தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா என்ற கொடிய வைரசால் எந்த வயதினராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு, பகல் பாராமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றி வருகின்றனர்.
இதனால் கொரோனா தடுப்பூசிக்கும் அது தொடர்பான மருந்துக்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவின் பிரபல யோகா குரு ராம்தேவ் என்பவர், நவீன மருத்துவத்துவத்தையும், (அலோபதி) மருத்துவர்களையும் அவமதிக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்.. “நவீன மருத்துவமான அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர்
அலோபதி முட்டாள்தனமானது. ரெம்டெசிவிர், பிளாஸ்மா தெரபி் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்த இருந்து தவறிவில்லை. ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.
இந்த நிலையில் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
“பாபா ராம்தேவின் கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.
இதற்கு முன்பே அவர் சுகாதாரத் துறை அமைச்சர் முன்னிலையில் நவீன மருத்துவர்களை கொலைகாரர்கள் என பாபா பேசினார்.
பாபா ராம்தேவும், அவரது கூட்டாளி பாலகிருஷ்ணாவும் உடல்நிலை சரியில்லாத போது அலோபதி சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.
பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று நவீன மருத்துவ வசதிகளை கலைத்துவிட வேண்டும், அல்லது அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.”
இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
Indian medical council against Baba Ramdev