தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர்.
மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி.
அவர் பேசும்போது.. இந்தியாவில் ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் அதிவேகமாக கொரோனா உயரும் நாடாக இந்தியா உள்ளது. நாம் இப்போதுதான் ஊரடங்கை நீக்குகிறோம்.
ஊரடங்கின் நோக்கமும், தேவையும் படு தோல்வியடைந்துள்ளது. அதன் விளைவை நம் இந்தியா சந்தித்து வருகிறது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
India facing Corona lock down failure Rahul Gandhi slams Modi