’ படத்திற்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு.; காவி கவர்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

ஷாருக் – தீபிகா இணைந்த ‘பதான்’ படத்திற்கு பிரகாஷ்ராஜ் ஆதரவு.; காவி கவர்ச்சிக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பாலிவுட்டில் ஷாருக்கான் – தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள படம், ‘பதான்’.

சென்னை எக்ஸ்பிரஸ் ஜோடி இந்த படத்திலும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவான நிலையில் ‘பேஷரம் ரங்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது.

அதன்பிறகு தான் வட இந்தியாவில் சர்ச்சை எழுந்தது.

நாயகன் ஷாருக், பச்சை நிற உடை அணிந்தும் நாயகி தீபிகா காவி நிற பிகினியில் கவர்ச்சியாக உடையணிந்து இருந்தனர்.

எனவே காவி நிறம் அவமதிக்கப் பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இவருக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தைரியமாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், அயோத்தியின் ஹனுமன் காரி மட தலைவர் ராஜு தாஸ் என்பவர் தன் எதிர்ப்பை கடுமையாக தெரிவித்துள்ளார்.

அவர் ‘‘இந்த காவி உடை கவர்ச்சி மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘பதான்’ எங்கெங்கு திரையிடப்படுகிறதோ அந்த தியேட்டர்களை தீயிட்டு கொளுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ பட வசூலை முறியடிக்காத ‘அவதார் 2’

இந்தியாவில் ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ பட வசூலை முறியடிக்காத ‘அவதார் 2’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2009ல் உலகெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்று உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த படம் ‘அவதார்’.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்த இந்த படம் அப்போதே ரூ.1000 கோடி செலவில் உருவானது என கூறப்பட்டது.

தற்போது இதன் இரண்டாம் பாகத்தை (அவதார் 2) உருவாக்கிய ஜேம்ஸ் கேமரூன் இந்த படத்தை நேற்று டிசம்பர் 16ல் உலகம் முழுவதும் திரையிட்டு இருந்தார்.

கிட்டத்தட்ட 160 மொழிகளில் 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரம்மாண்டமாக இந்த படம் ரிலீசானது.

3டியில் உருவாக்கப்பட்ட இந்த படத்தைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் வசூல் குறித்து விவரங்கள் வெளியாகி உள்ளது.

இந்திய அளவில் மட்டும் ரூ. 50 கோடியை ஒரே நாளில் பெற்றுள்ளதாகவும் கனடா மற்றும் அமெரிக்காவின் ஒரே நாளில் ரூ. 130 கோடி வசூலித்து உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அதே சமயம் 2019ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ் என்ட் கேம்’ படத்தின் ரூ.65 கோடி வசூலை இந்தியாவில் அவதார் 2 முறியடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

More Articles
Follows