தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
உலகையே அச்சுறுத்தி வரும் கொடிய வைரசாக கொரோனா உருவெடுத்து பல உயிர்களை கொன்று வருகிறது.
இதனால் உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை 6,412 பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 678 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவம், 33 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ம் தேதி பிரதமர் மோடி ஊரடங்கு நிலையை அமல்படுத்தினார்.
21 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
வருகிற ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடையவுள்ளது.
வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீடிக்க கோரிக்கை விடுத்துள்ளன.
ஓரிரு தினங்களுக்கு முன் நடந்த (ஏப்ரல் 8) அன்று நடந்த இந்தியளவில் அனைத்துக் கட்சிகள் கூட்டட்திலும், ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டன.
இந்த நிலையில், நாளை ஏப்ரல் 11-ம் தேதி மீண்டும் அனைத்து மாநில முதல்வர்கள் உடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
ஏற்கனவே, இரண்டு முறை அவர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், இம்முறை ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இதுவரை ஒரு சில மாநிலங்களில் ஊரடங்கை உத்தரவை ஏப்ரல் 31 வரை நீடித்து ஒரு சில மாநில முதலமைச்சர்கள் அமல்படுத்தியுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் நீடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
ஒடிசாவை தொடர்ந்து பஞ்சாபில் நீடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் தெரிவித்துள்ளர்.
ஜார்க்கண்டிலும் நீடிப்பு என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.
புதுவையில் ஊரடங்கை நீட்டிக்க பிரதமா் மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்பட வேண்டும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரிந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் மாவட்ட வாரியாக விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன
நாளை பிரதமர் என்ன அறிவிக்கப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Indian States want to extend corona virus lock down What Modi will decide?